நம்மாழ்வார் நந்தமிழ் நாட்டில் தோன்றினார்; தோன்றிப் பிறவியாலாய பயனைப் பெற்றார்; அவர், எல்லாவற்றிற்கும் வித்து இறை ஒன்றே என்னும் உண்மை கண்டார்; அவ்விறை எங்கும் இருத்தலை உணர்ந்தார்; எங்குமுள்ள அவ்விறையை அட்ட மூர்த்தமாகவும், இயற்கை வடிவாகவும், இயற்கைப்படமாகவும் கொண்டு வழிபட்டார்; இறை மூவர் முதல் என்பதையும் இறையை உணர்தற்குச் சமரச ஞானம் இன்றியமையாதது என்பதையும் தெளிந்தார். தாம் உணர்ந்து தெளிந்ததைப் பாட்டாக உலகுக்கு உதவினார். ஆழ்வார் பெற்ற பேறு மற்றவர்க்கும் பாட்டாகத் துணை செய்கிறது. இப்பேறுபெற்ற ஒருவரை ஈன்ற நாடு நந்தமிழ்நாடு. நம்மாழ்வார் அறிவால் - அன்பால் - வழிபாட்டால் - சமரசத்தால் - பாட்டால் - தமிழ்நாடு வளர்ந்தது. அந்நாடு இப்பொழுது எவ்வாறிருக்கிறது?
தமிழ்நாடே! ஆழ்வார் காலத்தில் நீ எந்நிலையில் இருந்தாய்? இப்பொழுது எந்நிலையில் இருக்கிறாய்? உனது அறிவும் அன்பும் பாட்டும் எங்கே சென்றன? உனக்கு எத்துணையோ இடுக்கண்கள் நேர்ந்தன. அவைகளையெல்லாம் ஒடுக்கி உன் நிலை குலையாதவாறு காத்துக் கொண்டாய். இப்பொழுது நேர்ந்துவரும் இடுக்கண்களால் உன் நிலை குலையுமோ என்ற அச்சம் அடிக்கடி நிகழ்கிறது. உன் வழக்க ஒழுக்கங்கள் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன. தமிழ் நூலாராய்ச்சி குன்றி வருகிறது. உன் வயிற்றில் பாவலர் தோன்றுவதைக் காணோம். நம்மாழ்வார் போன்ற பெரியார் பலர் உன் பால் உதிக்குமாறு ஆண்டவன் அருள் செய்வானாக.
தமிழ் மக்களே! நீங்கள் வாழும் நாட்டு நிலையைக் கருதுங்கள்; நம்மாழ்வாரும், அவர் போன்ற மற்றப் பெரியோரும் ஓதிய நூல்களை - பாக்களை - உண்மை நெறியை - நீங்கள் கைவிட்டமையே உங்கள் சிறுமைக்குக் காரணம்; நம்மாழ்வார் காலத்துக் கல்வி பெற முயலுங்கள்; நம்மாழ்வார் கொண்ட அறிவும் - அன்பும் - சமரசமும் - செறிந்த கடவுள் நெறி நிற்க முயலுங்கள்; சமயச்சண்டை செய்யாதேயுங்கள்; தெய்வ நிந்தனை புரியாதேயுங்கள்! சாதிப்பற்றைக் களையுங்கள்; நம்மாழ்வார் பெயரால் அறச்சாலை அமையுங்கள்; எல்லாரும் நம்மாழ்வாராக உழையுங்கள்; பரோபகார சிந்தையை வளருங்கள்; முழு உரிமைக்காகப் பாடுபடுங்கள். இவ்வொன்றால் உங்கள் நாடு பண்டை நிலை எய்தும், அஞ்சாதேயுங்கள்; எழுங்கள்; எழுங்கள்; எழுந்து ஆழ்வார் திருவாக்கை நோக்குங்கள்; அத்திருவாக்கின்படி நடக்க முயலுங்கள்.
***
இத்துடன் இந்நூல் நிறைவு பெற்றது!
இந்தப் பதிவில் எழுதப்படும் யாவும் முன்னோர் நூல்களின் ஒருங்குறியாக்கங்களே. எவையும் என் சொந்த எழுத்துகள் இல்லை. ஆகையால் அனைத்தும் எனக்கு ஏற்புடைய கருத்துகள் இல்லை!
Showing posts with label திரு.வி.க.. Show all posts
Showing posts with label திரு.வி.க.. Show all posts
Friday, April 16, 2010
Friday, April 9, 2010
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 11. பாட்டு
இறை உண்மையை - இறை நிலையை - இறை நேயத்தை - இறை வழிபாட்டை - இன்ன பிறவற்றை நம்மாழ்வார் எதன் வாயிலாக உலகுக்கு உணர்த்தினார்? பாட்டின் வாயிலாக என்பது சொல்லாமலே விளங்கும். ஆழ்வார் தமிழ்நாட்டைப் பாட்டால் ஓம்பினார் என்று சிறப்பாகச் சொல்லலாம். ஆழ்வாரது பாட்டியல் முன்னருஞ் சிலவிடங்களில் எடுத்துக் காட்டப்பட்டது.
பாட்டு எது? உலகம் பாட்டு; உயிர்கள் பாட்டு; இறையும் பாட்டு; இம்மூன்றையும் ஒன்றுபடுத்தியிருப்பதும் பாட்டு; எல்லாம் பாட்டு. என்றும் மகிழ்ச்சியில் மூழ்கி இருப்பவர்க்கு பாட்டு நுட்பம் இனிது விளங்கும்.
பண்டை மூதறிஞர் தங்கருத்துகளைப் பெரிதும் பாட்டாக வெளியிட்டுச் சென்றனர். இதற்குக் காரணம் என்னை? காரணங்கள் பலபடக் கூறப்படுகின்றன. அப் பல சரக்கை ஈண்டுப் பரப்ப வேண்டுவதில்லை. தலையாய காரணம் ஒன்று கூறலாம். அது, பண்டை நாளில் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தமை என்க. இயற்கை வாழ்வில் கவலை முதலியன தோன்றுவதில்லை. அவ்வாழ்வு என்றும் மகிழ்ச்சியையே ஊட்டிக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி நெஞ்சில் பாட்டுத் ததும்பி வழிவது இயல்பு.
இயற்கையைத் துருவி ஆராய்ந்தால் எங்கும் ஒலிமயமாயிருத்தல் புலனாகும். அவ்வொலியைக் கொண்டு எவ்வளவோ புதுமைகள் இந்நாளில் காணப்படுகின்றன. நெடுந்தூரத்தில் ஒருவரோடொருவர் கம்பி வாயிலாகப் பேசிக் கொள்வதை அறியாதார் இல்லை. புலன்களும் கரணங்களும் காமகுரோதங்கட்கு இரையாகாமல், இயற்கையில் ஒன்றப் பெற்று, அமைதியில் நிலைத்திருப்பவர்க்குக் கருவி முதலிய துணைகள் வேண்டுவதில்லை. இவ்வமைதி நிலை எய்தப் பெறுவோர் அமல யோகிகள் எனப்படுவர். மலயோகிகள் வேறு; அமல யோகிகள் வேறு. தொலைவில் பேசப்படுவது அமல யோகிகட்கு எளிதில் கேட்கும். அச் சக்தி அவர்கட்கு இயற்கையில் அமைகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள இயற்கை ஒலியுடன் உறவு கொண்டவர்க்குத் தூரம் என்பது குறிக்கிடுவதில்லை.
இயற்கை ஒலியில் ஆழ்வோர் இசையில் திளைப்பர். அவ்விசையின்பத்தின் மாண்பை என்னென்று சொல்வது! அதைச் சொல்வதற்குஞ் சொல் உண்டோ? அது சொல்லாகிய கட்டுக்கடங்காதது! அதன் மாண்பு என்னே, என்னே! வண்டின் மூரலிலும், சங்கின் முழக்கிலும், கிளியின் மழலையிலும், குயிலின் குரலிலும் இயற்கை இசைப்பாட்டு எழுகிறது - வானுற ஓங்கிய மூங்கில்களிலும், பழுத்துச் சாய்ந்த செஞ்சாலிக் கதிர்களிலும், கடலின் அலைகளிலும், இயற்கை இசைப்பாட்டெழுகிறது. இவ்விசைப்பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டுப் பயிற்சி பெறுவோர்க்குக் காடு மலை வயல் கடல் முதலியன பாட்டாகத் தோன்றும். காடு மலை முதலியன பாட்டாகப் பொலிவதைக் குயில் அறியும்; மயில் அறியும்; 'எல்லாம் இறை மயம்' என்னும் உண்மை கண்ட அறிவு முதிர்ந்த அன்பர் அறிவர். காடு முதலியவற்றைப் பாட்டாகப் பார்ப்போர்க்கு எல்லாம் பாட்டாகவே தோன்றும்; இயற்கை முழுவதும் பாட்டாகவே தோன்றும். எல்லாவற்றையும் பாட்டாக உணரும் நெஞ்சமன்றோ நெஞ்சம்! அந் நெஞ்சிலன்றோ பாட்டுத் தெய்வம் நடம் புரியும்!
இயற்கை, பாட்டாயின், அதன் உயிராகிய இறையும் பாட்டே. இயற்கை இறை, பாட்டு மயமாயிருக்கிறது என்று சொல்லலாம். பாட்டாக உள்ள ஒன்றைப் பாட்டால் உணர்வது எளிது. உயிர்கள், பாட்டு ஆக முயலல் வேண்டும். உயிர்களின் இயல் பாட்டே. ஆனால் அவைகள் செயற்கையில் படியப் படியப் பாட்டியலை இழக்கின்றன. அவைகள், இயற்கை வாழ்வில் தலைப்படப் படத் தங்களுக்குரிய பாட்டியலைப் பெறும். உயிர்கள் நலத்துக்கு இயற்கையோடியைந்த இனிய வாழ்வு தேவை.
ஆழ்வார் இயற்கை இறையையும் தம்மையும் பாட்டாகக் கண்டு தமிழ் பாடிய தமிழ்ச் செல்வர். அவர் தம் பாடலைத் தமிழ்க் கருவூலம் என்று கூறலாம். ஆழ்வார் திருமாலைப் பாட்டிசைக் கலையாகக் கண்டு பாடியதை,
மெல்லிய லாக்கை ... ...
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன்...
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே ... ...
தாமரைக் கண்ணனை... ...
.... ... நாவலர்
பாமருவி நிற்கத் தந்த பான்மையேய்... ...
செவிகளா லாரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் டேனுறைப்பத் துற்று...
சூழ்கண்டாய்... ... ...
யாழின் இசையே அமுதே
விண்ணுளாய்... ... ...
பண்ணுளாய் கவிதன்னுளாய் ... ...
இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.
செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்ம்மின்
திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து...
நண்ணா வசுரர்...
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம் மான்...
கண்ணுள் நின்றகாலன் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண்பொருள் ஏழிசையின் சுவைதானே...
என வரூஉம் அவர்தம் திருவாய்மொழிகளாற் காண்க.
ஆழ்வார் பாடி ஆடுதலை விரும்பி நின்றதை,
மதுசூதனனை யன்றி மற்றிலேனென்
றெத்தாலும் கருமமின்றி
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட
நின்றூழி யூழிதொறும்
விதிசூழல் புக்கெனைத்தோர் பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தாலெனக்கே லம்மான்
திரிவிக்கிரமனையே.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்...
என வரூஉம் திருவாக்குகளால் உணர்க.
நம்மாழ்வார் எல்லாவற்றையும் பாட்டாகக் கண்டு, தாமும் பாட்டாகிப் பாட்டாயுருகித் தமிழ் பாடினார். அவரை அவர்தம் பாக்களில் பார்க்கலாம். அவர், அவர்தம் பாட்டாக நமக்குக் காட்சி யளிக்கிறார்; அவரைப் பார்ப்போம்:
செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந்தா
லொப்பச் சேயரிக்கண்
அழுநீர் துளும்ப வலமரு
கின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்
ணாட்டவர் மூதுவாரம்
தொழுநீ ரிணையடிக்கே அன்பு
சூட்டிய சூழ்குழற்கே.
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே.
ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே வல்வினையேன் ஆவிகாப் பாரினியே.
பொன்னுல காளீரோ புவன
முழு தாளீரோ
நன்னிலப் புள்ளினங்காள் வினை
யாட்டியேன் நானிரந்தேன்
முன்னுல கங்களெல்லாம் படைத்த
முகில்வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கென்
னிலைமை யுரைத்தே.
கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளா லிறைக்கும்
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும்
எங்ஙனே தரிக்கேனுன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத் தென்செய்கின்றாயே.
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோநீ இன்னேயானால்
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்
றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்தபால் நெய்யே நெய்யின் இன் சுவையே
கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
பின்னைதோள் மணந்தபேராயா!
வந்து தோன்றாய் அன்றேலுன்
வையம் தாய மலரடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்
செந்தண் கமலக் கண்கைகால்
சிவந்த வாய் ஓர் கருநாயிறு
அந்தமில்லாக் கதிர்பரப்பி
அலர்ந்ததொக்கும் அம்மானே.
மல்லிகை கமழ்தென்ற லீருமாலோ
வண்குறிஞ்சி இசை தவருமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ
செக்கர்நன் மேகங்கள் சிதைக்குமாலோ
அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்
ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிட மறிகிலம் தமிய மாலோ.
உகக்குநல் லவரொடு முழுதந் துன்றன்
திருவுள்ள மிடர்கெடுந் தோறும் நாங்கள்
வியக்கவின் புறுதுமெம் பெண்மை யாற்றோம்
எம்பெரு மான்பசு மேய்க்கப் போகேல்
மிகப்பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டு நின்
றுழிதரு வர்கஞ்சனேவ
அகப்படி லவரொடும் நின்னோ டாங்கே
அவத்தங்கள் விளையுமென் சொற்கொ ளந்தோ.
ஆழ்வார் பாக்களை ஆழ்வாரே என்று வாழ்விற் கொண்டு போற்றி உய்வோமாக.
பாட்டு எது? உலகம் பாட்டு; உயிர்கள் பாட்டு; இறையும் பாட்டு; இம்மூன்றையும் ஒன்றுபடுத்தியிருப்பதும் பாட்டு; எல்லாம் பாட்டு. என்றும் மகிழ்ச்சியில் மூழ்கி இருப்பவர்க்கு பாட்டு நுட்பம் இனிது விளங்கும்.
பண்டை மூதறிஞர் தங்கருத்துகளைப் பெரிதும் பாட்டாக வெளியிட்டுச் சென்றனர். இதற்குக் காரணம் என்னை? காரணங்கள் பலபடக் கூறப்படுகின்றன. அப் பல சரக்கை ஈண்டுப் பரப்ப வேண்டுவதில்லை. தலையாய காரணம் ஒன்று கூறலாம். அது, பண்டை நாளில் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தமை என்க. இயற்கை வாழ்வில் கவலை முதலியன தோன்றுவதில்லை. அவ்வாழ்வு என்றும் மகிழ்ச்சியையே ஊட்டிக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி நெஞ்சில் பாட்டுத் ததும்பி வழிவது இயல்பு.
இயற்கையைத் துருவி ஆராய்ந்தால் எங்கும் ஒலிமயமாயிருத்தல் புலனாகும். அவ்வொலியைக் கொண்டு எவ்வளவோ புதுமைகள் இந்நாளில் காணப்படுகின்றன. நெடுந்தூரத்தில் ஒருவரோடொருவர் கம்பி வாயிலாகப் பேசிக் கொள்வதை அறியாதார் இல்லை. புலன்களும் கரணங்களும் காமகுரோதங்கட்கு இரையாகாமல், இயற்கையில் ஒன்றப் பெற்று, அமைதியில் நிலைத்திருப்பவர்க்குக் கருவி முதலிய துணைகள் வேண்டுவதில்லை. இவ்வமைதி நிலை எய்தப் பெறுவோர் அமல யோகிகள் எனப்படுவர். மலயோகிகள் வேறு; அமல யோகிகள் வேறு. தொலைவில் பேசப்படுவது அமல யோகிகட்கு எளிதில் கேட்கும். அச் சக்தி அவர்கட்கு இயற்கையில் அமைகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள இயற்கை ஒலியுடன் உறவு கொண்டவர்க்குத் தூரம் என்பது குறிக்கிடுவதில்லை.
