4. நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பில் என்றது முத்துக்களை யொத்த வெண்மையான ஒளியையுடைய பரந்த மணற்பிரதேசத்தில் எ-று.
வெண்மையும், ஒண்மையும், குளிர்த்தியும், உயர்த்தியும், தூய்மையும், அருமையும் முதலிய சிறப்பால் நித்திலத்தன்ன என்றார். வெண்மணற் பரப்பு என்றது ச்வேதத்வீபம் எ-று. இது, திருப்பாற்கடலின் வடகரையிலுள்ள மஹா பரிசுத்தஸ்தலவிசேஷம். திருப்பாற்கடல் கொழித்த நித்திலத்திற்கும் இப்பரப்பில் வெண்மணற்கும் வேற்றுமை காண அரியதாய் ஒரே சுவேதமயமா யுண்மையால் இவ்வாறு கூறப்பட்டது. இதனைப் பாரதம் சாந்திபருவம் (343) 'பாற்கடலின் வடபாகத்திற் பேரொளி நிறைந்த ச்வேதத்வீபம் இருப்பது; அங்குள்ள மக்கள் சந்திரனையொத்த காந்தியினர்; நாராயண பராயணர்; அவ்வன்பர் புருஷோத்தமனை ஏகாந்த பாவனையாலடைந்தவர்; பொறிகளால் வேறொன்றும் நுகராதவரும், உண்ணாதவரும், அசைவற்றவரும், நறுமணங்கமழ்பவரும், ஏகாந்திகளு மாவர்', என வருவனவற்றா லறிக. இந்த த்வீபத்திற்கு நாரதமஹருஷியானவர் தெய்வகிருபையாற் சென்று ஈங்குள்ள அநிருத்தமூர்த்தியைப் பலபடியாக ஸ்துதித்ததும் பரமைகாந்திகளைத் தரிசித்து ஆச்சரியமடைந்ததும் பிறவும் அப்பருவத்தே கண்டு கொள்க. இதனை வைகுண்டமாகவும் உபசரித்து வழங்குவர். ச்வேத த்வீபம் = வைகுண்டம் என்று ச்ரிபாகவதத்தில் ச்ரிதர ஸ்வாமிகள் வ்யாக்யானமிட்டார்.
இனி ஸஹஸ்ரநாம த்யான சுலோகத்தில் 'க்ஷீரோதந்வத்ப்ரதேசே' என்பதில் திருப்பாற்கடல் வடகரையில் மணி விளக்கெடுக்கும் மணற்பரப்பில் நித்திலமாலையணிந்த அணையில் இம்மூர்த்தி எழுந்தருளி இருப்பது கூறுதலான், அதற்கியைய நித்திலப் பரப்பில் எனவும் அன்ன வெண்மணற் பரப்பில் எனவும் கூறினு மமையும். அன்ன வெண்மணல் - அத்தகைய வெண்மணல்.
***
5. வேரும் வித்தும் இன்றி = தான் நிலைபெறுதற்குக் காரணமான மூலமும், தானுண்டாதற்குக் காரணமான பீஜமும் தானேயன்றி வேறில்லாமல் எ-று.
வினைகளையே வேராகவும், அவ்யத்தத்தை வித்தாகவும், பிறவிகளைக் கிளைகளாகவும் கொண்ட ஸம்ஸார வ்ருக்ஷத்தின் (ச்ரிகீதை; விஷ்ணு புராணம் ௭ - ஆம் அத்யாயம்) இது வேறாய பரப்ருஹ்மவ்ருக்ஷம் என்பது தோன்ற வேரும் வித்தும் இன்றி என்றார். எல்லாப் பொருட்குந் தானே வேரும் வித்துமாகு மென்றவாறு. இத்தன்மையை,
'வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற
கார்முகில் போல்வண்ணன்' (திருவாய்மொழி, 2,8,10)
என்று பணித்தலானறிக. ச்ரி கீதையிலும் 'பீஜம்மாம் ஸர்வ பூதாநாம்' (எல்லாப் பிராணிகட்கும் வித்தாகிய என்னை) என்பதனால் எல்லா பிராணிகட்குந்தானே வித்தாயிருத்தலைப் பகவான் வெளியிட்டருளினான். 'எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்' 'தானோருருவே தனிவித்தாய்' (திருவாய்மொழி, 1 - 5 - 2, 4) என்று பணித்தல் காண்க. ச்ரி விஷ்ணுபுராணத்தில் ஸம்ஸார வ்ருக்ஷத்திற்கு அவ்யக்தத்தை வித்தென்று கொண்டு, வித்துண்டாதற்கு ஆகாயம் காலம் முதலிய காரணமாதல் போல, அஃதுண்டாதற்கு ச்ரி ஹரிபகவான் காரணன் என்பர் (ஏழாம் அத்யாயம் பார்க்க). இதனால் அவ்யக்தத்தின் பரிணாமத்திற்கு இறைவன் காரணனாதல் அறியலாம்.
இந்தப் பதிவில் எழுதப்படும் யாவும் முன்னோர் நூல்களின் ஒருங்குறியாக்கங்களே. எவையும் என் சொந்த எழுத்துகள் இல்லை. ஆகையால் அனைத்தும் எனக்கு ஏற்புடைய கருத்துகள் இல்லை!
Friday, June 5, 2009
Thursday, May 28, 2009
அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 3
ஈருயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து என்புழி, ஈருயிர் மருங்கின் என்பது இருவகைப்பட்ட உயிர்களின் பக்கத்தில் எ-று.
மோக்ஷாநந்தத்திற்கு உபகாரமாகிய தெய்வ ஸம்பத்தையுடைய உயிர் என்றும், ஸம்ஸார பந்தத்திற்கு உபகாரமாகிய ஆஸுர ஸம்பத்தையுடைய உயிரென்றும் வகுக்கப்பட்ட இருவகை உயிர்களின் பக்கலில் என்று கொள்க. ச்ரிகீதை பதினாறாம் அத்யாயத்தில் 'இவ்வுலகிற் பிராணிகளின் ஸ்ருஷ்டி, தேவர்களின் ஸ்வபாவ முள்ளதென்றும், அஸுரர்களின் ஸ்வபாவமுள்ளதென்றும் இருவகைப்படும்' என்று பகவான் அருளிச்செய்ததை ஈண்டைக்கு நோக்கிக் கொள்க. இனி ஈருயிரென்றது ச்ரிகீதை ஏழாம் அத்யாயத்தில் பகவானைத் தொழாரும் தொழுவாருமாகிய 'துஷ்க்ருதிந: ஸுக்ருதிந:' என்று கூறப்பட்ட இருவகை உயிர்களை எனினுமாம். தொழாராகிய துஷ்க்ருதிகள் நராதமர், மாயை கவர்ந்த மதியினர், அஸுரஸ்வபாவமுள்ளவர், மூடர் என்று நால்வகையினர் எனவும், தொழுவாராகிய ஸுக்ருதிகள் ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தி, ஞானி என நால்வகையினர் எனவும், இவருள் ஞானி அத்யர்த்த ப்ரியனான மேன்மையனெனவும், அப்பெருந்தகையோன் கிடைத்தற்கரியோனெனவும், அவனே ஸர்வம் வாஸுதேவனென்னும் ஞானவான் எனவும் அருளிச் செய்தலால் தொழாரும் தொழுவாருமாகிய இருவகை உயிர்களின் பக்கலில் என்றாலும் பொருந்தும்.
'ஆருயிர் தொகுத்து' என்றது கிடைத்தற்கரிய உயிர்களாகிய தெய்வஸம்பத்து நிறைந்த ஞானிகளாகிய பரமைகாந்திகளைத் தன்னடிநீழலிற் குழாங்கொளச் செய்து என்றவாறாம். ஆருயிர் - 'ஸமஹாத்மா ஸுதுர்ல்லப:' என்றபடி தனக்குங் கிடைக்கரிய மஹாத்மாக்கள் எ-று. வாஸுதேவ தருச்சாயையை விட்டுப் புறம்போகாத பெருந்தகையார் அவரே என்க. மஹாத்மா என்பதே ஆருயிர் எனப்பட்டதெனினும் பொருந்தும். தொகுத்து என்றதனால் கிடைத்தற்கரிய இப்பரமைகாந்திகளைத் தன்னடி நீழலில் திரள்வித்தது பகவத் ப்ரயத்நமென்று காட்டியவாறு. ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய முடிவில் 'அத்யர்த்தப் பிரியம் ஞாநிநம் லப்த்வா' (இவ்வளவென்று சொல்லற்கரிய ப்ரீதியுடையவனாகிய ஞானியைத் தன் பேறாக அடைந்து) என்று ச்ரி பாஷ்யகாரர் உரைத்தருளுதலான் அளவிடப்படாத பிரியனாகிய ஞானியைப் பரதெய்வம் தன் லாபமாக அடைதல் கருத்தல்லது 'ஞானி பரதெய்வத்தை அடைந்து' என்பது ஆழ்வார் கருத்தாகாமை கண்டுகொள்க.