இயற்கை ஒலியில் ஆழ்வோர் இசையில் திளைப்பர். அவ்விசையின்பத்தின் மாண்பை என்னென்று சொல்வது! அதைச் சொல்வதற்குஞ் சொல் உண்டோ? அது சொல்லாகிய கட்டுக்கடங்காதது! அதன் மாண்பு என்னே, என்னே! வண்டின் மூரலிலும், சங்கின் முழக்கிலும், கிளியின் மழலையிலும், குயிலின் குரலிலும் இயற்கை இசைப்பாட்டு எழுகிறது - வானுற ஓங்கிய மூங்கில்களிலும், பழுத்துச் சாய்ந்த செஞ்சாலிக் கதிர்களிலும், கடலின் அலைகளிலும், இயற்கை இசைப்பாட்டெழுகிறது. இவ்விசைப்பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டுப் பயிற்சி பெறுவோர்க்குக் காடு மலை வயல் கடல் முதலியன பாட்டாகத் தோன்றும். காடு மலை முதலியன பாட்டாகப் பொலிவதைக் குயில் அறியும்; மயில் அறியும்; 'எல்லாம் இறை மயம்' என்னும் உண்மை கண்ட அறிவு முதிர்ந்த அன்பர் அறிவர். காடு முதலியவற்றைப் பாட்டாகப் பார்ப்போர்க்கு எல்லாம் பாட்டாகவே தோன்றும்; இயற்கை முழுவதும் பாட்டாகவே தோன்றும். எல்லாவற்றையும் பாட்டாக உணரும் நெஞ்சமன்றோ நெஞ்சம்! அந் நெஞ்சிலன்றோ பாட்டுத் தெய்வம் நடம் புரியும்!
இயற்கை, பாட்டாயின், அதன் உயிராகிய இறையும் பாட்டே. இயற்கை இறை, பாட்டு மயமாயிருக்கிறது என்று சொல்லலாம். பாட்டாக உள்ள ஒன்றைப் பாட்டால் உணர்வது எளிது. உயிர்கள், பாட்டு ஆக முயலல் வேண்டும். உயிர்களின் இயல் பாட்டே. ஆனால் அவைகள் செயற்கையில் படியப் படியப் பாட்டியலை இழக்கின்றன. அவைகள், இயற்கை வாழ்வில் தலைப்படப் படத் தங்களுக்குரிய பாட்டியலைப் பெறும். உயிர்கள் நலத்துக்கு இயற்கையோடியைந்த இனிய வாழ்வு தேவை.
ஆழ்வார் இயற்கை இறையையும் தம்மையும் பாட்டாகக் கண்டு தமிழ் பாடிய தமிழ்ச் செல்வர். அவர் தம் பாடலைத் தமிழ்க் கருவூலம் என்று கூறலாம். ஆழ்வார் திருமாலைப் பாட்டிசைக் கலையாகக் கண்டு பாடியதை,
மெல்லிய லாக்கை ... ...
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன்...
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே ... ...
தாமரைக் கண்ணனை... ...
.... ... நாவலர்
பாமருவி நிற்கத் தந்த பான்மையேய்... ...
செவிகளா லாரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் டேனுறைப்பத் துற்று...
சூழ்கண்டாய்... ... ...
யாழின் இசையே அமுதே
விண்ணுளாய்... ... ...
பண்ணுளாய் கவிதன்னுளாய் ... ...
இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.
செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்ம்மின்
திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து...
நண்ணா வசுரர்...
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம் மான்...
கண்ணுள் நின்றகாலன் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண்பொருள் ஏழிசையின் சுவைதானே...
என வரூஉம் அவர்தம் திருவாய்மொழிகளாற் காண்க.
ஆழ்வார் பாடி ஆடுதலை விரும்பி நின்றதை,
மதுசூதனனை யன்றி மற்றிலேனென்
றெத்தாலும் கருமமின்றி
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட
நின்றூழி யூழிதொறும்
விதிசூழல் புக்கெனைத்தோர் பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தாலெனக்கே லம்மான்
திரிவிக்கிரமனையே.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்...
என வரூஉம் திருவாக்குகளால் உணர்க.
நம்மாழ்வார் எல்லாவற்றையும் பாட்டாகக் கண்டு, தாமும் பாட்டாகிப் பாட்டாயுருகித் தமிழ் பாடினார். அவரை அவர்தம் பாக்களில் பார்க்கலாம். அவர், அவர்தம் பாட்டாக நமக்குக் காட்சி யளிக்கிறார்; அவரைப் பார்ப்போம்:
செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந்தா
லொப்பச் சேயரிக்கண்
அழுநீர் துளும்ப வலமரு
கின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்
ணாட்டவர் மூதுவாரம்
தொழுநீ ரிணையடிக்கே அன்பு
சூட்டிய சூழ்குழற்கே.
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே.
ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே வல்வினையேன் ஆவிகாப் பாரினியே.
பொன்னுல காளீரோ புவன
முழு தாளீரோ
நன்னிலப் புள்ளினங்காள் வினை
யாட்டியேன் நானிரந்தேன்
முன்னுல கங்களெல்லாம் படைத்த
முகில்வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கென்
னிலைமை யுரைத்தே.
கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளா லிறைக்கும்
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும்
எங்ஙனே தரிக்கேனுன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத் தென்செய்கின்றாயே.
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோநீ இன்னேயானால்
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்
றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்தபால் நெய்யே நெய்யின் இன் சுவையே
கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
பின்னைதோள் மணந்தபேராயா!
வந்து தோன்றாய் அன்றேலுன்
வையம் தாய மலரடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்
செந்தண் கமலக் கண்கைகால்
சிவந்த வாய் ஓர் கருநாயிறு
அந்தமில்லாக் கதிர்பரப்பி
அலர்ந்ததொக்கும் அம்மானே.
மல்லிகை கமழ்தென்ற லீருமாலோ
வண்குறிஞ்சி இசை தவருமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ
செக்கர்நன் மேகங்கள் சிதைக்குமாலோ
அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்
ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிட மறிகிலம் தமிய மாலோ.
உகக்குநல் லவரொடு முழுதந் துன்றன்
திருவுள்ள மிடர்கெடுந் தோறும் நாங்கள்
வியக்கவின் புறுதுமெம் பெண்மை யாற்றோம்
எம்பெரு மான்பசு மேய்க்கப் போகேல்
மிகப்பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டு நின்
றுழிதரு வர்கஞ்சனேவ
அகப்படி லவரொடும் நின்னோ டாங்கே
அவத்தங்கள் விளையுமென் சொற்கொ ளந்தோ.
ஆழ்வார் பாக்களை ஆழ்வாரே என்று வாழ்விற் கொண்டு போற்றி உய்வோமாக.
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Tuesday, March 30, 2010
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 10 சமரசம்
ஆழ்வார் எங்குமுள்ள இறையை உணர்ந்து, அதனை வழிபட்டவர். அதனால் அவர் சமரசத்தை அறிவுறுத்தலானார். அவருக்கு எல்லாம் இறையாக - அன்பாக - சகோதரமாகத் தோன்றின. சமரச ஞானத்துக்கு இறையின் சர்வ வியாபக உணர்வு இன்றியமையாதது. இஃது ஆழ்வார் திருவாக்குகளால் நன்கு விளங்குகிறது. இறையின் சர்வ வியாபக உணர்வை அடிப்படையாக் கொண்ட சமரசமே உண்மையானது.
இந்நாளில் சமரசம் பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் சமரச ஞானம் பெரிதும் பரவுவதில்லை. காரணம் என்ன? அகண்ட உணர்வு இன்மையேயாகும். மக்கள், நாடு - மொழி - நிறம் - சாதி - மதம் முதலியவற்றுள் ஏதாவது ஒன்றன்மீது பற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். நாடு மொழி முதலியன கண்டங் கண்டமாயிருப்பன. கண்ட புத்தி எங்ஙனம் சமரசஞானத்தைக் கூட்டும்? சில வேளைகளில் அப்புத்தி, எரி பகைகளை மூட்டிப் போரை விளைவிப்பினும் விளைவிக்கும்.
சமரசத்துக்கு நாடு மொழி முதலிய எல்லாவற்றிற்கும் பொதுவாயுள்ள ஒன்று தேவை. அஃது எது? அஃது இறை ஒன்றே. இறை அகண்டமா யிருப்பது; நாடு மொழி முதலியவற்றைப் போலக் கட்டில் அடங்காதது; எல்லாம் அடங்க இடந்தருவது. அவ்விறையிடம் அன்பு கொண்டால், உண்மைச் சமரச ஞானம் எளிதில் அரும்பும்.
இறை ஒன்றே. அவ்வொன்றற்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. உலகில் அவ்வப்போது குருமார் தோன்றி, அவ்வக்கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றவண்ணம் இறை உண்மையை அறிவுறுத்திச் செல்வார். அவர்தம் போதனைகள் யாவும் ஓர் இறையையே குறிக்கொண்டு நிற்பன.
குருமார் போதனைகள் பல சமயங்களாகக் கொள்ளப்பட்டன. பலபட்ட மனோநிலையுடைய மக்களுக்கு அவர்தம் போதனைகள் பலவழியிலும் பயன்பட்டு வருமுறையில் அமைந்திருக்கின்றன. எவர்க்கு எப்போதனையில் அன்பு நிகழ்கிறதோ, அவர் அப்போதனைவழி நின்று ஒழுகலாம். அவர் பிற போதனைகளை நிந்திக்கலாகாது. 'நமது நெறியைப் போன்றே பிற நெறிகளும் இருக்கின்றன' என்று எண்ணுதல் சிறப்பு. எல்லாப் போதனைகட்கும் பொருளாயிருப்பது ஒரே இறையாதலின், எப்போதனையை நிந்திப்பினும், அஃது அவ்விறையையே சாரும்.
ஊர் ஒன்று, அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எவ்வழிச் சென்றாலும் அவ்வூரை அடையலாம். அது போல இறை ஒன்றே. அதற்குரிய எந்நெறிபற்றி ஒழிகினும் அதை அடையலாம். ஒன்றை ஒன்று குறை கூறுவது எற்றுக்கு? அஃது அஞ்ஞானம்.
குருமார் போதனைகளைப் புரோகிதர் பாழ்படுத்திவிட்டனர். புரோகிதரால் கோயில், மடம் முதலியன கெட்டன; சம்பிரதாயங்கள் முளைத்தன; சம்பிரதாயங்களால் கண்மூடி வழக்கவொழுக்கங்கள் பெருகின. சம்பிரதாயங்களும், அவைகளினின்றும் எழுந்து மூடப்பழக்க வொழுக்கங்களும் புரோகித மதங்களாயின. இப்பொழுது கடவுள் பெயரால் புரோகித மதங்கள் ஆக்கமுற்றிருக்கின்றன. புரோகித மதத்துக்கும் கடவுள் நெறிக்கும் வேற்றுமை தெரியாது உலகம் இடப்படுகிறது. அருளாளர் அருளிய மெய்ந்நெறிகளைப் புரோகிதக் கலைகளும் புதர்களும் மூடிக் கொண்டிருக்கின்றன. அவைகளைக் களைந்தெறிதல் வேண்டும். அதற்குக் கருவிகளாக ஆழ்வாரும், அவர் போன்றாரும் அருளிய சமரச மொழிகளைப் பயன்படுத்தலாம். இதற்குரிய ஆற்றல்பெற இறைவனை வழுத்துவோமாக.
ஆழ்வார் அருளிய சமரச மொழிகளிற் சில வருமாறு:
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.
பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்...
மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.
அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி...
எங்குவந் துறுகோ என்னையாள் வானே
ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்
அவையுமோ நீ இன்னேயானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலன் இறந்ததும் நீயே.
உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
பொருவாகி நின்றானவன்...
இறை ஒன்றாய்ப் போக்கு வரவு இல்லாததாய் எங்கும் நீக்கமற நிற்பது. அவ்விறை, அடியவர்க்கு அருள் புரியும் வழிகள் பலவுள. அவைகளுள் ஒன்று குரு மூர்த்தமாக வந்தருள்வது. தமக்கு அருள் புரிந்த குருமூர்த்தத்தைச் சிறப்பிப்பது அடியவர் வழக்கம். அச் சிறப்பும் இறையையே சாரும். குருமூர்த்தத்துள் ஒளிர்வது இறையாகலின், அக் குருமூர்த்தத்தைப் போற்றுவது இறையைச் சேர்தல் இயல்பு. குருமார் எல்லா ரிடத்திலும் ஒளிர்வது இறையொன்றே யாதலின், குருமாருள் உயர்வு தாழ்வு கற்பித்தலாகாது. அவர் அனைவரும் உணர்வில் ஒருவரேயாவர். ஒரு குருவைப் போற்றுவது மற்றக் குருமாரையும் போற்றுவதாகும். அவ்வாறே ஒருவரை நிந்திப்பதும் மற்றவரை நிந்திப்பதாகும். ஒருவரைப் போற்றி, மற்றவரை நிந்திப்பது, எல்லாரையும் நிந்திப்பதாக முடியும். ஆகவே நிந்தனை கூடாது.
இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.
இப்பாட்டை உற்று நோக்குக. இறை ஆணைப்படி ஆங்காங்கே குருமார் வீற்றிருக்கிறாரென்பதும், இறையொன்றே அவரனைவரையும் இயக்குகிறதென்பதும் விளங்குகின்றன. ஆழ்வார் மொழியால் இறை, குருமார் வாயிலாகப் பல நெறிகளை அருள்கிறது என்பதும் விளங்குகிறது.
நம்மாழ்வார் சமரச ஞானியாதலால், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடம் தலையன்பு காட்டுகிறார். அவர், ஏனைய மூர்த்திகளிடத்திலும் இறையைக் காண்கிறாராதலின், முனிவின்றி அவர்களையும் தம் மூர்த்தியாகக் கொண்டு போற்றுகிறார். இவ்வாறு சமரச ஞானத்தால், நம்மாழ்வார் தமிழ்நாட்டைக் காத்து வந்தார். அத்தகைய சமரச ஞானம் பிறந்த தமிழ்நாட்டில், நாளடைவில், சமயச் சண்டைகள் பெருகலாயின. ஆழ்வார் கொண்ட அறிவும் அன்பும் நிறைந்த சமரச நெறி அருகிற்று. அகங்கார மதமும், கோப மதமும், தெய்வ நிந்தனை மதமும் பெருகின.
சில மதவாதிகள், விஷ்ணு சிவன் என்னுஞ் சொற்களைப் பிடித்து அலைத்துப் பொருள்விடுத்துப் பூசல் விளைத்துத் தமிழ்நாட்டின் அறிவையும் அன்பையும் குலைத்தார்கள். அவர்கள், நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதத்தை முற்றும் ஓதி, அதன் பொருளுண்மை கண்டிருந்தால், எம் மதத்தினிடமும் பகைமை கொள்ளார்கள். மதப்போர் செய்வோர் சைவராயினுமாக, வைணவராயினுமாக, மற்றெவராயினுமாக. அவரை அன்பரென நான் போற்றமாட்டேன். சைவருட் சிலரும் வைணவருட் சிலரும் தத்தம் தமிழ் வேதங்களை ஆராயும்போது, துவேஷ புத்தி கொண்டு, 'எங்கே திருமால் குறை கூறப்பட்டிருக்கிறார்' - 'எங்கே சிவபெருமான் இழித்துக் கூறப்பட்டிருக்கிறார்' என்று குறைகளைத் தடவிப் பிடிப்பதிலேயே கருத்தைப் பதிய வைக்கிறார். சமரசப் பகுதிகள் இக் குருடர்களுக்குப் புலனாவதில்லையோ என்னவோ தெரியவில்லை. சமயவாதிகள் கீழ்வரும் நம்மாழ்வார் வாய்மொழிகளை ஊன்றி நோக்குவார்களாக.
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு
வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை
உணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன்
அரன் என்னு மிவரை
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின்
மனப்பட்ட தொன்றே.
ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னுமிவரை
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.
ஒளிமணி வண்ணனென்கோ ஒருவனென்றேத்த நின்ற
நளிர்மதிச் சடையனென்கோ நான்முகக் கடவுளென்கோ ...
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபிரானவனே...
யானும் தானாயொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனைத்
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை...
முனியே நான்முகனே முக்கண்ணப்பா...
அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி...
இவை போன்ற திருவாக்குகள் இன்னும் பல உள. உலகம் அன்பிழந்து தவிக்கும் இவ்வேலையிலாவது, இத்திருவாக்குகளின் கட்டளைப்படி மக்கள் நடத்தலாகாதா? நம்மாழ்வார், சமய வாதிகளை விளித்து,
இலிங்கத்திட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றுநுந்
தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசுந்
திருக்குருகூரதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
பொய்யில்லை போற்றுமின்னே
என்று நல்லறிவுச்சுடர் கொளுத்தியுள்ளார். ஆழ்வார் தம்மை ஆட்கொண்ட திருமால், 'எல்லா சமயக் கடவுள்' என்று வலியுறுத்துகிறார். மற்றச் சமயத்தவரும் தத்தங் கடவுளைச் சமயத்தவர் போற்றுவதாகப் புகன்றுள்ளார். இதனால் அறியக் கிடக்கும் உண்மை என்னை? 'ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பெயரால் ஒரே கடவுளை வழிபடுகிறது' என்பது பெறப்படுகிறது. ஒவ்வொரு வேளையில் அடியவர், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடத்தில் தலையன்பு காட்டுவதைக் கொண்டு, அவ்வடியவரைப் போற்றுவோர் தெய்வ நிந்தனை புரிந்து, மதச்சண்டை செய்வது அறிவுடைமையாகாது.