இனி, ஈண்டு மருங்கு என்றது சுற்றம் எனக்கொண்டு, இருவகையுயிராயுள்ள சுற்றத்திற் கிடைத்தற்கரிய தன் ஆத்மஸமாநரான அரியஞானிகளைத் தொகுத்து எனினுமாம். 'ஞானீ த்வாத்மைவ மேமதம்' (ஞானியோ என்னுயிரே யென்பது என் கொள்கை) என்னும் ச்ரி கீதையால் ஞானி பகவானுக்கு ஆத்மாவாதல் தெளியலாம். தீயவுயிரையும் சுற்றமென்றது, வெறுக்கின்ற அவர் பாலும் உறைதலானும் அவரையும் சன்மசன்மாந்தரங் காத்துச் சேறலானும், அவர்க்கும் அருள இருக்குந் தாயும் தந்தையும் தானாதலானும், அவரையும் மகவென்று கருதித் திருத்தமுயறல் காட்டியவாறு. 'தாய் தந்தை எவ்வுயிர்க்குந் தான்' என் இவ்வாழ்வாரே அருளிச்செய்தலானிதனுண்மையுணர்க. 'பிதா மாதாச ஸர்வஸ்ய' என்பது மஹாபாரதம். சுத்தஸத்வநிஷ்டரான பரமைகாந்திகளைத் தொகுத்து நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பிற் றொன் மிகு பெருமரம் என இயைக்க. தொகுத்துப் பரப்பில் மிகு மரம் என்க.
மோக்ஷாநந்தத்திற்கு உபகாரமாகிய தெய்வ ஸம்பத்தையுடைய உயிர் என்றும், ஸம்ஸார பந்தத்திற்கு உபகாரமாகிய ஆஸுர ஸம்பத்தையுடைய உயிரென்றும் வகுக்கப்பட்ட இருவகை உயிர்களின் பக்கலில் என்று கொள்க. ச்ரிகீதை பதினாறாம் அத்யாயத்தில் 'இவ்வுலகிற் பிராணிகளின் ஸ்ருஷ்டி, தேவர்களின் ஸ்வபாவ முள்ளதென்றும், அஸுரர்களின் ஸ்வபாவமுள்ளதென்றும் இருவகைப்படும்' என்று பகவான் அருளிச்செய்ததை ஈண்டைக்கு நோக்கிக் கொள்க. இனி ஈருயிரென்றது ச்ரிகீதை ஏழாம் அத்யாயத்தில் பகவானைத் தொழாரும் தொழுவாருமாகிய 'துஷ்க்ருதிந: ஸுக்ருதிந:' என்று கூறப்பட்ட இருவகை உயிர்களை எனினுமாம். தொழாராகிய துஷ்க்ருதிகள் நராதமர், மாயை கவர்ந்த மதியினர், அஸுரஸ்வபாவமுள்ளவர், மூடர் என்று நால்வகையினர் எனவும், தொழுவாராகிய ஸுக்ருதிகள் ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தி, ஞானி என நால்வகையினர் எனவும், இவருள் ஞானி அத்யர்த்த ப்ரியனான மேன்மையனெனவும், அப்பெருந்தகையோன் கிடைத்தற்கரியோனெனவும், அவனே ஸர்வம் வாஸுதேவனென்னும் ஞானவான் எனவும் அருளிச் செய்தலால் தொழாரும் தொழுவாருமாகிய இருவகை உயிர்களின் பக்கலில் என்றாலும் பொருந்தும்.
'ஆருயிர் தொகுத்து' என்றது கிடைத்தற்கரிய உயிர்களாகிய தெய்வஸம்பத்து நிறைந்த ஞானிகளாகிய பரமைகாந்திகளைத் தன்னடிநீழலிற் குழாங்கொளச் செய்து என்றவாறாம். ஆருயிர் - 'ஸமஹாத்மா ஸுதுர்ல்லப:' என்றபடி தனக்குங் கிடைக்கரிய மஹாத்மாக்கள் எ-று. வாஸுதேவ தருச்சாயையை விட்டுப் புறம்போகாத பெருந்தகையார் அவரே என்க. மஹாத்மா என்பதே ஆருயிர் எனப்பட்டதெனினும் பொருந்தும். தொகுத்து என்றதனால் கிடைத்தற்கரிய இப்பரமைகாந்திகளைத் தன்னடி நீழலில் திரள்வித்தது பகவத் ப்ரயத்நமென்று காட்டியவாறு. ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய முடிவில் 'அத்யர்த்தப் பிரியம் ஞாநிநம் லப்த்வா' (இவ்வளவென்று சொல்லற்கரிய ப்ரீதியுடையவனாகிய ஞானியைத் தன் பேறாக அடைந்து) என்று ச்ரி பாஷ்யகாரர் உரைத்தருளுதலான் அளவிடப்படாத பிரியனாகிய ஞானியைப் பரதெய்வம் தன் லாபமாக அடைதல் கருத்தல்லது 'ஞானி பரதெய்வத்தை அடைந்து' என்பது ஆழ்வார் கருத்தாகாமை கண்டுகொள்க.
இனி, ஈண்டு மருங்கு என்றது சுற்றம் எனக்கொண்டு, இருவகையுயிராயுள்ள சுற்றத்திற் கிடைத்தற்கரிய தன் ஆத்மஸமாநரான அரியஞானிகளைத் தொகுத்து எனினுமாம். 'ஞானீ த்வாத்மைவ மேமதம்' (ஞானியோ என்னுயிரே யென்பது என் கொள்கை) என்னும் ச்ரி கீதையால் ஞானி பகவானுக்கு ஆத்மாவாதல் தெளியலாம். தீயவுயிரையும் சுற்றமென்றது, வெறுக்கின்ற அவர் பாலும் உறைதலானும் அவரையும் சன்மசன்மாந்தரங் காத்துச் சேறலானும், அவர்க்கும் அருள இருக்குந் தாயும் தந்தையும் தானாதலானும், அவரையும் மகவென்று கருதித் திருத்தமுயறல் காட்டியவாறு. 'தாய் தந்தை எவ்வுயிர்க்குந் தான்' என் இவ்வாழ்வாரே அருளிச்செய்தலானிதனுண்மையுணர்க. 'பிதா மாதாச ஸர்வஸ்ய' என்பது மஹாபாரதம். சுத்தஸத்வநிஷ்டரான பரமைகாந்திகளைத் தொகுத்து நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பிற் றொன் மிகு பெருமரம் என இயைக்க. தொகுத்துப் பரப்பில் மிகு மரம் என்க.
Monday, May 25, 2009
அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 2
2. பிண்டம் பூத்த பேரெழி லொருமை என்பது சராசர ரூபமான பிராணிகள் மலர்தற்குக் காரணமான பெருமையோடு கூடிய நலத்தையும் ஏகத்வத்தையுமுடைய எ-று.
ஆகிப்பூத்த பேரெழில் ஒருமை மரம் என இயைக்க. பூத்தமரம் என்பது பூத்தற்குக் காரணமான மரம் என்றவாறு; 'தாழ்ந்த இயல்பின்மை' (திருக்குறள் - 903) 'நிற்புகழ்ந்த யாக்கை' (பதிற்றுப்பத்து, 44, 8) என்புழிப்போல. பிண்டம் - சராசரப்பிராணிகளின் தொகுதி. இவ்வாழ்வார் பரதெய்வத்தைத் தொன்மிகுபெருமரம் என்று வ்ருக்ஷமாக உருவகப்படுத்துகின்றாராதலின், அதற்கியைய வ்ருக்ஷகாரியத்தாற் பூத்த என்று ஏகதேசரூபகமுகத்தாற் பிராணி ஸமுதாயத்தை மலர்களாக்கினார். ச்ரி ஸஹஸ்ர நாமத்தில் 'புஷ்பஹாஸ:' என்னும் திருநாமத்திற்கு ச்ரிசங்கர பகவத்பாதர் 'பூவரும்பு மலர்வது போலப் பிரபஞ்சரூபமாக மலர்பவன்' என்று பொருள் கூறினார். இதனாற் பூத்தது பிரபஞ்சரூபமென்று துணியலாகும். பெருமை - பரமாணுவை அண்டபிண்ட ரூபமான பிரபஞ்சமாக்கிச் செயற்கரிய செய்யும் ஸங்கல்ப விசிஷ்டனாதற் றன்மை. இதனாற் பரதெய்வத்தின் ஸங்கல்ப விசிஷ்டவேஷமே உலகிற்கு நிமித்தகாரணமாதல் காட்டியவாறாம். எழில் - ஞானசக்தியாதி எல்லா நலங்களும்; 'எழிலளந்தங் கெண்ணற் கரியானை' (மூன்றாம்திரு. 3) என்று பணிப்பர். ('பூ நலம்' (பரிபாடல் - 16) என்புழிப் பரிமேலழகர் பூவினாகிய அழகு எனப் பொருள் கூறலானுமுணர்க). இதனாற் பரதெய்வத்தின் ஞான சக்தியாதி விசிஷ்டவேஷமே உலகிற்கு ஸஹகாரிகாரணமாதல் காட்டியவாறாம். ஒருமை - அவ்வண்ட பிண்ட ரூபமான பிரபஞ்சத்தோடு கலந்தொன்றாயுள்ள தன்மை. இதனாற் பரதெய்வத்தின் சிதசித்விசிஷ்டவேஷமே உலகிற்கு உபாதான காரணமாதல் காட்டியவாறாம். இங்ஙனம் திரிவித காரணமும் பரதெய்வமேயாகுமென்பது தோன்றப் பேரெழிலொருமையால் விசேடித்தார். பூத்த மரம் என்புழிப் பூத்த பெருமையும் எழிலும் ஒருமையும் மரத்தின்கண்ணே நிலைபெறுதலெளிதி லுணரத் தகும். மரத்தின் அவயவமாகிய கொம்பு, இலை, பூ, காய், கனி முதலிய எவையும் மரத்தின் வேறாகாத் தன்மையால் ஒருமை நன்கறியலாகும். இவ்வொருமையினையே கம்பநாடர்