நம்மாழ்வார் சமரச ஞான உபதேசம் பெற்ற நாடு எது? நம் தமிழ்நாடன்றோ? அத்தகை நாடு பின்னை நாளில் மதச் சண்டையால் இடர்ப்பட்டது. இன்னும் மதச்சண்டை புரிய முனைந்து நிற்போர் தமிழ் நாட்டில் இல்லாமற் போகவில்லை. இவரால் நமது தமிழ் நாட்டின் மாண்பு கெடுகிறது. ஆண்டவனருளால் மதச் சண்டை ஒழிக.
சமரச நோக்கைக் கெடுக்குங் கொடுமைகள் பல. அவை ஒவ்வொன்று ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாகத் தலைசிறந்து தீமை செய்யும். நமது நாட்டில் சாதிப்பகை அதிகம். சாதிபேதம் என்னும் பேய் சமரசத் தெய்வத்தை நிலைபெறுத்துவதில்லை. அப்பேய் பொல்லாதது. ஆழ்வாரிடம் அப்பேய் ஒன்றுஞ் செய்யவில்லை. அவர் சாதியைக் கடிகிறார். எவராயினும் அவர் ஆண்டவனுக்கு அன்பராவரேல், அவரைத் தம்மடிகள் என்று ஆழ்வார் பாடியிருக்கிறார்.
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி யார் எம்மடிகளே.
இத்திருப்பாட்டில் சாதிவேற்றுமை கடியப்பட்டிருத்தல் காண்க.
சமரச ஞானத்தால் விளையும் நலன்கள் பல. அவைகளுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கது ஒன்று. அஃது அஞ்சாமை. சத்தியமுள்ள இடத்தில் அஞ்சாமை இருத்தல் இயல்பு. சத்க்டியமானது சத்தினிடத்தது. சத் என்பது அழியாத உண்மை. அதுவே இறை. இறையினிடத்தில் உறைந்து நின்று, அது யாண்டுமிருத்தலை உணர்ந்து, சமரச ஞானம் பெற்றவர்க்குப் பகைமை ஏது?
பகைமை இல்லாத இடத்தில் அச்சம் ஏது? சமரச ஞானிகள் அவரைப் பகைத்து எதிர்க்கவும் மாட்டார்; புறமுதுகிட்டு ஓடவும் மாட்டார். அவர், அன்பால் - பொறுமையால் - உறுதியாக நிற்பர். இதுவே அஞ்சாமை என்பது. இறைவனிடம் கொள்ளும் உறுதியே அஞ்சாமை. இன்னோரன்ன நுட்பங்களெல்லாம் செறிய,
உன்னைச் சிந்தை செய்து செய்து உன்
நெடுமாமொழி இசைபாடி யாடிஎன்
முன்னைத் தீவினைகள் முழுவேர்
அரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த
இரணியன் அகல்வார்வங் கீண்ட என்
முன்னைக் கோளரியே
முடியாத தென்னெனக்கே
என்று ஆழ்வார் ஓதியிருத்தல் காண்க. 'உன்னைச் சிந்தை செய்து' என்று ஆழ்வார் அருளியதன் நுட்பத்தை ஓர்க. உண்மைப் பொருளாகிய ஆண்டவனிடத்து ஐயுறாது உறுதி கொண்டு, அவனைச் சிந்தித்துப் பாடி ஆடி எல்லாம் பெறலாம். 'உன்னைச் சிந்தனையினால் இகழ்ந்த இரணியன்' என்னுங்குறிப்பால், ஆண்டவனை இகழலாகாதென்பதை ஆழ்வார் அறிவுறுத்துகிறார். ஆழ்வார் 'என் முன்னைக் கோளரியே' என்று விளித்து, 'முடியாததென்னெனக்கே' என்று மிடுக்காக வீறு கொண்டு அஞ்சாமை காட்டுகிறார். இம்மிடுக்கும், இவ்வீறும், இவ்வஞ்சாமையும் தமிழ்நாட்டுக்கு இதுபோழ்து வேண்டற்பாலன. இவைகட்குச் சமரச ஞானம் இன்றியமையாதது.
இந்நாளில் சமரசம் பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் சமரச ஞானம் பெரிதும் பரவுவதில்லை. காரணம் என்ன? அகண்ட உணர்வு இன்மையேயாகும். மக்கள், நாடு - மொழி - நிறம் - சாதி - மதம் முதலியவற்றுள் ஏதாவது ஒன்றன்மீது பற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். நாடு மொழி முதலியன கண்டங் கண்டமாயிருப்பன. கண்ட புத்தி எங்ஙனம் சமரசஞானத்தைக் கூட்டும்? சில வேளைகளில் அப்புத்தி, எரி பகைகளை மூட்டிப் போரை விளைவிப்பினும் விளைவிக்கும்.
சமரசத்துக்கு நாடு மொழி முதலிய எல்லாவற்றிற்கும் பொதுவாயுள்ள ஒன்று தேவை. அஃது எது? அஃது இறை ஒன்றே. இறை அகண்டமா யிருப்பது; நாடு மொழி முதலியவற்றைப் போலக் கட்டில் அடங்காதது; எல்லாம் அடங்க இடந்தருவது. அவ்விறையிடம் அன்பு கொண்டால், உண்மைச் சமரச ஞானம் எளிதில் அரும்பும்.
இறை ஒன்றே. அவ்வொன்றற்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. உலகில் அவ்வப்போது குருமார் தோன்றி, அவ்வக்கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றவண்ணம் இறை உண்மையை அறிவுறுத்திச் செல்வார். அவர்தம் போதனைகள் யாவும் ஓர் இறையையே குறிக்கொண்டு நிற்பன.
குருமார் போதனைகள் பல சமயங்களாகக் கொள்ளப்பட்டன. பலபட்ட மனோநிலையுடைய மக்களுக்கு அவர்தம் போதனைகள் பலவழியிலும் பயன்பட்டு வருமுறையில் அமைந்திருக்கின்றன. எவர்க்கு எப்போதனையில் அன்பு நிகழ்கிறதோ, அவர் அப்போதனைவழி நின்று ஒழுகலாம். அவர் பிற போதனைகளை நிந்திக்கலாகாது. 'நமது நெறியைப் போன்றே பிற நெறிகளும் இருக்கின்றன' என்று எண்ணுதல் சிறப்பு. எல்லாப் போதனைகட்கும் பொருளாயிருப்பது ஒரே இறையாதலின், எப்போதனையை நிந்திப்பினும், அஃது அவ்விறையையே சாரும்.
ஊர் ஒன்று, அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எவ்வழிச் சென்றாலும் அவ்வூரை அடையலாம். அது போல இறை ஒன்றே. அதற்குரிய எந்நெறிபற்றி ஒழிகினும் அதை அடையலாம். ஒன்றை ஒன்று குறை கூறுவது எற்றுக்கு? அஃது அஞ்ஞானம்.
குருமார் போதனைகளைப் புரோகிதர் பாழ்படுத்திவிட்டனர். புரோகிதரால் கோயில், மடம் முதலியன கெட்டன; சம்பிரதாயங்கள் முளைத்தன; சம்பிரதாயங்களால் கண்மூடி வழக்கவொழுக்கங்கள் பெருகின. சம்பிரதாயங்களும், அவைகளினின்றும் எழுந்து மூடப்பழக்க வொழுக்கங்களும் புரோகித மதங்களாயின. இப்பொழுது கடவுள் பெயரால் புரோகித மதங்கள் ஆக்கமுற்றிருக்கின்றன. புரோகித மதத்துக்கும் கடவுள் நெறிக்கும் வேற்றுமை தெரியாது உலகம் இடப்படுகிறது. அருளாளர் அருளிய மெய்ந்நெறிகளைப் புரோகிதக் கலைகளும் புதர்களும் மூடிக் கொண்டிருக்கின்றன. அவைகளைக் களைந்தெறிதல் வேண்டும். அதற்குக் கருவிகளாக ஆழ்வாரும், அவர் போன்றாரும் அருளிய சமரச மொழிகளைப் பயன்படுத்தலாம். இதற்குரிய ஆற்றல்பெற இறைவனை வழுத்துவோமாக.
ஆழ்வார் அருளிய சமரச மொழிகளிற் சில வருமாறு:
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.
பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்...
மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.
அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி...
எங்குவந் துறுகோ என்னையாள் வானே
ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்
அவையுமோ நீ இன்னேயானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலன் இறந்ததும் நீயே.
உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
பொருவாகி நின்றானவன்...
இறை ஒன்றாய்ப் போக்கு வரவு இல்லாததாய் எங்கும் நீக்கமற நிற்பது. அவ்விறை, அடியவர்க்கு அருள் புரியும் வழிகள் பலவுள. அவைகளுள் ஒன்று குரு மூர்த்தமாக வந்தருள்வது. தமக்கு அருள் புரிந்த குருமூர்த்தத்தைச் சிறப்பிப்பது அடியவர் வழக்கம். அச் சிறப்பும் இறையையே சாரும். குருமூர்த்தத்துள் ஒளிர்வது இறையாகலின், அக் குருமூர்த்தத்தைப் போற்றுவது இறையைச் சேர்தல் இயல்பு. குருமார் எல்லா ரிடத்திலும் ஒளிர்வது இறையொன்றே யாதலின், குருமாருள் உயர்வு தாழ்வு கற்பித்தலாகாது. அவர் அனைவரும் உணர்வில் ஒருவரேயாவர். ஒரு குருவைப் போற்றுவது மற்றக் குருமாரையும் போற்றுவதாகும். அவ்வாறே ஒருவரை நிந்திப்பதும் மற்றவரை நிந்திப்பதாகும். ஒருவரைப் போற்றி, மற்றவரை நிந்திப்பது, எல்லாரையும் நிந்திப்பதாக முடியும். ஆகவே நிந்தனை கூடாது.
இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.
இப்பாட்டை உற்று நோக்குக. இறை ஆணைப்படி ஆங்காங்கே குருமார் வீற்றிருக்கிறாரென்பதும், இறையொன்றே அவரனைவரையும் இயக்குகிறதென்பதும் விளங்குகின்றன. ஆழ்வார் மொழியால் இறை, குருமார் வாயிலாகப் பல நெறிகளை அருள்கிறது என்பதும் விளங்குகிறது.
நம்மாழ்வார் சமரச ஞானியாதலால், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடம் தலையன்பு காட்டுகிறார். அவர், ஏனைய மூர்த்திகளிடத்திலும் இறையைக் காண்கிறாராதலின், முனிவின்றி அவர்களையும் தம் மூர்த்தியாகக் கொண்டு போற்றுகிறார். இவ்வாறு சமரச ஞானத்தால், நம்மாழ்வார் தமிழ்நாட்டைக் காத்து வந்தார். அத்தகைய சமரச ஞானம் பிறந்த தமிழ்நாட்டில், நாளடைவில், சமயச் சண்டைகள் பெருகலாயின. ஆழ்வார் கொண்ட அறிவும் அன்பும் நிறைந்த சமரச நெறி அருகிற்று. அகங்கார மதமும், கோப மதமும், தெய்வ நிந்தனை மதமும் பெருகின.
சில மதவாதிகள், விஷ்ணு சிவன் என்னுஞ் சொற்களைப் பிடித்து அலைத்துப் பொருள்விடுத்துப் பூசல் விளைத்துத் தமிழ்நாட்டின் அறிவையும் அன்பையும் குலைத்தார்கள். அவர்கள், நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதத்தை முற்றும் ஓதி, அதன் பொருளுண்மை கண்டிருந்தால், எம் மதத்தினிடமும் பகைமை கொள்ளார்கள். மதப்போர் செய்வோர் சைவராயினுமாக, வைணவராயினுமாக, மற்றெவராயினுமாக. அவரை அன்பரென நான் போற்றமாட்டேன். சைவருட் சிலரும் வைணவருட் சிலரும் தத்தம் தமிழ் வேதங்களை ஆராயும்போது, துவேஷ புத்தி கொண்டு, 'எங்கே திருமால் குறை கூறப்பட்டிருக்கிறார்' - 'எங்கே சிவபெருமான் இழித்துக் கூறப்பட்டிருக்கிறார்' என்று குறைகளைத் தடவிப் பிடிப்பதிலேயே கருத்தைப் பதிய வைக்கிறார். சமரசப் பகுதிகள் இக் குருடர்களுக்குப் புலனாவதில்லையோ என்னவோ தெரியவில்லை. சமயவாதிகள் கீழ்வரும் நம்மாழ்வார் வாய்மொழிகளை ஊன்றி நோக்குவார்களாக.
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு
வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை
உணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன்
அரன் என்னு மிவரை
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின்
மனப்பட்ட தொன்றே.
ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னுமிவரை
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.
ஒளிமணி வண்ணனென்கோ ஒருவனென்றேத்த நின்ற
நளிர்மதிச் சடையனென்கோ நான்முகக் கடவுளென்கோ ...
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபிரானவனே...
யானும் தானாயொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனைத்
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை...
முனியே நான்முகனே முக்கண்ணப்பா...
அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி...
இவை போன்ற திருவாக்குகள் இன்னும் பல உள. உலகம் அன்பிழந்து தவிக்கும் இவ்வேலையிலாவது, இத்திருவாக்குகளின் கட்டளைப்படி மக்கள் நடத்தலாகாதா? நம்மாழ்வார், சமய வாதிகளை விளித்து,
இலிங்கத்திட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றுநுந்
தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசுந்
திருக்குருகூரதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
பொய்யில்லை போற்றுமின்னே
என்று நல்லறிவுச்சுடர் கொளுத்தியுள்ளார். ஆழ்வார் தம்மை ஆட்கொண்ட திருமால், 'எல்லா சமயக் கடவுள்' என்று வலியுறுத்துகிறார். மற்றச் சமயத்தவரும் தத்தங் கடவுளைச் சமயத்தவர் போற்றுவதாகப் புகன்றுள்ளார். இதனால் அறியக் கிடக்கும் உண்மை என்னை? 'ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பெயரால் ஒரே கடவுளை வழிபடுகிறது' என்பது பெறப்படுகிறது. ஒவ்வொரு வேளையில் அடியவர், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடத்தில் தலையன்பு காட்டுவதைக் கொண்டு, அவ்வடியவரைப் போற்றுவோர் தெய்வ நிந்தனை புரிந்து, மதச்சண்டை செய்வது அறிவுடைமையாகாது.
நம்மாழ்வார் சமரச ஞான உபதேசம் பெற்ற நாடு எது? நம் தமிழ்நாடன்றோ? அத்தகை நாடு பின்னை நாளில் மதச் சண்டையால் இடர்ப்பட்டது. இன்னும் மதச்சண்டை புரிய முனைந்து நிற்போர் தமிழ் நாட்டில் இல்லாமற் போகவில்லை. இவரால் நமது தமிழ் நாட்டின் மாண்பு கெடுகிறது. ஆண்டவனருளால் மதச் சண்டை ஒழிக.
சமரச நோக்கைக் கெடுக்குங் கொடுமைகள் பல. அவை ஒவ்வொன்று ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாகத் தலைசிறந்து தீமை செய்யும். நமது நாட்டில் சாதிப்பகை அதிகம். சாதிபேதம் என்னும் பேய் சமரசத் தெய்வத்தை நிலைபெறுத்துவதில்லை. அப்பேய் பொல்லாதது. ஆழ்வாரிடம் அப்பேய் ஒன்றுஞ் செய்யவில்லை. அவர் சாதியைக் கடிகிறார். எவராயினும் அவர் ஆண்டவனுக்கு அன்பராவரேல், அவரைத் தம்மடிகள் என்று ஆழ்வார் பாடியிருக்கிறார்.
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி யார் எம்மடிகளே.
இத்திருப்பாட்டில் சாதிவேற்றுமை கடியப்பட்டிருத்தல் காண்க.
சமரச ஞானத்தால் விளையும் நலன்கள் பல. அவைகளுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கது ஒன்று. அஃது அஞ்சாமை. சத்தியமுள்ள இடத்தில் அஞ்சாமை இருத்தல் இயல்பு. சத்க்டியமானது சத்தினிடத்தது. சத் என்பது அழியாத உண்மை. அதுவே இறை. இறையினிடத்தில் உறைந்து நின்று, அது யாண்டுமிருத்தலை உணர்ந்து, சமரச ஞானம் பெற்றவர்க்குப் பகைமை ஏது?