'அம்போ ருகனா ரரனா ரறியார்
எம்போ லியரெண் ணுறினென் பலவாம்
கொம்போ டடைபூக் கனிகா யெனினும்
வம்போ மரமொன் றெனும்வா சகமே'
என்பதனால் இனிது விளக்கினார். இவர்க்கும் இவ்வாழ்வாருடைய இத்திருப்பாட்டு நோக்கென்பதும் பொருந்தும். 'சங்கக் குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை யானை' எனச் சடகோபரந்தாதியில், ஆழ்வார் சங்கம் வென்றருளிய செய்தியை வெளியிடுதலான் இஃது உணரலாம். ச்ரி பாகவதம் 'தருவினடியில் நீர்விடுவது அதன் கொம்பு கிளைகட்கு எங்ஙனமாகுமோ, அங்ஙனமே விஷ்ணுவின் ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது' (அத்-௫-௪௯) என்று கூறுதலான், மரமும் கிளைகளும் போலப் பரதெய்வமும் பிராணிகளு முண்மை நன்கறிந்துகொள்க. இந்தப் பாகவதத்தாற்கருதிய ஒருமையையே ஆழ்வார் திருவுளம் பற்றினாரென்பது, பூத்த என்னும் வினையாற் பிண்டங்களை மலர்களாக்கியதனாலும், அம்மலர்களை யுண்டாக்கிப் பரிபாலிக்குநிலையில் மலரின்வேறாகாத மரமாகப் பரதெய்வத்தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துணியலாம். இவ்வொருமை ரக்ஷ்யரக்ஷகபாவாதி ஸம்பந்தத்தாலுளதாவதல்லது ஸ்வரூப ஐக்யமாகாமை உய்த்துணர்ந்துகொள்க. 'பாரிடமாவானுந் தான்' (௪௨) என்னும் பெரியதிருவந்தாதித் தொடர்க்கு பெரியவாச்சான் பிள்ளையாசிரியர் 'ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தத்தால் ஐக்யம்; ஸ்வரூபத: அன்று' என்றுரைத்தவாற்றான் உணர்க. ரக்ஷகத்வத்தை இனிது நிறைவேற்றவே எங்குங்கலந்துறைதலை மேற்கொண்டனன் இறைவன் என்ப.
ஆகிப்பூத்த பேரெழில் ஒருமை மரம் என இயைக்க. பூத்தமரம் என்பது பூத்தற்குக் காரணமான மரம் என்றவாறு; 'தாழ்ந்த இயல்பின்மை' (திருக்குறள் - 903) 'நிற்புகழ்ந்த யாக்கை' (பதிற்றுப்பத்து, 44, 8) என்புழிப்போல. பிண்டம் - சராசரப்பிராணிகளின் தொகுதி. இவ்வாழ்வார் பரதெய்வத்தைத் தொன்மிகுபெருமரம் என்று வ்ருக்ஷமாக உருவகப்படுத்துகின்றாராதலின், அதற்கியைய வ்ருக்ஷகாரியத்தாற் பூத்த என்று ஏகதேசரூபகமுகத்தாற் பிராணி ஸமுதாயத்தை மலர்களாக்கினார். ச்ரி ஸஹஸ்ர நாமத்தில் 'புஷ்பஹாஸ:' என்னும் திருநாமத்திற்கு ச்ரிசங்கர பகவத்பாதர் 'பூவரும்பு மலர்வது போலப் பிரபஞ்சரூபமாக மலர்பவன்' என்று பொருள் கூறினார். இதனாற் பூத்தது பிரபஞ்சரூபமென்று துணியலாகும். பெருமை - பரமாணுவை அண்டபிண்ட ரூபமான பிரபஞ்சமாக்கிச் செயற்கரிய செய்யும் ஸங்கல்ப விசிஷ்டனாதற் றன்மை. இதனாற் பரதெய்வத்தின் ஸங்கல்ப விசிஷ்டவேஷமே உலகிற்கு நிமித்தகாரணமாதல் காட்டியவாறாம். எழில் - ஞானசக்தியாதி எல்லா நலங்களும்; 'எழிலளந்தங் கெண்ணற் கரியானை' (மூன்றாம்திரு. 3) என்று பணிப்பர். ('பூ நலம்' (பரிபாடல் - 16) என்புழிப் பரிமேலழகர் பூவினாகிய அழகு எனப் பொருள் கூறலானுமுணர்க). இதனாற் பரதெய்வத்தின் ஞான சக்தியாதி விசிஷ்டவேஷமே உலகிற்கு ஸஹகாரிகாரணமாதல் காட்டியவாறாம். ஒருமை - அவ்வண்ட பிண்ட ரூபமான பிரபஞ்சத்தோடு கலந்தொன்றாயுள்ள தன்மை. இதனாற் பரதெய்வத்தின் சிதசித்விசிஷ்டவேஷமே உலகிற்கு உபாதான காரணமாதல் காட்டியவாறாம். இங்ஙனம் திரிவித காரணமும் பரதெய்வமேயாகுமென்பது தோன்றப் பேரெழிலொருமையால் விசேடித்தார். பூத்த மரம் என்புழிப் பூத்த பெருமையும் எழிலும் ஒருமையும் மரத்தின்கண்ணே நிலைபெறுதலெளிதி லுணரத் தகும். மரத்தின் அவயவமாகிய கொம்பு, இலை, பூ, காய், கனி முதலிய எவையும் மரத்தின் வேறாகாத் தன்மையால் ஒருமை நன்கறியலாகும். இவ்வொருமையினையே கம்பநாடர்
'அம்போ ருகனா ரரனா ரறியார்
எம்போ லியரெண் ணுறினென் பலவாம்
கொம்போ டடைபூக் கனிகா யெனினும்
வம்போ மரமொன் றெனும்வா சகமே'
என்பதனால் இனிது விளக்கினார். இவர்க்கும் இவ்வாழ்வாருடைய இத்திருப்பாட்டு நோக்கென்பதும் பொருந்தும். 'சங்கக் குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை யானை' எனச் சடகோபரந்தாதியில், ஆழ்வார் சங்கம் வென்றருளிய செய்தியை வெளியிடுதலான் இஃது உணரலாம். ச்ரி பாகவதம் 'தருவினடியில் நீர்விடுவது அதன் கொம்பு கிளைகட்கு எங்ஙனமாகுமோ, அங்ஙனமே விஷ்ணுவின் ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது' (அத்-௫-௪௯) என்று கூறுதலான், மரமும் கிளைகளும் போலப் பரதெய்வமும் பிராணிகளு முண்மை நன்கறிந்துகொள்க. இந்தப் பாகவதத்தாற்கருதிய ஒருமையையே ஆழ்வார் திருவுளம் பற்றினாரென்பது, பூத்த என்னும் வினையாற் பிண்டங்களை மலர்களாக்கியதனாலும், அம்மலர்களை யுண்டாக்கிப் பரிபாலிக்குநிலையில் மலரின்வேறாகாத மரமாகப் பரதெய்வத்தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துணியலாம். இவ்வொருமை ரக்ஷ்யரக்ஷகபாவாதி ஸம்பந்தத்தாலுளதாவதல்லது ஸ்வரூப ஐக்யமாகாமை உய்த்துணர்ந்துகொள்க. 'பாரிடமாவானுந் தான்' (௪௨) என்னும் பெரியதிருவந்தாதித் தொடர்க்கு பெரியவாச்சான் பிள்ளையாசிரியர் 'ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தத்தால் ஐக்யம்; ஸ்வரூபத: அன்று' என்றுரைத்தவாற்றான் உணர்க. ரக்ஷகத்வத்தை இனிது நிறைவேற்றவே எங்குங்கலந்துறைதலை மேற்கொண்டனன் இறைவன் என்ப.
Friday, May 22, 2009
அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 1
1. அண்டகோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத்தினுடைய அரிய அணு வளர்ந்து என்றவாறு.