பகைமை இல்லாத இடத்தில் அச்சம் ஏது? சமரச ஞானிகள் அவரைப் பகைத்து எதிர்க்கவும் மாட்டார்; புறமுதுகிட்டு ஓடவும் மாட்டார். அவர், அன்பால் - பொறுமையால் - உறுதியாக நிற்பர். இதுவே அஞ்சாமை என்பது. இறைவனிடம் கொள்ளும் உறுதியே அஞ்சாமை. இன்னோரன்ன நுட்பங்களெல்லாம் செறிய,
உன்னைச் சிந்தை செய்து செய்து உன்
நெடுமாமொழி இசைபாடி யாடிஎன்
முன்னைத் தீவினைகள் முழுவேர்
அரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த
இரணியன் அகல்வார்வங் கீண்ட என்
முன்னைக் கோளரியே
முடியாத தென்னெனக்கே
என்று ஆழ்வார் ஓதியிருத்தல் காண்க. 'உன்னைச் சிந்தை செய்து' என்று ஆழ்வார் அருளியதன் நுட்பத்தை ஓர்க. உண்மைப் பொருளாகிய ஆண்டவனிடத்து ஐயுறாது உறுதி கொண்டு, அவனைச் சிந்தித்துப் பாடி ஆடி எல்லாம் பெறலாம். 'உன்னைச் சிந்தனையினால் இகழ்ந்த இரணியன்' என்னுங்குறிப்பால், ஆண்டவனை இகழலாகாதென்பதை ஆழ்வார் அறிவுறுத்துகிறார். ஆழ்வார் 'என் முன்னைக் கோளரியே' என்று விளித்து, 'முடியாததென்னெனக்கே' என்று மிடுக்காக வீறு கொண்டு அஞ்சாமை காட்டுகிறார். இம்மிடுக்கும், இவ்வீறும், இவ்வஞ்சாமையும் தமிழ்நாட்டுக்கு இதுபோழ்து வேண்டற்பாலன. இவைகட்குச் சமரச ஞானம் இன்றியமையாதது.
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Saturday, February 27, 2010
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 9 வழிபாடு
வழிபாடு வாழ்வுக்கு வேண்டற்பாலது. வழிபாட்டை உயிர்களின் இயற்கை என்றுங் கூறலாம். ஒருவித வழிபாடு ஒழிந்தால் மற்றொருவித வழிபாடு இயற்கையாக வந்து சேரும். அதற்கெனத் தனி முயற்சி எதுவும் வேண்டுவதில்லை. மனிதன் வழிபாட்டை விட்டாலும் வழிபாடு அவனை விடாது. மன்பதையில் அஃது இயல்பாகவே நிகழ்ந்து வரும்.
வழிபாடே வேண்டா என்று சொல்வோரும் உளர். அவர், தம்மால் வெறுக்கப்படும் ஒன்றே வழிபாடு என்று கருதுவோராவர். அவரை அறியாமலே அவரிடம் வேறுவித வழிபாடு நிகழும். அவர் அதை வழிபாடு என்று சொல்ல விரும்பாமலிருக்கலாம். வழிபாடு என்னும் பெயரைப் பற்றிய கவலை வேண்டா. வழிபாடு என்பதற்குரிய பொருளிருப்பது போதும். வழிபாடில்லா மனித வாழ்வு இல்லையென்று கூறுதல் மிகையாகாது. வாழ்வு, வழிபாட்டைப் பின்னி நிற்கும் ஒன்று.
வழிபாடுகள் பல திறத்தன. அவற்றின் விரிவு ஈண்டைக்கு வேண்டுவதில்லை. வழிபாடு எத்திறத்தாயினுமாக, அதன் உயிராயிப்பது ஒன்று. அது தற்பயன் கருதாமை. தற்பயன் கருதாது செய்யப்படும் வழிபாடே சாலச் சிறந்தது. அதுவே கடவுளுக்குரியது.
ஆழ்வார் அருளிய பாடல்களை ஆராய்ந்தால் அவர் கொண்ட வழிபாடுகள் புலப்படும். அவைகள் பல வகையாகக் காணப்படும். அவற்றைத் திரட்டி இருகூறுபடுத்தலாம். ஒன்று புற வழிபாடு; மற்றொன்று அக வழிபாடு. பிற இவைகளின் கிளைகள்.
புற வழிபாடு, கடவுளை வேறாகவும் தன்னை வேறாகவும் கருதிச் செய்யப்படுவது. அக வழிபாடு, கடவுளைத் தன்னுள் கொண்டு தியான யோகஞ் செய்வது. இவ்விரண்டும் நாளடைவில் புறம் அகம் என்னும் வேற்றுமையை நீக்கி, எங்குமுள்ள இறையை உணர்த்திப் பிற உயிர்க்கும் தன்னுயிர்க்கும் வேற்றுமை தோன்றாப் பெருநிலை கூட்டும். வேற்றுமை தோன்றாமையே சகோதர நேயத்துக்கு அடிப்படை. ஆகவே, சகோதர நேயத்துக்கு வழிபாடு இன்றியமையாததென்றுணர்க. சகோதர நேயம் வெறும் பேச்சாலும் எழுத்தாலும் உண்டாகாது; அதற்கு வழிபாடு வேண்டும்.
வழிபாட்டால் இறையை உணர்தற்கென்று மனைவி மக்களைத் துறக்க வேண்டுவதில்லை. காட்டுக்கு ஓட வேண்டுவதில்லை; மூச்சைப் பிடிக்க வேண்டுவதில்லை. வீட்டிலிருந்தே மனைவி மக்களோடு வாழ்ந்தும், மூச்சைப் பிடியாமலும் இறையை உணர்தல் கூடும். மனைவி மக்களும் இறைவன் உடைமை; வீடு வாசலும் இறைவன் உடைமை; தானும் இறைவன் உடைமை; எல்லாம் இறைவன் உடைமை. எல்லாவற்றிலும் இறை இருக்கிறது. எதைத் துறப்பது? எதை வெறுப்பது? ஒன்றையும் துறவாமலும் வெறாமலும் எல்லாம் இறை உடைமை என்று வழிபாடு செய்யச் செய்ய உண்மை விளங்கும்.
ஆழ்வார் அறிவுறுத்திய வழிபாடுகளுள் புற வழிபாட்டை முதலில் எடுத்துக் கொள்வோம். இவ்வழிபாட்டுக்கு ஆழ்வார் திருமால் திருவுருவைக் கொழுகொம்பாகக் கொண்டார். அத்திருவுருவில் ஆழ்வார் வைத்த அன்புக்கு ஓரளவில்லை. அவ்வுருவில் அவர் நெஞ்சம் படிந்து ஒன்றுபட்டு உருகியதை எழுத்தால் எழுதல் இயலாது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது. ஆழ்வார் அன்பில் மூழ்கி அடியவராய் இறைவனுக்கு மலரிடுகிறார்; இறைவனைப் பணிகிறார்; நண்பராய் இறைவனுடன் உறவு கொள்கிறார்; குழந்தையாய் அவனிடம் விளையாடுகிறார்; தலைவியாய் அவனோடு கூடுகிறார். திருமாலின் நீலமேனியும் தாமரைக் கண்ணும் கையும் காலும் ஆழ்வாருக்கு அமிழ்தாகின்றன; அவ்வுருவில் அவர் திளைக்கிறார்; புலன்கள் ஒன்றுகின்றன; கண்கள் நீர் பொழிகின்றன; கைகள் குவிகின்றன; மயிர் சிலிர்க்கிறது. ஆழ்வார் அவ்வுருவமே ஆகிறார். அவர்தம் வாய் தமிழ் பாடுகிறது. மக்களே! அத்தமிழ் வெள்ளத்தில் படிந்து ஆடுக.
திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
எண்ணின் மீதியனெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.
வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.
வண்ணம் சிவந்துள வானா
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம்
தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து அடியனோ
டிக்கால மிருக்கின்றதே.
அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே.
புண்ணியம் செய்து நல்ல
புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம்
இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம்
செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம்
அணுகுவார் அமர ராவார்.
அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.
எழுமைக் குமென தாவிக் கின்
னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா
யிறையும் நில்லா துயரங்களே.
கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.
உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.
மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்...
திருவுருவம் ஆழ்வார் நெஞ்சில் பசுமரத்தாணி போல் படிந்துவிட்டது. உருவம் இயற்கை இறையின் படமன்றோ? இப்பொழுது அவ்வுருவம் தன் மூலத்தை உணர்த்துவதாகிறது. புற வழிபாடு அகவழிபாடாகிறது. ஆழ்வாருக்குத் தியான யோகம் கூடலாயிற்று. உருவம் சோதியாய் நிற்கிறது. சோதி புறமெல்லாம் தோன்றுகிறது. மண் புனல் காற்று விண் திங்கள் ஞாயிறு ஆகிய எல்லாம் சோதி மயமாகின்றன. எங்குஞ் சோதி! எல்லாம் இறை மயம்! வேற்றுமையே காணோம். இந்நிலை பெற்ற பெரியோர்க்கு எல்லாம் ஒன்றே.
அடங்கெழில் சம்பத்து - அடங்கக்கண் டீசன்
அடங்கெழில் அஃதென்று - அடங்குக உள்ளே.
உள்ளம் உரைசெயல் - உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை - உள்ளில் ஒடுங்கே.
உணர்வி லும்பர்...
உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனதின்னருளே...
பிரான்பெரு... ...
... ... என்னுள்
இரான் எனில் பின்னையானொட்டு வேனோ.
சொல்லீர் என்னம்மானை என்னாவி ஆவிதனை...
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானெனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடொறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும்
நீக்கமின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.
என்ன தாவி மேலையாய் ஏர்கொ ளேழுலகமும்
துன்னி முற்று மாகிநின்ற சோதிஞான மூர்த்தியாய்
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே.
புறமும் அகமும் ஒன்றும் வழிபாட்டினின்றும் எழுவது உண்மை அன்பாகும். அவ்வன்பு ஆவியினின்றும் எழுவது. அதில் விளங்குவது மெய்யறிவு. இவ்வறிவு நிலைக்கு அடிப்படை அன்பு நிலை. அன்பின்றி அறிவு விளக்குமுறாது. அன்பில்லா அறிவு அறிவாகாது. அன்பினின்றும் அரும்பும் அறிவு மெய்யறிவு; கடவுளறிவு; பேரறிவு. வாழ்வுக்கு முதல் முதல் வேண்டற்பாலது அன்பு மற்றவை பின்னை. இது பற்றியே ஆண்டவன் அன்பு வடிவாயிருக்கிறான் என்றும், அவனை அன்பால் பெறலாம் என்றும் பல அறிஞர் கூறியுள்ளனர்.
அன்பை ஒருவன் பெற வேண்டுமானால், அவன் தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்தல் வேண்டும். பேராசையும் சீவபோதமும் உள்ள இடத்தில் அன்பு நிகழாது. ஒருவன் தனக்கென்று பொருளீட்டி அதன்கண் பற்று வைத்து, ஆண்டவனை அதற்கு வேறாக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துவானாயின், அவ்வன்பு உண்மையதாகாது. பொருளை வேறாகவும், ஆண்டவனை வேறாகவும் கருதி வழிபடுவதால் பிறவித் துன்பம் வளர்ந்தே போகும். ஒருவன் தனக்கு உள்ளவற்றை ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்தால், அவன் ஆண்டவன் பிள்ளையாவான். ஆண்டவன் உடைமைகளெல்லாம் அவனுடையனவாகும்.
எல்லாம் ஆண்டவன் உடைமையாகவே இருக்கின்றன. அவனுடைய செல்வத்தில் ஒரு பகுதியை ஒருவன் தன்னுடையது என்று நினைப்பது அஞ்ஞானம். அவ்வஞ்ஞானம் நீங்கினால் தன்பொருள் பிறர்பொருள் என்ற வேற்றுமை உணர்வு ஒழியும்; எல்லாம் ஆண்டவன் பொருள் என்ற ஒருமையுணர்வு தோன்றும். அதனால் மனிதனிடத்துள்ள காமகுரோத முதலிய தீக்குணங்கள் கெடும். அக் குணங்களில்லாத இடத்தில் மெய்யன்பு நிகழும். நம்மாழ்வார், தமக்கென்று ஒன்றையுங் கொள்ளாது, எல்லாவற்றையும் ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்து, உண்பன தின்பனவும் அவன் பொருள் என்று வாழ்ந்த பேரன்பர்.
ஊனில் வாழுயிரே நல்லைபோ உனைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதனன் என்னம்மான்
தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே.
ஆராவமுதே யடியேனுடலம் நின்பாலன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே...
நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்
வினைகொள்சீர் பாடிலும் வேமெனதாருயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா
நினைகிலேன் நானுனக்காட் செய்யும் நீர்மையே.
எனவரூஉந் திருவாய்மொழிகளைக் காண்க.
அன்புப் பெருக்குக்கு அடிப்படை வழிபாடு. வழிபாடு உயிருக்கு உறுதி பயப்பது. அன்பு வெறுங் கலை ஞானத்தால் நிகழாது. ஈனமொழி மெய்களால் இடையறாது ஆண்டவனை வழிபட வழிபட அன்பு நிகழும். வழிபாட்டைச் செய்யாது, நம்மாழ்வாரின் பாடல் - எழுத்துகளை மட்டும் ஓதி, 'எல்லாம் கடவுள்' என்று வாய் வேதாந்தம் பேசுவதால் உண்மை அன்பு நிகழாது. ஆகவே வாழ்விற்கு வழிபாடு வேண்டற்பாலது. ஆழ்வார் வழிபாட்டால் இறையன்பில் தோய்ந்து பேறு பெற்றார். இறையன்பே எவ்வுயிரையும் தன்னைப் போல் கருதும் சகோதர நேயத்தைக் கூட்டுவதாகும். ஆழ்வார் காட்டிய வழி இது. அவ்வழி நிற்போமாக.
வழிபாடே வேண்டா என்று சொல்வோரும் உளர். அவர், தம்மால் வெறுக்கப்படும் ஒன்றே வழிபாடு என்று கருதுவோராவர். அவரை அறியாமலே அவரிடம் வேறுவித வழிபாடு நிகழும். அவர் அதை வழிபாடு என்று சொல்ல விரும்பாமலிருக்கலாம். வழிபாடு என்னும் பெயரைப் பற்றிய கவலை வேண்டா. வழிபாடு என்பதற்குரிய பொருளிருப்பது போதும். வழிபாடில்லா மனித வாழ்வு இல்லையென்று கூறுதல் மிகையாகாது. வாழ்வு, வழிபாட்டைப் பின்னி நிற்கும் ஒன்று.
வழிபாடுகள் பல திறத்தன. அவற்றின் விரிவு ஈண்டைக்கு வேண்டுவதில்லை. வழிபாடு எத்திறத்தாயினுமாக, அதன் உயிராயிப்பது ஒன்று. அது தற்பயன் கருதாமை. தற்பயன் கருதாது செய்யப்படும் வழிபாடே சாலச் சிறந்தது. அதுவே கடவுளுக்குரியது.
ஆழ்வார் அருளிய பாடல்களை ஆராய்ந்தால் அவர் கொண்ட வழிபாடுகள் புலப்படும். அவைகள் பல வகையாகக் காணப்படும். அவற்றைத் திரட்டி இருகூறுபடுத்தலாம். ஒன்று புற வழிபாடு; மற்றொன்று அக வழிபாடு. பிற இவைகளின் கிளைகள்.
புற வழிபாடு, கடவுளை வேறாகவும் தன்னை வேறாகவும் கருதிச் செய்யப்படுவது. அக வழிபாடு, கடவுளைத் தன்னுள் கொண்டு தியான யோகஞ் செய்வது. இவ்விரண்டும் நாளடைவில் புறம் அகம் என்னும் வேற்றுமையை நீக்கி, எங்குமுள்ள இறையை உணர்த்திப் பிற உயிர்க்கும் தன்னுயிர்க்கும் வேற்றுமை தோன்றாப் பெருநிலை கூட்டும். வேற்றுமை தோன்றாமையே சகோதர நேயத்துக்கு அடிப்படை. ஆகவே, சகோதர நேயத்துக்கு வழிபாடு இன்றியமையாததென்றுணர்க. சகோதர நேயம் வெறும் பேச்சாலும் எழுத்தாலும் உண்டாகாது; அதற்கு வழிபாடு வேண்டும்.