ஆகல் - வளர்தல்; பரிணமித்தல்; வளர்தற்குக் காரணமாகிய ஊழினை 'ஆகலூழ்' (திருக்குறள் - 372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு கொண்டது அணு என்பது வடநூற் கொள்கை (பாகவதம்). அண்டகோளத்து ஆரணு - அண்டகோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின்வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதிநிலை (இதுவே படைப்பிற்கு முன்னிலையுமாகும்) பரமாணுவே என்பதை ச்ரிபாகவதம் ௩-ஆம் ஸ்கந்தம் (௧௧ - ௧) 'பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியப்படுவது' என விளக்கியவாற்றான் உணர்க. மேற்படி ௩-ஆம் ஸ்கந்தம் ௧௧-ஆம் அத்தியாய முடிவில் 'ஐம்பது யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்மடங்கு அதிகமுள்ள விசேஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்டகோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடி யண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் ஸ்வரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரமம் எனவுங் கூறுகின்றனர்' என்று வருதலான் இதனுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பரதெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தாரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தைக் கூறுதல் கொண்டு எளிதிலறியப்படும். 'ஆகி' என்று பரிணமித்தல் கூறுதலான் இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுவுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக. 'அண்டகோளத்து ஆரணு' என்புழி அத்துச்சாரியை 'காமத்துக் காழில்கனி' (திருக்குறள் - 1191) என்புழிப்போல அல்வழிச்சாரியையாகக் கொண்டு அண்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக்காது. ஆகிப் பூத்த மரம் என இயையும்.
ஆகல் - வளர்தல்; பரிணமித்தல்; வளர்தற்குக் காரணமாகிய ஊழினை 'ஆகலூழ்' (திருக்குறள் - 372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு கொண்டது அணு என்பது வடநூற் கொள்கை (பாகவதம்). அண்டகோளத்து ஆரணு - அண்டகோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின்வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதிநிலை (இதுவே படைப்பிற்கு முன்னிலையுமாகும்) பரமாணுவே என்பதை ச்ரிபாகவதம் ௩-ஆம் ஸ்கந்தம் (௧௧ - ௧) 'பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியப்படுவது' என விளக்கியவாற்றான் உணர்க. மேற்படி ௩-ஆம் ஸ்கந்தம் ௧௧-ஆம் அத்தியாய முடிவில் 'ஐம்பது யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்மடங்கு அதிகமுள்ள விசேஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்டகோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடி யண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் ஸ்வரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரமம் எனவுங் கூறுகின்றனர்' என்று வருதலான் இதனுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பரதெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தாரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தைக் கூறுதல் கொண்டு எளிதிலறியப்படும். 'ஆகி' என்று பரிணமித்தல் கூறுதலான் இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுவுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக. 'அண்டகோளத்து ஆரணு' என்புழி அத்துச்சாரியை 'காமத்துக் காழில்கனி' (திருக்குறள் - 1191) என்புழிப்போல அல்வழிச்சாரியையாகக் கொண்டு அண்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக்காது. ஆகிப் பூத்த மரம் என இயையும்.
ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்
அண்டகோள மெய்ப்பொருள்
தற்சிறப்புப்பாயிரம்
சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் - பாரிற்
றெருள்காட்டும் வேதச் செழுந்தமிழ்நா வீறன்
அருள்காட்ட மெய்ம்மை யறிந்து.
---------*---------
ஆழ்வார்
சங்கத்தார்க்கு எழுதிய அகவல்
----------*------------
அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
5 வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
10 யறுகாற் குறவ னீரற விளைக்குஞ்
செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
15ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.
இது 'மயர்வற மதிநலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாங்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் 'அண்டகோ ளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்' என வருங் கடவுள் வணக்கப் பாடலால் (13) துணியலாகும்.
இதன் பொருள்.
(அடுத்த இடுகையிலிருந்து பொருளுரை தொடங்கும்).
தற்சிறப்புப்பாயிரம்
சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் - பாரிற்
றெருள்காட்டும் வேதச் செழுந்தமிழ்நா வீறன்
அருள்காட்ட மெய்ம்மை யறிந்து.
---------*---------
ஆழ்வார்
சங்கத்தார்க்கு எழுதிய அகவல்
----------*------------
அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
5 வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
10 யறுகாற் குறவ னீரற விளைக்குஞ்
செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
15ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.
இது 'மயர்வற மதிநலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாங்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் 'அண்டகோ ளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்' என வருங் கடவுள் வணக்கப் பாடலால் (13) துணியலாகும்.
இதன் பொருள்.
(அடுத்த இடுகையிலிருந்து பொருளுரை தொடங்கும்).
Thursday, May 21, 2009
அண்டகோள மெய்ப்பொருள் - முகவுரை
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
முகவுரை
'அண்ட கோளத்தாரணு' என்ற பாசுரம், 'ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்' என்ற தலைக்குறிப்புடன், ஆழ்வார் திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதல் என்னாற் காணப்பட்டது. அதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்காலத்துப் பொருள் காண்டல் அரிதாயிருந்தமையால் 'இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை' என்ற குறிப்பும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப் பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில், சிலவாண்டுகட்குமுன் அதன் உண்மைப்பொருள் இஃதென்பதை உணரலாயினேன்.
அப்பாசுரத்தின் சொற்றொடர்ப் பொலிவினையும், அதனுளடங்கிய அரிய பெரிய வடமொழிப்பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அஃது ஆழ்வார் அருளிச் செயலாதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத் தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மைப் பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியைக் குருபரம்பரை நூல்களும், 'அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்' (கடவுள் வணக்கம், 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகத் தெரியும் கூடற்புராண ஆசிரியரும் கூறுவது, ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.
இவ்வரிய பெரிய பாசுரத்தை யான் பலகாலும் சிந்தித்துக் கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபந்யஸிக்கப் பெற்ற இப்பாசுரார்த்தத்தைக் கேட்டு மகிழ்ந்த சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேதவேதாந்த வர்த்தனீ மஹாஸபையார், இதனைப் பலரும் அறிய வெளியிடவிரும்பியவாறு, அச்சபையின் பிரசுரமாக இஃது இப்போது வெளியிடப்பெறுகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய, திருவல்லிக்கேணி: ஸ்ரீபார்த்தசாரதி சந்நிதி டிரஸ்டிகளில் ஒருவரான ராவ்பஹதூர் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் செட்டியார் அவர்கட்கும், அம்மஹாசபையார்க்கும் என் மனமார்ந்த பெருநன்றி உரியதாகும்.
இங்ஙனம்,
ரா. இராகவையங்கார்.
முகவுரை
'அண்ட கோளத்தாரணு' என்ற பாசுரம், 'ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்' என்ற தலைக்குறிப்புடன், ஆழ்வார் திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதல் என்னாற் காணப்பட்டது. அதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்காலத்துப் பொருள் காண்டல் அரிதாயிருந்தமையால் 'இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை' என்ற குறிப்பும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப் பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில், சிலவாண்டுகட்குமுன் அதன் உண்மைப்பொருள் இஃதென்பதை உணரலாயினேன்.
அப்பாசுரத்தின் சொற்றொடர்ப் பொலிவினையும், அதனுளடங்கிய அரிய பெரிய வடமொழிப்பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அஃது ஆழ்வார் அருளிச் செயலாதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத் தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மைப் பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியைக் குருபரம்பரை நூல்களும், 'அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்' (கடவுள் வணக்கம், 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகத் தெரியும் கூடற்புராண ஆசிரியரும் கூறுவது, ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.
இவ்வரிய பெரிய பாசுரத்தை யான் பலகாலும் சிந்தித்துக் கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபந்யஸிக்கப் பெற்ற இப்பாசுரார்த்தத்தைக் கேட்டு மகிழ்ந்த சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேதவேதாந்த வர்த்தனீ மஹாஸபையார், இதனைப் பலரும் அறிய வெளியிடவிரும்பியவாறு, அச்சபையின் பிரசுரமாக இஃது இப்போது வெளியிடப்பெறுகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய, திருவல்லிக்கேணி: ஸ்ரீபார்த்தசாரதி சந்நிதி டிரஸ்டிகளில் ஒருவரான ராவ்பஹதூர் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் செட்டியார் அவர்கட்கும், அம்மஹாசபையார்க்கும் என் மனமார்ந்த பெருநன்றி உரியதாகும்.
இங்ஙனம்,
ரா. இராகவையங்கார்.
அண்டகோள மெய்ப்பொருள் - முதல் பக்கம்
அண்டகோள மெய்ப்பொருள்
ஸேது ஸம்ஸ்தான மஹாவித்வானும்
பாஷா கவிசேகரரும்
அண்ணாமலை சருவகலாசாலைத் தமிழாராய்ச்சியாளருமாகிய
ரா. இராகவையங்கார்
எழுதியது
சென்னைத் திருவல்லிக்கேணி
ஸ்ரீ வேதவேதாந்தவர்த்தனீ மகாசபையாரால்
வெளியிடப்பெற்றது
1934.
விலை அணா 4
ஸேது ஸம்ஸ்தான மஹாவித்வானும்
பாஷா கவிசேகரரும்
அண்ணாமலை சருவகலாசாலைத் தமிழாராய்ச்சியாளருமாகிய
ரா. இராகவையங்கார்
எழுதியது
சென்னைத் திருவல்லிக்கேணி
ஸ்ரீ வேதவேதாந்தவர்த்தனீ மகாசபையாரால்
வெளியிடப்பெற்றது
1934.
விலை அணா 4
Subscribe to:
Posts (Atom)