வழிபாட்டால் இறையை உணர்தற்கென்று மனைவி மக்களைத் துறக்க வேண்டுவதில்லை. காட்டுக்கு ஓட வேண்டுவதில்லை; மூச்சைப் பிடிக்க வேண்டுவதில்லை. வீட்டிலிருந்தே மனைவி மக்களோடு வாழ்ந்தும், மூச்சைப் பிடியாமலும் இறையை உணர்தல் கூடும். மனைவி மக்களும் இறைவன் உடைமை; வீடு வாசலும் இறைவன் உடைமை; தானும் இறைவன் உடைமை; எல்லாம் இறைவன் உடைமை. எல்லாவற்றிலும் இறை இருக்கிறது. எதைத் துறப்பது? எதை வெறுப்பது? ஒன்றையும் துறவாமலும் வெறாமலும் எல்லாம் இறை உடைமை என்று வழிபாடு செய்யச் செய்ய உண்மை விளங்கும்.
ஆழ்வார் அறிவுறுத்திய வழிபாடுகளுள் புற வழிபாட்டை முதலில் எடுத்துக் கொள்வோம். இவ்வழிபாட்டுக்கு ஆழ்வார் திருமால் திருவுருவைக் கொழுகொம்பாகக் கொண்டார். அத்திருவுருவில் ஆழ்வார் வைத்த அன்புக்கு ஓரளவில்லை. அவ்வுருவில் அவர் நெஞ்சம் படிந்து ஒன்றுபட்டு உருகியதை எழுத்தால் எழுதல் இயலாது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது. ஆழ்வார் அன்பில் மூழ்கி அடியவராய் இறைவனுக்கு மலரிடுகிறார்; இறைவனைப் பணிகிறார்; நண்பராய் இறைவனுடன் உறவு கொள்கிறார்; குழந்தையாய் அவனிடம் விளையாடுகிறார்; தலைவியாய் அவனோடு கூடுகிறார். திருமாலின் நீலமேனியும் தாமரைக் கண்ணும் கையும் காலும் ஆழ்வாருக்கு அமிழ்தாகின்றன; அவ்வுருவில் அவர் திளைக்கிறார்; புலன்கள் ஒன்றுகின்றன; கண்கள் நீர் பொழிகின்றன; கைகள் குவிகின்றன; மயிர் சிலிர்க்கிறது. ஆழ்வார் அவ்வுருவமே ஆகிறார். அவர்தம் வாய் தமிழ் பாடுகிறது. மக்களே! அத்தமிழ் வெள்ளத்தில் படிந்து ஆடுக.
திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
எண்ணின் மீதியனெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.
வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.
வண்ணம் சிவந்துள வானா
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம்
தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து அடியனோ
டிக்கால மிருக்கின்றதே.
அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே.
புண்ணியம் செய்து நல்ல
புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம்
இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம்
செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம்
அணுகுவார் அமர ராவார்.
அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.
எழுமைக் குமென தாவிக் கின்
னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா
யிறையும் நில்லா துயரங்களே.
கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.
உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.
மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்...
திருவுருவம் ஆழ்வார் நெஞ்சில் பசுமரத்தாணி போல் படிந்துவிட்டது. உருவம் இயற்கை இறையின் படமன்றோ? இப்பொழுது அவ்வுருவம் தன் மூலத்தை உணர்த்துவதாகிறது. புற வழிபாடு அகவழிபாடாகிறது. ஆழ்வாருக்குத் தியான யோகம் கூடலாயிற்று. உருவம் சோதியாய் நிற்கிறது. சோதி புறமெல்லாம் தோன்றுகிறது. மண் புனல் காற்று விண் திங்கள் ஞாயிறு ஆகிய எல்லாம் சோதி மயமாகின்றன. எங்குஞ் சோதி! எல்லாம் இறை மயம்! வேற்றுமையே காணோம். இந்நிலை பெற்ற பெரியோர்க்கு எல்லாம் ஒன்றே.
அடங்கெழில் சம்பத்து - அடங்கக்கண் டீசன்
அடங்கெழில் அஃதென்று - அடங்குக உள்ளே.
உள்ளம் உரைசெயல் - உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை - உள்ளில் ஒடுங்கே.
உணர்வி லும்பர்...
உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனதின்னருளே...
பிரான்பெரு... ...
... ... என்னுள்
இரான் எனில் பின்னையானொட்டு வேனோ.
சொல்லீர் என்னம்மானை என்னாவி ஆவிதனை...
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானெனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடொறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும்
நீக்கமின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.
என்ன தாவி மேலையாய் ஏர்கொ ளேழுலகமும்
துன்னி முற்று மாகிநின்ற சோதிஞான மூர்த்தியாய்
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே.
புறமும் அகமும் ஒன்றும் வழிபாட்டினின்றும் எழுவது உண்மை அன்பாகும். அவ்வன்பு ஆவியினின்றும் எழுவது. அதில் விளங்குவது மெய்யறிவு. இவ்வறிவு நிலைக்கு அடிப்படை அன்பு நிலை. அன்பின்றி அறிவு விளக்குமுறாது. அன்பில்லா அறிவு அறிவாகாது. அன்பினின்றும் அரும்பும் அறிவு மெய்யறிவு; கடவுளறிவு; பேரறிவு. வாழ்வுக்கு முதல் முதல் வேண்டற்பாலது அன்பு மற்றவை பின்னை. இது பற்றியே ஆண்டவன் அன்பு வடிவாயிருக்கிறான் என்றும், அவனை அன்பால் பெறலாம் என்றும் பல அறிஞர் கூறியுள்ளனர்.
அன்பை ஒருவன் பெற வேண்டுமானால், அவன் தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்தல் வேண்டும். பேராசையும் சீவபோதமும் உள்ள இடத்தில் அன்பு நிகழாது. ஒருவன் தனக்கென்று பொருளீட்டி அதன்கண் பற்று வைத்து, ஆண்டவனை அதற்கு வேறாக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துவானாயின், அவ்வன்பு உண்மையதாகாது. பொருளை வேறாகவும், ஆண்டவனை வேறாகவும் கருதி வழிபடுவதால் பிறவித் துன்பம் வளர்ந்தே போகும். ஒருவன் தனக்கு உள்ளவற்றை ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்தால், அவன் ஆண்டவன் பிள்ளையாவான். ஆண்டவன் உடைமைகளெல்லாம் அவனுடையனவாகும்.
எல்லாம் ஆண்டவன் உடைமையாகவே இருக்கின்றன. அவனுடைய செல்வத்தில் ஒரு பகுதியை ஒருவன் தன்னுடையது என்று நினைப்பது அஞ்ஞானம். அவ்வஞ்ஞானம் நீங்கினால் தன்பொருள் பிறர்பொருள் என்ற வேற்றுமை உணர்வு ஒழியும்; எல்லாம் ஆண்டவன் பொருள் என்ற ஒருமையுணர்வு தோன்றும். அதனால் மனிதனிடத்துள்ள காமகுரோத முதலிய தீக்குணங்கள் கெடும். அக் குணங்களில்லாத இடத்தில் மெய்யன்பு நிகழும். நம்மாழ்வார், தமக்கென்று ஒன்றையுங் கொள்ளாது, எல்லாவற்றையும் ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்து, உண்பன தின்பனவும் அவன் பொருள் என்று வாழ்ந்த பேரன்பர்.
ஊனில் வாழுயிரே நல்லைபோ உனைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதனன் என்னம்மான்
தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே.
ஆராவமுதே யடியேனுடலம் நின்பாலன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே...
நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்
வினைகொள்சீர் பாடிலும் வேமெனதாருயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா
நினைகிலேன் நானுனக்காட் செய்யும் நீர்மையே.
எனவரூஉந் திருவாய்மொழிகளைக் காண்க.
அன்புப் பெருக்குக்கு அடிப்படை வழிபாடு. வழிபாடு உயிருக்கு உறுதி பயப்பது. அன்பு வெறுங் கலை ஞானத்தால் நிகழாது. ஈனமொழி மெய்களால் இடையறாது ஆண்டவனை வழிபட வழிபட அன்பு நிகழும். வழிபாட்டைச் செய்யாது, நம்மாழ்வாரின் பாடல் - எழுத்துகளை மட்டும் ஓதி, 'எல்லாம் கடவுள்' என்று வாய் வேதாந்தம் பேசுவதால் உண்மை அன்பு நிகழாது. ஆகவே வாழ்விற்கு வழிபாடு வேண்டற்பாலது. ஆழ்வார் வழிபாட்டால் இறையன்பில் தோய்ந்து பேறு பெற்றார். இறையன்பே எவ்வுயிரையும் தன்னைப் போல் கருதும் சகோதர நேயத்தைக் கூட்டுவதாகும். ஆழ்வார் காட்டிய வழி இது. அவ்வழி நிற்போமாக.
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Friday, January 22, 2010
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 8 மூவர் முதல்
தொழில் மூன்று. அவை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்பன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூர்த்தியுண்டு. இவர் மும்மூர்த்தி எனப்படுவர். மும்மூர்த்திகட்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. மும்மூர்த்திகளைப் பிர்மா - விஷ்ணு - ருத்ரன் - என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரிஸ் - ஐஸிஸ் - ஹோரஸ் (எகிப்தியர்); ஓடின் - பிரீயா - தார் (ஸ்காண்டிநேவியர்); ஆனு - இயா - பேல் (அஸ்ரியர்); தௌலாக் - பான் - மொல்லாக் (துருயுதர்); அமிர்தாப்பர் - அவலோகீதீசுரர் - மஞ்ஜுசுரி (வட புலப்புத்தர்); கேதர் - பினா - சொக்மா (யூதர்); அஹுரமஜதர் - மித்திரர் - அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப்படுகிறது. மும்மூர்த்தி வழக்கு உலகுக்குப் போது என்பது உணரத்தக்கது.
மும்மூர்த்திகளும் முத்தொழில் செய்பவராதலின், அவர்கள் முழுமுதற்பொருள் அல்லர். முழுமுதற் பொருளின் அருட்சுடர், அவர்களிடம் பாய்ந்து, அவர்களை இயக்குகிறது. இது பற்றியே, வடமொழி வேதம், முழுமுதற்பொருள் மும்மூர்த்திகட்கும் மேம்பட்டது என்றும், அது சதுர்த்தம் என்றும் கூறுகிறது. தமிழ் நாட்டிற்றோன்றித் தமிழ் வேதம் அருளிய சைவ வைணவ குரவன்மாரும் முழுமுதலை மூவராய முதல்வன் என்றும், மூவருள் முதல்வன் என்றும், மூவர்க்கும் முதல்வன் என்றும் போற்றிப் போந்தனர். இதுபற்றி நம்மாழ்வார் வாயிலாகப் பிறந்த திருமொழிகளைப் பார்ப்போம்.
குறிப்பில்... ...
... ... மூவரில்
முதல்வனாக ... .... - திருவாசிரியம் - 3
முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்...
தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்...
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை...
தஞ்சமாகிய... ...
... ... மூவர் தம்முள்ளும் ஆதியை...
தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
மூவர் முதல்வன் ஒருமூவுல காளி...
தமிழ்நாட்டிற் றோன்றிய அறிஞர் நான்காவது பொருளைக் கண்டு போற்றியது தமிழ்மக்களின் தத்துவ ஆராய்ச்சித் திறத்தைப் புலப்படுத்துகிறது. அந் நான்காம் பொருளைக் காண்போர் சமரச ஞானிகளாய் வாழ்வர். நம்மாழ்வார் சமரச ஞானத்தால் தமிழ்நாட்டை ஓம்பியது பின்னர் விளக்கப்படும்.
நான்காவது பொருள் ஒன்றே. அதுவே பரம்பொருள். அதற்கு உலகில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயரில்லா ஒன்றற்கு எப்பெயரை வழங்கினாலென்ன?
'யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே'
என்றார் நம்மாழ்வாரும். பேரில்லாப்பொருளுகுச் சிவன், விஷ்ணு, யோஹோவா, அல்லா முதலிய நற்பெயர்கள் உலகில் வழங்கப்படுகின்றன.
நமது நாட்டில் ஒரு சிக்கு உண்டு. அது, சிவன் விஷ்ணு என்னும் பெயர்கள், மும்மூர்த்திகளின் பெயர்களிலும் முழுமுதற் பொருளுக்குரிய பெயர்களிலும் வருவது. பெயர்களில் ஒற்றுமை இருந்தாலும் பொருளில் வேற்றுமை இருக்கிறது. அவ்வேற்றுமை உணர்வோர்க்கு எவ்வித ஐயப்பாடும் எழாது.
சைவ குரவர், விஷ்ணு அறியாச் சிவன் என்றும், சிவனே விஷ்ணு என்றும் சொல்லியுள்ளார். அவ்வாறே வைணவ குரவரும் சிவன் அறியா விஷ்ணு என்றும், விஷ்ணுவே சிவன் என்றும் கூறியுள்ளார். இவர்தம் வாய்மைகளின் உட்பொருளை உணர்ந்தால் உண்மை விளங்கும் விஷ்ணு அறியாச் சிவன் என்பதிலுள்ள விஷ்ணு மும்மூர்த்தியைச் சேர்ந்தவர். சிவனே விஷ்ணு என்பதிலுள்ள விஷ்ணு முழுமுதற் பொருள். சிவனறியா விஷ்ணு என்பதிலுள்ள சிவன் பெயர் மும்மூர்த்திகளுள் சேர்ந்தது. விஷ்ணுவே சிவன் என்பதிலுள்ள சிவன் பெயர் முழுமுதலுக்குரியது.
முழுமுதற் பொருளுக்கு ஊர் பேர் ஒன்றுமில்லை. ஒன்று மில்லா ஒன்றற்குப் பல பெயர்கள் உரைக்கப்படுகின்றன. அப் பெயர் ஒவ்வொன்றும் முழுமுதற் றன்மையை உணர்த்துவது. முழுமுதற் பொருள் வியாபகமுடையது; மங்களமுடையது. வியாபகமுடையது விஷ்ணு; மங்களமுடையது சிவம். இரண்டும் ஒன்றையே உணர்த்துதல் காண்க.
செக்கர் மாமுகி... ...
சிவனியனிந்திரன் இவர்முத லனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
... .... ...
... ... ...
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட ... (திருவாசிரியம்)
என்றும்,
வரிவளையால்... ...
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான்... ...
என்றும்,
பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே... ...
என்றும்,
தளர்ந்தும்... ...
கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே
என்றும்,
நோலா தாற்றேன்... .... ...
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே
என்றும் ஆழ்வார் அருளிய மொழிகளிற் போந்துள்ள சிவநாமங்கள் மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய உருத்திரனை உணர்த்துவன.
சுரரறி ... ...
... ... பராபரன்
புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
அரனயனெனவுல கழித்தமைத் துளனே
எனவும்,
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் ... ...
எனவும்,
கள்ள வேடத்தை ... ....
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை
வேறலாமை விளங்க நின்றதும் ...
எனவும்,
வேறுகொண்டு ... ...
ஏறு சேவகனார்க் கென்னையு முளளென்மின்களே
எனவும்,
என் திருமார்பன் தன்னை
என் மலைமகள் கூறன் தன்னை...
எனவும்,
என்னப்பன் எனக்கா யிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப் பனுமாய்... ...
எனவும் வரூஉந் திருவாய்மொழ்களிற் போந்துள்ள சிவ நாமங்கள் முழுமுதலைக் குறிப்பன.
நம்மாழ்வார், மும்மூர்த்துகளுக்கு மேம்பட்ட பரம்பொருளைத் திருமால் என்னும் பெயராகவே வழிபட்டவர். அப் பொருளைப் போற்றுவதே சிறப்பு, அஃது ஒன்றே; அதற்குப் பெயர்கள் பல.
மும்மூர்த்திகளும் முத்தொழில் செய்பவராதலின், அவர்கள் முழுமுதற்பொருள் அல்லர். முழுமுதற் பொருளின் அருட்சுடர், அவர்களிடம் பாய்ந்து, அவர்களை இயக்குகிறது. இது பற்றியே, வடமொழி வேதம், முழுமுதற்பொருள் மும்மூர்த்திகட்கும் மேம்பட்டது என்றும், அது சதுர்த்தம் என்றும் கூறுகிறது. தமிழ் நாட்டிற்றோன்றித் தமிழ் வேதம் அருளிய சைவ வைணவ குரவன்மாரும் முழுமுதலை மூவராய முதல்வன் என்றும், மூவருள் முதல்வன் என்றும், மூவர்க்கும் முதல்வன் என்றும் போற்றிப் போந்தனர். இதுபற்றி நம்மாழ்வார் வாயிலாகப் பிறந்த திருமொழிகளைப் பார்ப்போம்.
குறிப்பில்... ...
... ... மூவரில்
முதல்வனாக ... .... - திருவாசிரியம் - 3
முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்...
தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்...
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை...
தஞ்சமாகிய... ...
... ... மூவர் தம்முள்ளும் ஆதியை...
தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
மூவர் முதல்வன் ஒருமூவுல காளி...
தமிழ்நாட்டிற் றோன்றிய அறிஞர் நான்காவது பொருளைக் கண்டு போற்றியது தமிழ்மக்களின் தத்துவ ஆராய்ச்சித் திறத்தைப் புலப்படுத்துகிறது. அந் நான்காம் பொருளைக் காண்போர் சமரச ஞானிகளாய் வாழ்வர். நம்மாழ்வார் சமரச ஞானத்தால் தமிழ்நாட்டை ஓம்பியது பின்னர் விளக்கப்படும்.
நான்காவது பொருள் ஒன்றே. அதுவே பரம்பொருள். அதற்கு உலகில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயரில்லா ஒன்றற்கு எப்பெயரை வழங்கினாலென்ன?
'யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே'
என்றார் நம்மாழ்வாரும். பேரில்லாப்பொருளுகுச் சிவன், விஷ்ணு, யோஹோவா, அல்லா முதலிய நற்பெயர்கள் உலகில் வழங்கப்படுகின்றன.
நமது நாட்டில் ஒரு சிக்கு உண்டு. அது, சிவன் விஷ்ணு என்னும் பெயர்கள், மும்மூர்த்திகளின் பெயர்களிலும் முழுமுதற் பொருளுக்குரிய பெயர்களிலும் வருவது. பெயர்களில் ஒற்றுமை இருந்தாலும் பொருளில் வேற்றுமை இருக்கிறது. அவ்வேற்றுமை உணர்வோர்க்கு எவ்வித ஐயப்பாடும் எழாது.
சைவ குரவர், விஷ்ணு அறியாச் சிவன் என்றும், சிவனே விஷ்ணு என்றும் சொல்லியுள்ளார். அவ்வாறே வைணவ குரவரும் சிவன் அறியா விஷ்ணு என்றும், விஷ்ணுவே சிவன் என்றும் கூறியுள்ளார். இவர்தம் வாய்மைகளின் உட்பொருளை உணர்ந்தால் உண்மை விளங்கும் விஷ்ணு அறியாச் சிவன் என்பதிலுள்ள விஷ்ணு மும்மூர்த்தியைச் சேர்ந்தவர். சிவனே விஷ்ணு என்பதிலுள்ள விஷ்ணு முழுமுதற் பொருள். சிவனறியா விஷ்ணு என்பதிலுள்ள சிவன் பெயர் மும்மூர்த்திகளுள் சேர்ந்தது. விஷ்ணுவே சிவன் என்பதிலுள்ள சிவன் பெயர் முழுமுதலுக்குரியது.
முழுமுதற் பொருளுக்கு ஊர் பேர் ஒன்றுமில்லை. ஒன்று மில்லா ஒன்றற்குப் பல பெயர்கள் உரைக்கப்படுகின்றன. அப் பெயர் ஒவ்வொன்றும் முழுமுதற் றன்மையை உணர்த்துவது. முழுமுதற் பொருள் வியாபகமுடையது; மங்களமுடையது. வியாபகமுடையது விஷ்ணு; மங்களமுடையது சிவம். இரண்டும் ஒன்றையே உணர்த்துதல் காண்க.
செக்கர் மாமுகி... ...
சிவனியனிந்திரன் இவர்முத லனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
... .... ...
... ... ...
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட ... (திருவாசிரியம்)
என்றும்,
வரிவளையால்... ...
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான்... ...
என்றும்,
பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே... ...
என்றும்,
தளர்ந்தும்... ...
கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே
என்றும்,
நோலா தாற்றேன்... .... ...
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே
என்றும் ஆழ்வார் அருளிய மொழிகளிற் போந்துள்ள சிவநாமங்கள் மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய உருத்திரனை உணர்த்துவன.
சுரரறி ... ...
... ... பராபரன்
புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
அரனயனெனவுல கழித்தமைத் துளனே
எனவும்,
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் ... ...
எனவும்,
கள்ள வேடத்தை ... ....
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை
வேறலாமை விளங்க நின்றதும் ...
எனவும்,
வேறுகொண்டு ... ...
ஏறு சேவகனார்க் கென்னையு முளளென்மின்களே
எனவும்,
என் திருமார்பன் தன்னை
என் மலைமகள் கூறன் தன்னை...
எனவும்,
என்னப்பன் எனக்கா யிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப் பனுமாய்... ...
எனவும் வரூஉந் திருவாய்மொழ்களிற் போந்துள்ள சிவ நாமங்கள் முழுமுதலைக் குறிப்பன.
நம்மாழ்வார், மும்மூர்த்துகளுக்கு மேம்பட்ட பரம்பொருளைத் திருமால் என்னும் பெயராகவே வழிபட்டவர். அப் பொருளைப் போற்றுவதே சிறப்பு, அஃது ஒன்றே; அதற்குப் பெயர்கள் பல.
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Saturday, January 2, 2010
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 7 அவதாரம்
'உருவங்கள் தத்துவ நுட்பங்களாயின், அவதாரங்களின் கருத்து என்னை?' என்று சிலர் கேட்கலாம். கேட்பதற்கு இடனும் உண்டு. அவதாரங்களைப் பற்றிப் பலவிதக் கருத்துக்கள் உலகில் உலவி வருகின்றன. அவைகளைப் பற்றி எழுந்த வாதப் போர்களும் பல. 'இறைவன் மனிதனாக அவதரிப்பன்' என்று சிலர் கூறுவர். 'எங்குமுள்ள இறைவன் எங்ஙனம் மனிதனாக அவதரித்தல் கூடும்' என்றும், ஆகவே, 'இறைவன் மனிதனாக அவதரியான்' என்றும், 'இறை ஆணைப்படி அவதரிக்கும் குருவை உபசாரமாக அன்பால் இறைவன் என்று சொல்வது உலக வழக்கு' என்றும் வேறு சிலர் கூறுவர். 'வீரரையும் குருமாரையும் நாளேற நாளேற இறைவன் அவதாரமென்பது உலகியல்' என்று மற்றுஞ் சிலர் கூறுவர். இன்னும் பலப்பலவாறு கூறுவோருமுளர். ஆழ்வார் அவதாரங்களைத் தள்ளவில்லை. அவர் அவைகள ஏற்றுப் போற்றியே இருக்கிறார்.
ஆனானாளுடையான் என்றஃ
தேகொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்தென்னை
முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நரசிங்க
முமாய்க் குறளாய்
கானார் ஏனமுமாய்க் கற்கியா
மின்னம் கார்வண்ணனே.
சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதியஞ்சோதி உருவை
அங்குவைத் திங்குப்பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என்சவிப் பார்மனிசரே.
காண்டுங்கொலோ நெஞ்சமே
கடியவினையே முயலும்
ஆண்டிறல் மீளிமொய்ம்பின்
அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டுமவன் தம்பிக்கே
விரிநீர் இலங்கையருளி
ஆண்டுதன் சோதிபுக்க
அமரர் அரியேற்றினையே.
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
நமக்கு ஆயர் குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு
மாயங்களே இயற்றி
கூற்றியல் கஞ்சனைக் கொன்று
ஐவர்க்காய் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல்மிக் கான்பெரிய
பரஞ்சோதி புக்கவரியே.
என வரூஉந் திருவாக்குக்களை நோக்குக.
அவதாரங்களைப் பற்றி யான் பன்முறை சிந்திப்பதுண்டு; ஆராய்வதுண்டு. சிந்தனையாலும் ஆராய்ச்சியாலும் எனக்கு டார்வின் கொள்கையில் உறுதி ஏற்பட்டு விட்டது. டார்வின் முதலியோரை நாத்திகர் என்று தள்ளுதல் அறிவுடைமையாகாது. அவர்தம் ஆராய்ச்சித் திறன்கள், நம் பெரியார் கண்ட அநுபவங்களுக்கு எவ்வெவ் வழியில் அரண்செய்கின்றன என்று பார்ப்பது அறிவுக்கு அழகு. டார்வின் முதலிய பேரறிஞர் கண்ட பல உண்மைகள், நமது நாட்டில் பல புராணக் கதைகளாக நிலவி வருகின்றன. புராணக் கதைகளை உள்ளவாறே கொள்வது பௌராணிக மதமாகும். ஞான நூல் ஆராய்ச்சியுடையவர், புராணக் கதைகளை அப்படியே கொள்வதில்லை. அவர், கதைகளின் உட்கிடக்கைகளைக் காணவே முயல்வர். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து தெளிவடைவது சிறப்பு.
உலகை நோக்குவோம். தாவர முதல் மக்கள் ஈறாக உலகம் ஆக்கப்பட்டிருத்தலைக் காண்கிறோம். தாவர முதல் மக்கள் ஈறாக உள்ளன யாவும் உயிர்களே. அவைகள் உடலமைப்பில் வேற்றுமையுறுகின்றன. அவ்வவ்வுடலமைப்புக்கேற்ற வண்ணம் அவ்வவ்வுயிர் அறிவு விளக்கம் பெறுகிறது. இது பற்றியே முன்னோர், உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவுவரை வகுத்துக் காட்டினர் போலும். உயிர்களின் அறிவு உடலமைப்புக்கேற்ற வண்ணம் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். அவ்வளர்ச்சி புதிய ஒன்றிலிருந்து உறுவதில்லை. வளர்ச்சி, உள்ளத்திலிருந்தே உறுகிறது. இது கூர்தல் (Evolution) எனப்படும். (கூர்தல் - உள்ளது சிறத்தல்). இக் கூர்தல் நியாயப்படியே டார்வின், உயிர் வரலாற்றை விளக்கிப் போந்தனர்.
நம் நாட்டவர் கொண்டுள்ள அவதாரங்களைப் பார்ப்போம். அவை மச்சத்தினின்றும் தொடங்குகின்றன. ஒவ்வொன்றும் படிப்படியே வளர்ந்து வருதல் கருதற்பாலது. மச்சம் நீரில் வாழ்வது. அது நிலத்தில் நகர்தலுஞ் செய்யாது. கூர்மம் (ஆமை) சிறு கால் கொண்டு ஊர்ந்து செல்வது. வராகம் நன்றாக நடக்க வல்லது. நரசிம்மம், விலங்கினமும் மனித உருவும் கலந்தது. மனிதத் தோற்றத்துக்குக் கால்கொண்ட இடம் இதுவே. பின்னே வாமனன் தோன்றினன். வாமனன் மனிதனாயினும், அவன் முதலில் தோன்றினவனாதலின், அவன்பால் மனிதப் பிறவிக்குரிய முழுமை விளங்கவில்லை. அவன் குறளனாகவே இருந்தான். பரசுராமன் முழு மனிதன்; ஆனால் சாந்தமில்லாதவன். ச்ரிராமன் அழகன்; சாந்தமுடையவன்; ஒவ்வொருபோது பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன். கண்ணன் மனித உடலும் தெய்வ நிலையும் உடையவன்; எப்பொழுதும் பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன்.
இவ்வவதாரம் ஒவ்வொன்றும் உயிர் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையை உணர்த்துவது. இந் நிலையை நம்மவர் கற்பம் என்பர். உயிர் வர்க்கம் மீனா யிருந்தது ஒரு கற்பம்; ஆமையானது மற்றொரு கற்பம்; இவ்வாறே பிறவும்.
அவதாரங்களை இறைவன் மீது ஏற்றுவது என்னை? இஃது உன்னத் தக்கது. உயிர்கட்கு அறியாமைக் கட்டு உண்டு. அதனால் அவைகட்கு இயல்பில் அறிவு விளங்குவதில்லை. அறிவு விளக்கத்துக்கென அவைகள், மாயா உடலங்களைத் தாங்குகின்றன. அவ்வுடலால் அறிவு விளங்கப்பெறுகின்றன. அறியாமையால் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள், தாங்களே மாயா உடலங்களை எங்ஙனம் தாங்க வல்லனவாகும்? இதற்கு ஒரு துணை இன்றியமையாததாகிறது. அத் துணை, அறியாமைக் கட்டில்லாததாயிருத்தல் வேண்டும். அப்பொழுதே அஃது அறியாமைக் கட்டுடைய உயிர்கட்குத் துணை செய்ய வல்லதாகும்.
அறியாமைக் கட்டில்லா ஒன்றே சித் என்னுஞ் செம்பொருள். அச் சித், எங்கும் நிறைந்தது; எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது. அஃது உயிர்களின் உள்ளும் புறமும் நின்று, அவைகள் மாயா உடலங்களைத் தாங்கத் துணை செய்கிறது. அத் துணையின்றி உயிர்கள் மாயா உடலங்களைத் தாங்குதல் அரிது. இதனால் துணையின் பெருமை விளங்குதல் காண்க. சித் என்னுஞ் செம்பொருளின் துணையால், எல்லாம் நிகழ்வதால், எந்நிகழ்ச்சியையும் அதன்பாற்படுத்திச் சொல்வது ஒருவித மரபு. அம் மரபு பற்றிப் புராணங்கள் அவதாரங்களை ஆண்டவன் பாற்படுத்தின போலும். இம் முறையில் அவதார நுட்பம் எனக்கு விளங்குகிறது. அக் கண்ணுங் கருத்துங் கொண்டு ஆழ்வார் கூறிய அவதாரங்கலை நோக்குகிறேன். யான் மனிதன்; குறையுடையவன்; எனக்கு இப்பொழுது விளங்கியுள்ளதை விளம்பினேன்.
திருமால் அடியவர் மண்மீது பிறத்தலை ஆழ்வார் பலபடப் பாடியுள்ளார். அங்ஙனம் அவர் பாடியது சிந்திக்கற்பாலது.
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்
தொண்டீ ரெல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்டான் பாடிநின் றாடிப்
பரந்து திரிகின் றனவே.
திரியும் கலியுகம் நீங்கித்
தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப்
பேரின்ப வெள்ளம் பெருக,
கரியமுகில் வண்ணன் எம்மான்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்திசை பாடி
எங்கும் இடங்கொண் டனவே.
இடங்கொள் சமயத்தை எல்லாம்
எடுத்துக் களைவன போலே
தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும்
நாடகம் செய்கின் றனவே.
கொன்றுயி ருண்ணும் விசாதி
பகைபசி தீயன வெல்லாம்
நின்றிவ் வுலகில் கடிவான்
நேமிப் பிராந்தமர் போந்தார்
நன்றிசை பாடியும் துள்ளி
ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்
சிந்தையைச் செந் நிறுத்தியே.
இப் பாடல்களை உன்னுக.
அவதாரங்களால் உயிர்கட்கு நலன் உண்டு என்பது ஆழ்வார் கருத்து. அக் கருத்தை ஆழ்வார் பாடல்களிற் காண்க.
நாட்டில் பிறந்தவர் நாரணற்
காளன்றி யாவரோ
நாட்டில் பிறந்து படாதன
பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை
நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்துய்யச் செய்து
நடந்தமை கேட்டுமே.
மாய மறிபவர் மாயவற்
காளன்றி யாவரோ
தாயம் செறுமொரு நூற்றுவர்
மயங்கஓ ரைவர்க்காய்
தேசம் அறியவோர் சாரதி
யாய்ச்சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்தநல்
வார்த்தை அறிந்துமே.
கண்ணனல்லா லில்லை கண்டீர்
சரண் அதுநிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்துய்ம் மினோ
எண்ணவேண்டா நும்ம தாது
மவனன்றி மற்றில்லையே.
இத் திருப்பாடல்களில் கண்ணனெம் பெருமான், சாது சனங்களைக் காத்தற் பொருட்டும் - கொடியவரை ஒறுத்து மண்ணின் சுமை நீக்குதற்பொருட்டும் - வந்தான் என்பது திறம்பட வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இதை உன்னுமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஈண்டு நாம் அறியத்தக்க உண்மை ஒன்றுளது. அது, கண்ணன்பால் அன்பு செலுத்துவோர் அனைவரும் - அவனடி சேர முயல்வோர் எல்லோரும் - சாது தர்மத்தை நாட்டவும் அதர்மத்தை வீழ்த்தவும், கண்ணனைப் போல, ஒல்லும் வகை முயலுதல் வேண்டும் என்பது. கண்ணன் அவதாரத்தால் அறியக் கிடக்கும் உண்மைகளுள் தலையாயது இதுவே என்றுங் கூறலாம். இத்தகைய தொண்டு செய்யாது, கண்ணபிரான் ஆலயத்தை மட்டும் வலம் வருவதாலும், சந்நியாசங் கொண்டு காடு நோக்கி ஓடுவதாலும், வேறு பல தன்னல உழைப்பாலும் பிறவி நோக்கம் நிறைவேறாது. கண்ணன் காட்டிய வழியை நாமும் கடைப்பிடிப்போமாக. ஆழ்வாரும் அந் நெறியைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். இப்பொழுது உலகம் உரிமையிழந்து வாடுகிறது. இவ் வேளையில் உரிமைக்கு உழைப்பது கண்ணன் திருவடிக்குச் செய்யும் திருத்தொண்டாகும்.
ஆனானாளுடையான் என்றஃ
தேகொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்தென்னை
முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நரசிங்க
முமாய்க் குறளாய்
கானார் ஏனமுமாய்க் கற்கியா
மின்னம் கார்வண்ணனே.
சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதியஞ்சோதி உருவை
அங்குவைத் திங்குப்பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என்சவிப் பார்மனிசரே.
காண்டுங்கொலோ நெஞ்சமே
கடியவினையே முயலும்
ஆண்டிறல் மீளிமொய்ம்பின்
அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டுமவன் தம்பிக்கே
விரிநீர் இலங்கையருளி
ஆண்டுதன் சோதிபுக்க
அமரர் அரியேற்றினையே.
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
நமக்கு ஆயர் குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு
மாயங்களே இயற்றி
கூற்றியல் கஞ்சனைக் கொன்று
ஐவர்க்காய் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல்மிக் கான்பெரிய
பரஞ்சோதி புக்கவரியே.
என வரூஉந் திருவாக்குக்களை நோக்குக.
அவதாரங்களைப் பற்றி யான் பன்முறை சிந்திப்பதுண்டு; ஆராய்வதுண்டு. சிந்தனையாலும் ஆராய்ச்சியாலும் எனக்கு டார்வின் கொள்கையில் உறுதி ஏற்பட்டு விட்டது. டார்வின் முதலியோரை நாத்திகர் என்று தள்ளுதல் அறிவுடைமையாகாது. அவர்தம் ஆராய்ச்சித் திறன்கள், நம் பெரியார் கண்ட அநுபவங்களுக்கு எவ்வெவ் வழியில் அரண்செய்கின்றன என்று பார்ப்பது அறிவுக்கு அழகு. டார்வின் முதலிய பேரறிஞர் கண்ட பல உண்மைகள், நமது நாட்டில் பல புராணக் கதைகளாக நிலவி வருகின்றன. புராணக் கதைகளை உள்ளவாறே கொள்வது பௌராணிக மதமாகும். ஞான நூல் ஆராய்ச்சியுடையவர், புராணக் கதைகளை அப்படியே கொள்வதில்லை. அவர், கதைகளின் உட்கிடக்கைகளைக் காணவே முயல்வர். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து தெளிவடைவது சிறப்பு.
உலகை நோக்குவோம். தாவர முதல் மக்கள் ஈறாக உலகம் ஆக்கப்பட்டிருத்தலைக் காண்கிறோம். தாவர முதல் மக்கள் ஈறாக உள்ளன யாவும் உயிர்களே. அவைகள் உடலமைப்பில் வேற்றுமையுறுகின்றன. அவ்வவ்வுடலமைப்புக்கேற்ற வண்ணம் அவ்வவ்வுயிர் அறிவு விளக்கம் பெறுகிறது. இது பற்றியே முன்னோர், உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவுவரை வகுத்துக் காட்டினர் போலும். உயிர்களின் அறிவு உடலமைப்புக்கேற்ற வண்ணம் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். அவ்வளர்ச்சி புதிய ஒன்றிலிருந்து உறுவதில்லை. வளர்ச்சி, உள்ளத்திலிருந்தே உறுகிறது. இது கூர்தல் (Evolution) எனப்படும். (கூர்தல் - உள்ளது சிறத்தல்). இக் கூர்தல் நியாயப்படியே டார்வின், உயிர் வரலாற்றை விளக்கிப் போந்தனர்.
நம் நாட்டவர் கொண்டுள்ள அவதாரங்களைப் பார்ப்போம். அவை மச்சத்தினின்றும் தொடங்குகின்றன. ஒவ்வொன்றும் படிப்படியே வளர்ந்து வருதல் கருதற்பாலது. மச்சம் நீரில் வாழ்வது. அது நிலத்தில் நகர்தலுஞ் செய்யாது. கூர்மம் (ஆமை) சிறு கால் கொண்டு ஊர்ந்து செல்வது. வராகம் நன்றாக நடக்க வல்லது. நரசிம்மம், விலங்கினமும் மனித உருவும் கலந்தது. மனிதத் தோற்றத்துக்குக் கால்கொண்ட இடம் இதுவே. பின்னே வாமனன் தோன்றினன். வாமனன் மனிதனாயினும், அவன் முதலில் தோன்றினவனாதலின், அவன்பால் மனிதப் பிறவிக்குரிய முழுமை விளங்கவில்லை. அவன் குறளனாகவே இருந்தான். பரசுராமன் முழு மனிதன்; ஆனால் சாந்தமில்லாதவன். ச்ரிராமன் அழகன்; சாந்தமுடையவன்; ஒவ்வொருபோது பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன். கண்ணன் மனித உடலும் தெய்வ நிலையும் உடையவன்; எப்பொழுதும் பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன்.
இவ்வவதாரம் ஒவ்வொன்றும் உயிர் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையை உணர்த்துவது. இந் நிலையை நம்மவர் கற்பம் என்பர். உயிர் வர்க்கம் மீனா யிருந்தது ஒரு கற்பம்; ஆமையானது மற்றொரு கற்பம்; இவ்வாறே பிறவும்.
அவதாரங்களை இறைவன் மீது ஏற்றுவது என்னை? இஃது உன்னத் தக்கது. உயிர்கட்கு அறியாமைக் கட்டு உண்டு. அதனால் அவைகட்கு இயல்பில் அறிவு விளங்குவதில்லை. அறிவு விளக்கத்துக்கென அவைகள், மாயா உடலங்களைத் தாங்குகின்றன. அவ்வுடலால் அறிவு விளங்கப்பெறுகின்றன. அறியாமையால் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள், தாங்களே மாயா உடலங்களை எங்ஙனம் தாங்க வல்லனவாகும்? இதற்கு ஒரு துணை இன்றியமையாததாகிறது. அத் துணை, அறியாமைக் கட்டில்லாததாயிருத்தல் வேண்டும். அப்பொழுதே அஃது அறியாமைக் கட்டுடைய உயிர்கட்குத் துணை செய்ய வல்லதாகும்.
அறியாமைக் கட்டில்லா ஒன்றே சித் என்னுஞ் செம்பொருள். அச் சித், எங்கும் நிறைந்தது; எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது. அஃது உயிர்களின் உள்ளும் புறமும் நின்று, அவைகள் மாயா உடலங்களைத் தாங்கத் துணை செய்கிறது. அத் துணையின்றி உயிர்கள் மாயா உடலங்களைத் தாங்குதல் அரிது. இதனால் துணையின் பெருமை விளங்குதல் காண்க. சித் என்னுஞ் செம்பொருளின் துணையால், எல்லாம் நிகழ்வதால், எந்நிகழ்ச்சியையும் அதன்பாற்படுத்திச் சொல்வது ஒருவித மரபு. அம் மரபு பற்றிப் புராணங்கள் அவதாரங்களை ஆண்டவன் பாற்படுத்தின போலும். இம் முறையில் அவதார நுட்பம் எனக்கு விளங்குகிறது. அக் கண்ணுங் கருத்துங் கொண்டு ஆழ்வார் கூறிய அவதாரங்கலை நோக்குகிறேன். யான் மனிதன்; குறையுடையவன்; எனக்கு இப்பொழுது விளங்கியுள்ளதை விளம்பினேன்.
திருமால் அடியவர் மண்மீது பிறத்தலை ஆழ்வார் பலபடப் பாடியுள்ளார். அங்ஙனம் அவர் பாடியது சிந்திக்கற்பாலது.
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்
தொண்டீ ரெல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்டான் பாடிநின் றாடிப்
பரந்து திரிகின் றனவே.
திரியும் கலியுகம் நீங்கித்
தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப்
பேரின்ப வெள்ளம் பெருக,
கரியமுகில் வண்ணன் எம்மான்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்திசை பாடி
எங்கும் இடங்கொண் டனவே.
இடங்கொள் சமயத்தை எல்லாம்
எடுத்துக் களைவன போலே
தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும்
நாடகம் செய்கின் றனவே.
கொன்றுயி ருண்ணும் விசாதி
பகைபசி தீயன வெல்லாம்
நின்றிவ் வுலகில் கடிவான்
நேமிப் பிராந்தமர் போந்தார்
நன்றிசை பாடியும் துள்ளி
ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்
சிந்தையைச் செந் நிறுத்தியே.
இப் பாடல்களை உன்னுக.
அவதாரங்களால் உயிர்கட்கு நலன் உண்டு என்பது ஆழ்வார் கருத்து. அக் கருத்தை ஆழ்வார் பாடல்களிற் காண்க.
நாட்டில் பிறந்தவர் நாரணற்
காளன்றி யாவரோ
நாட்டில் பிறந்து படாதன
பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை
நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்துய்யச் செய்து
நடந்தமை கேட்டுமே.
மாய மறிபவர் மாயவற்
காளன்றி யாவரோ
தாயம் செறுமொரு நூற்றுவர்
மயங்கஓ ரைவர்க்காய்
தேசம் அறியவோர் சாரதி
யாய்ச்சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்தநல்
வார்த்தை அறிந்துமே.
கண்ணனல்லா லில்லை கண்டீர்
சரண் அதுநிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்துய்ம் மினோ
எண்ணவேண்டா நும்ம தாது
மவனன்றி மற்றில்லையே.
இத் திருப்பாடல்களில் கண்ணனெம் பெருமான், சாது சனங்களைக் காத்தற் பொருட்டும் - கொடியவரை ஒறுத்து மண்ணின் சுமை நீக்குதற்பொருட்டும் - வந்தான் என்பது திறம்பட வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இதை உன்னுமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஈண்டு நாம் அறியத்தக்க உண்மை ஒன்றுளது. அது, கண்ணன்பால் அன்பு செலுத்துவோர் அனைவரும் - அவனடி சேர முயல்வோர் எல்லோரும் - சாது தர்மத்தை நாட்டவும் அதர்மத்தை வீழ்த்தவும், கண்ணனைப் போல, ஒல்லும் வகை முயலுதல் வேண்டும் என்பது. கண்ணன் அவதாரத்தால் அறியக் கிடக்கும் உண்மைகளுள் தலையாயது இதுவே என்றுங் கூறலாம். இத்தகைய தொண்டு செய்யாது, கண்ணபிரான் ஆலயத்தை மட்டும் வலம் வருவதாலும், சந்நியாசங் கொண்டு காடு நோக்கி ஓடுவதாலும், வேறு பல தன்னல உழைப்பாலும் பிறவி நோக்கம் நிறைவேறாது. கண்ணன் காட்டிய வழியை நாமும் கடைப்பிடிப்போமாக. ஆழ்வாரும் அந் நெறியைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். இப்பொழுது உலகம் உரிமையிழந்து வாடுகிறது. இவ் வேளையில் உரிமைக்கு உழைப்பது கண்ணன் திருவடிக்குச் செய்யும் திருத்தொண்டாகும்.
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Friday, December 4, 2009
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 6 உருவம் - 2
உலகிலுள்ள சமயங்கள் பல. அவ்வச் சமயத்தார் இறைவனை உணர்தற்குத் தத்தம் வழக்க வொழுக்கங்கட்கேற்ப இறைக்கோலம் பேர் உரு முதலியன வழங்குகின்றனர். அக் கோலம் முதலியன இறையை உணர்த்தும் அறிகுறிகளேயன்றி, அவைகளே இறை அல்ல. இறைக்கெனக் கோலம் முதலியன இல்லை. இறை ஞான மயமாயிருப்பது. அது பலவாறு மக்களால் கொள்ளப்படுகிறது. அக் கொள்கைகளின் தத்துவங்களைக் காண முயல்வது அறிவுக்கழகு.
தத்துவ வழியில் உணரத்தக்க இறைநிலைகளை ஆழ்வார் அழகுபட அருள்கிறார். எடுத்துக்காட்டுக்கு இங்கே ஒரு பாட்டைக் கொள்வோம்.
உண்ணா துறங்கா துணர்வுறும்
எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின
வாம் எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான்
றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன் உயி
ராயின காவிகளே.
இத் திருமொழியைப் பார்க்கப் பார்க்க இறையின் மூன்று நிலைகள் புலனாகும். (1) 'உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனையின் தனிநிலை. (2) எரி நீர் வளி வான், மண்ணாகிய எம்பெருமான்... யோகியர்க்கும், எண்ணாய் மிளிரும் இயல்பினவாம் - இஃது இறை, இயற்கையை உடலாகக் கொண்ட நிலை, (3) 'எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்... ...' - இஃது இயற்கை இறையின் கோலப் படத்தைக் குறிப்பது. மூன்றாவது இரண்டாவதைக் காட்டும்; இரண்டாவது முதலாவதை உணர்த்தும்.
இயற்கையினின்றும் பெற்ற திருவுருவங்களில் தத்துவக் குறிப்புக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளை அவ்வப்போது தோன்றிய தத்துவர் விளக்கிச் சென்றனர்; தத்துவங்கள் கரந்து விளங்குமாறு பாவலர் உருவங்களை வருணிப்பது வழக்கம். பாக்களிலுள்ள வருணனைகள் இயற்கை இன்பத்தையும், பொருள்கள் தத்துவங்களையும் உணர்த்துவனவாம். ஆழ்வார் திருப்பாடல்களில் போந்துள்ள திருவுருவங்கள் பல திறத்தன. அவைகட்கெல்லாம் தத்துவங் கூறுதல் என்னால் இயலாததொன்று ஓரோ வழி கூற முயல்கிறேன். ஆழ்வார் அருளிய பல பாக்களில் பரந்து செல்லாது, சுருக்கத்தின் பொருட்டு, அவர் அருளிய திருவாசிரியத்தில் சில பகுதிகட்கு என் சிற்றறிவுக் கெட்டிய சில நுட்பங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். பிறவற்றிற்கும் அவ்வாறே கொள்க.
செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்...
இறை, முகிலுடுத்துப் பரிதி மதி (சூரிய சந்திரர்) பூண்டு பலசுடர் (உடுக்கள்) புனைந்திருப்பது. அஃது இயற்கையை உடலாக்கொண்டு விளங்குவதைத் தெரிவிப்பது இயற்கைக் கோலம் உருவாகும்போது, முகில் நீல மேனியாகிறது; மதியும் பரிதியும் முறையே சங்கு சக்கரமாகின்றன; பல்சுடர் முடி - கை - திரு - அடி ஆகின்றன.
நீலமேனி தண்மையது. அதைத் தியானிக்கத் தியானிக்க, அது புலன்களின் வெம்மை, மன வெம்மை, கரண வெம்மை முதலிய வெம்மைகள் ஒழிய, அங்கங்கே தண்மை தங்க, நல்லெண்ணத்தையும், நல்லுணர்வையும் எழுப்பிப் படிவிக்கும்.
சங்கு ஒலிப்பது; சக்கரம் சுழல்வது; முடி முதலியன ஒளிர்வன. உலகம் ஒலியினின்றும் பரிணமிப்பது. அவ்வொலி சுழன்று சுழன்றே பரிணமிப்பது இயல்பு. ஆகவே, சங்கும் சக்கரமும் உலகத் தோற்றத்துக்கு அறிகுறியாயுள்ள கருவிகள்.
திருமுடியும், திருக்கைகளும், திருவும், திருவடியும் செவ்விய ஒளி மயமாய்த் திகழ்வன. (சித்) ஒளி, ஒலியின் மூலம். ஒளி தொகை வகைப்படும். திருமுடியின் ஒளி, தொகை முறையில் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவது. திருக்கைகளின் ஒளியும், திருவடியின் ஒளியும், வகை முறையில் தாம் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவன.
திருக்கைகள் சங்கையும் சக்கரத்தையும் ஏந்துவன. சங்கொலிக்கும் சக்கரச் சுழற்சிக்கும் அடிப்படை திருக்கைகளின் ஒளி, திரு ஒளி, உயிர்களின் பல்வகைச் செல்வங்கட்கு ஊற்றாகும். பல்வகைத் திருவைப்பெற்ற உயிர்களின் இன்பப்பேற்றிற்கு நிலைக்களன் திருவடி ஒளி.
ஒளி - விந்து; ஒலி - நாதம். விந்து நாதங்களின் உள்ளும் புறமும் நின்று, அவைகளை இயக்குவது இறை ஒளி என்க. (இறை ஒளி விந்து ஒளியன்று) இறையின் மற்றொரு வடிவாலும் இந்நுட்பம் விளங்கும். அது வருமாறு:
கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.
- திருவாசிரியம் - 1
இதன்கண் இறைவன் உந்தியுடன் பாற்கடலில் அரவணையில் பள்ளி கொண்டிருப்பது விளங்குகிறது. பாற்கடல் - விந்து; பாம்பணை - நாதம்; உந்தி - படைப்பு.
உலகம் உருக்கொள்ளூதற்கு நாதம் பாம்புபோல் மண்டித்தலால், நாதம் பாம்பணை என்னப்பட்டது. இறைவன் பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்டிருப்பது, அவன் விந்து நாத தத்துவங்கட்கு மேற்பட்டவன் என்பதையும், அவைகளை இயக்க வல்லவன் அவனே என்பதையும் தெளிவிப்பது. உந்தியில் நான் முகனைத் தரும் தோற்றம் படைப்பை அறிவுறுத்துவது.
திருவாசிரியத்தின் முடிபைப் பார்க்க.
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை அல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.
ஆல் இலை, விரிந்த உலகங்களெல்லாம் ஒடுங்குவதைக் குறிப்பது. அதன்மீது ஆண்டவன் பள்ளி கொண்டிருப்பது, எல்லாம் ஒடுங்குதற்குரிய இடமாயிருப்பவனும் அவனே என்பதை உணர்த்துவது.
இவ்வாறு காவிய ஓவியங்கள் வழிப்பிறந்த உருவங்களைப் பொருளாகக் கொள்ளாது, அவைகளின் மூல இயல்களை, அவைகளின் வாயிலாக உணர்ந்து தெளிந்து வழிபடுவது சிறப்பு. ஆழ்வார் பாக்களில் திருவுருவங்களின் உள்ளுறை இனிது பொலிதல் காண்க.
தத்துவங்களைக் கதைகள் வாயிலாக விளக்குவதும் ஒரு வித மரபு. அக் கதைகளினின்றும் உருவங்கள் பிறத்தலும் உண்டு. கதைகளையும், கதையுருவங்களையும் தத்துவக் கண்கொண்டு பார்த்தலே அறிவுடைமை. இல்லையேல் பன்மைக் கடவுள் உணர்வும், பிற ஆபாசங்களும் பொருளாகி, அறிவு விளக்கத்துக்குக் கேடு சூழ்ந்து கொண்டேயிருக்கும்.
புராணேதிகாசக் கதைகளை ஆழ்வார் விலக்கவில்லை. அக் கதைகளையும் அமைத்து ஆழ்வார் பல பாடல்கள் பாடியுள்ளார்.
வினையேன்... ... ...
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா...
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை...
வேவாரா... ... ...
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த
மூவா...
உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மக ளாயர்
மடமகள் என்றிவர்...
மாறு சேர்படை நூற்று வர்மங்க ஓரைவர்க் காயன்று மாயப்போர் பண்ணி
நீறுசெய்த எந்தாய் நிலங்கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி யறாச் சிரீவரமங்கலநகர்
ஏறிவீற் றிருந்தா யுன்னை எங்கெய்தக் கூவுவனே.
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய
பாரதம் கைசெய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து
போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கென தாவியை நின்று நின்
றுருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான்சுடனேரை உன
என்றுகொல் சேர்வதுவே.
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
குன்றமொன் றேந்தியதும்
உரவு நீர்ப்பொய்கை நாகம் காய்ந்ததும்
உட்பட மற்றும்பல
அரவில் பள்ளிப்பி ரான்றன் மாயவி
னைகளை யேயலற்றி
இரவு நன்பகலும் தவிர்கிலம்
என்னகு றைவெனக்கே
கேயத் தீங்குழ லூதிற் றும்நிரை
மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்
மணந்ததும் மற்றும்பல
மாயக் கோலப் பிரான்றன் செய்வகை
நினைந்துமனம் குழைந்து
நேயத் தோடுக ழிந்த போதெனக்
கெவ்வுல கம்நிகரே.
ஏற்றரும் வைகுந்தத்தை யருளும்
நமக்கு ஆயர்குலத்து
ஈற்றினம் பிள்ளையொன்றாய்ப் புக்கு
மாயங்களே யியற்றி
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்
கொடுஞ் சேனை தடிந்து
ஆற்றல்மிக் கான்பெரிய
பரஞ்சோதிபுக்கவரியே.
இத் திருப்பாக்களில் போந்துள்ள கதைகள் எல்லாவற்றுக்கும் தத்துவங்கள் கூறின் பொருள் விரியும். தாலிபுலாக நியாயம் பற்றிக் கதைகளில் ஒன்றையும், கதையுருவங்களில் திரண்ட ஒன்றையும், இங்கே கொள்வோம்.
குருக்ஷேத்திரப் போர் பாரதத்தில் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அப் போர் நிகழ்ச்சியைக் கேட்பதில் மக்களுக்கு அதிக விருப்பம். அப் போரில் நூற்றுவர் ஒரு பக்கமும், ஐவர் மற்றொரு பக்கமும் நின்று பொருதனர் என்றும், கண்ணபிரான் தேர்ச்சாரதியாய் வீற்றிருந்து கீதையை அறிவுறுத்தினர் என்றும் கதை சொல்கிறது. இக் கதையின் உட்பொருள் என்னை?
குருக்ஷேத்திரம் - கிளர்ச்சி பொருந்திய மனம்; நூற்றுவர் - தீய எண்ணங்கள்; ஐவர் - நல்ல எண்ணங்கள்; மனச்சான்றொலி - கண்ணபிரான் கீதை உபதேசம்.
மனத்திடைத் தீய எண்ணங்களும், நல்ல எண்ணங்களும் பிறக்கின்றன. அவைகளில் தீயன பலவாகவும், நல்லன சிலவாகவும் பிறத்தல் இயல்பு. இதுபற்றியே தீய எண்ணங்கள் நூற்றுவர் என்றும், நல்ல எண்ணங்கள் ஐவர் என்றும் உருவாக்கப்பட்டன. தீமை, நல்லதை வீழ்த்தித் தன்னாட்சி செலுத்த முயல்கிறது. அப்பொழுது மனச்சான்றாகிய உள்ளொலி எழுகிறது. நல்லது அதற்குச் செவி சாய்க்கிறது. அதனால் நன்மை, ஆக்கமும் ஆற்றலும் பெற்றுத் தீமையை வீழ்த்துவதாகிறது. இதுவே பாரதப் போர் என்பது. இப்போர் நடைபெறாத இடம் உண்டோ? உள்ளொலியின் வழி நின்றால் நலம் பெற்றுத் தீமையை வீழ்த்தலாம் என்பது கதையின் கருத்து. இது நிற்க.
அழகிய உருவங்களுள் இங்கே ஒன்று புலனாகிறது. அது, கண்ணபிரான் குழலூதிப் பச்சைமரத்தடியில் பசுக்களும் பெண்களும் சூழநிற்குந் திருக்கோலம்.
பச்சை மரம் - இயற்கை; கண்ணபிரான் - இறை; குழலோசை - இசையொலி; பசுக்கள் - சாந்தம்; பெண் மக்கள் - அமைதி நிலை.
இயற்கை உடல். இறை உயிர். பச்சை மரமும் - அதனடியில் கண்ணன் நிற்பதும் - இயற்கை உடல் என்பதையும், அதன் உயிர் இறை என்பதையும் விளக்குவன. குழலோசை, இயற்கையில் இறை இசைமயமாய் வீற்றிருப்பதைத் தெரிவிப்பது. இயற்கை வழிபாட்டில் ஈடுபடுவோர்க்கு இறையின் இசை (நாதம்) யாகிய கண்ணன் குழலோசை கேட்கும். அவ்விசை உயிர்கட்குச் சாந்தத்தை நல்கி, அமைதி நிலையைக் கூட்டும். அச் சாந்தமும், அமைதியும் முறையே கண்ணபிரானைச் சூழ்ந்துள்ள பசுநிரையாகவும், பெண்ணினமாகவும் உருவகிக்கப்பட்டன. இது குறித்து யான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். ('நவசக்தி' சிலம் - 12, பரல் - 28 பார்க்க)
இப்பலப்பட்ட திருக்கோலங்களின் மூலம் ஒன்று என்பதை மறத்தலாகாது. திருக்கோலங்கள் யாவும், அவ்வொன்றன் இயல்களை விளக்கும் தத்துவக் குறிகளாகும். ஆழ்வார், திருக்கோலங்களை அழகிய பாட்டோவியத்தில் படியச் செய்திருத்தல் உள்ளத்தைக் கவர்கிறது.
இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழிதூரல் அரவணைமேல்
இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வது போல்
இருள்விரி சோதிப் பெருமான் உறையும் எறிகடலே.
திருமா லுருஇவர்க்கும் மேருஅம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும் அன்ன கண்டும்
திருமா லுருவோ டவன்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்குஎங் கேவரும்தீவினையே.
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைபாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம்சீர் சங்குசக் கரம்பரிதி
விட்டிலங்கு முடியம்மான் மதுசூ தனன் தனக்கே.
தூநீர் முகில்போல் தோன்றும்நின்
சுடர்கொள் வடிவும் கனிவாயும்
தேநீர் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலைதன்மேல்
வண்கார் நீல முகில்போலத்
தூநீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே.
கருமா ணிக்க மலைமேல்
மணித்தடந் தாமரைக் காடுகள்போல்
திருமார்வு வாய்கண் கையுந்தி
காலுடை யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்
வயல்குட்ட நாட்டுத் திருப்புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னை மீரிதற்குஎன் செய்கேனோ.
காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின்
மீமிசைக்கார் முகில் போல்
மாசின மாலி மாலிமானென்றங்
கவர்படக் கனன்றுமுன் நின்ற
காய்சின வேந்தே கதிர்முடி யானே
கலிவயல் திருப்புளிங் குடியாய்
காய்சின வாழி சங்குவாள் வில்தண்
டேந்தியெம் மிடர்கடி வானே.
அழகிய திருக்கோலங்களில் ஈடுபடும் நெஞ்சம் இயற்கை இறையினிடம் படிவதாகும். இதற்கு அழகிய திருக்கோலங்கள் பாலம் போலத் துணை செய்யும். ஆகவே, திருக்கோலங்களில் கிளர்ந்த உணர்வுடன் ஈடுபடப்பட இயற்கை இறையினிடம் வேட்கை எழுதல் ஒருதலை. ஆழ்வார் தமது நெஞ்சம் அக் கோலங்களில் ஈடுபட்டதை,
பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் - நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினைஎம் பால்கடியும்
நீதியாய் நிற்சார்ந்து நின்று.
என்றும்,
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவைதான் மற்றுத்தான் - கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து.
என்றும்,
எங்ஙனேயோ வன்னைமீர்கா
ளென்னை முனிவதுநீர்
நங்கள்கோலத் திருக்குறுங்குடி
நம்பியைநான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனிவா யொன்றினோடும்
செல்கின்ற தென் நெஞ்சமே.
என்றும்,
திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
கண்டவத் திருவடி என்றும்
திருச்செய்ய கமலக் கண்ணும்செவ் வாயும்
செவ்வடி யும்செய்ய கையும்
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய
கமலமார் பும்செய்ய வுடையும்
திருச்செய்யமுடியும் ஆரமும் படையும்
திகழவென் சிந்தை யுளானே.
என்றும், உலகுக்கு உணர்த்தியிருத்தல் காண்க.
திருவுருவங்கள் தத்துவக் குறியுடையன என்பதை ஆழ்வார் பல விடங்களில் பலவிதமாகக் கூறியுள்ளார்.
கண்ணபிரான் திருவிளையாடல்கள் பலவிடங்களில் ஆழ்வாரால் அழகுபடக் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவ்விடங்களில் பெரிதும் 'மாயம்' என்னுஞ் சொல்லை ஆழ்வார் பெய்திருப்பது கூர்ந்து நோக்கற்பாலது. அவ்வாறு அருளியதன் நோக்கம் என்னை? உருவங்களையே பொருளாக் கொள்ளாது, அவைகள் உணர்த்தும் தத்துவங்களைப் பொருளாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதாகும். கீழ்வரும் ஆழ்வார் மொழிகளில் நெஞ்சை ஊன்றுக.
குரவை ஆய்ச்சியர்... ...
அரவில் பள்ளிப் பிரான் தன் மாயவினைகளை...
கேயத் ... ...
மாயக் கோலப் பிரான் ....
இகல்கொள்...
அகல்கொள் வைய மளந்த மாயன் என்
அப்பன்றன் மாயங்களே ...
மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர் பாரதமா பெரும்போர்
பண்ணி மாயங்கள் செய்து...
இறை ஒன்று. அஃது உயிர். இயற்கை அதன் உடல். இயற்கையினின்றும் முகிழ்க்குங் கோலங்கள் பல. அக்கோலங்கள் ஆழ்வார் உள்ளத்தில் படிந்து எழுப்பிய மகிழ்ச்சி, பொங்கித் ததும்பித் தமிழ்ப் பாக்களாக வழிந்து தேங்கி நிற்கிறது. அத் தேக்கத்தில் இயற்கையின் கோலங்கள் காட்சியளிக்கின்றன. கண்ணுள்ளோர் அவற்றைக் காண்க. ஆழ்வார் பாடல்களை, 'இயற்கை திருக்கோலக் காட்சி' என்று கூறல் மிகையாகாது. அக் காட்சி நிலையம் கோலிய ஆழ்வார் வாழ்க. அவரை ஈன்ற தமிழ் நாடு வாழ்க.
தத்துவ வழியில் உணரத்தக்க இறைநிலைகளை ஆழ்வார் அழகுபட அருள்கிறார். எடுத்துக்காட்டுக்கு இங்கே ஒரு பாட்டைக் கொள்வோம்.
உண்ணா துறங்கா துணர்வுறும்
எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின
வாம் எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான்
றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன் உயி
ராயின காவிகளே.
இத் திருமொழியைப் பார்க்கப் பார்க்க இறையின் மூன்று நிலைகள் புலனாகும். (1) 'உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனையின் தனிநிலை. (2) எரி நீர் வளி வான், மண்ணாகிய எம்பெருமான்... யோகியர்க்கும், எண்ணாய் மிளிரும் இயல்பினவாம் - இஃது இறை, இயற்கையை உடலாகக் கொண்ட நிலை, (3) 'எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்... ...' - இஃது இயற்கை இறையின் கோலப் படத்தைக் குறிப்பது. மூன்றாவது இரண்டாவதைக் காட்டும்; இரண்டாவது முதலாவதை உணர்த்தும்.
இயற்கையினின்றும் பெற்ற திருவுருவங்களில் தத்துவக் குறிப்புக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளை அவ்வப்போது தோன்றிய தத்துவர் விளக்கிச் சென்றனர்; தத்துவங்கள் கரந்து விளங்குமாறு பாவலர் உருவங்களை வருணிப்பது வழக்கம். பாக்களிலுள்ள வருணனைகள் இயற்கை இன்பத்தையும், பொருள்கள் தத்துவங்களையும் உணர்த்துவனவாம். ஆழ்வார் திருப்பாடல்களில் போந்துள்ள திருவுருவங்கள் பல திறத்தன. அவைகட்கெல்லாம் தத்துவங் கூறுதல் என்னால் இயலாததொன்று ஓரோ வழி கூற முயல்கிறேன். ஆழ்வார் அருளிய பல பாக்களில் பரந்து செல்லாது, சுருக்கத்தின் பொருட்டு, அவர் அருளிய திருவாசிரியத்தில் சில பகுதிகட்கு என் சிற்றறிவுக் கெட்டிய சில நுட்பங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். பிறவற்றிற்கும் அவ்வாறே கொள்க.
செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்...
இறை, முகிலுடுத்துப் பரிதி மதி (சூரிய சந்திரர்) பூண்டு பலசுடர் (உடுக்கள்) புனைந்திருப்பது. அஃது இயற்கையை உடலாக்கொண்டு விளங்குவதைத் தெரிவிப்பது இயற்கைக் கோலம் உருவாகும்போது, முகில் நீல மேனியாகிறது; மதியும் பரிதியும் முறையே சங்கு சக்கரமாகின்றன; பல்சுடர் முடி - கை - திரு - அடி ஆகின்றன.
நீலமேனி தண்மையது. அதைத் தியானிக்கத் தியானிக்க, அது புலன்களின் வெம்மை, மன வெம்மை, கரண வெம்மை முதலிய வெம்மைகள் ஒழிய, அங்கங்கே தண்மை தங்க, நல்லெண்ணத்தையும், நல்லுணர்வையும் எழுப்பிப் படிவிக்கும்.
சங்கு ஒலிப்பது; சக்கரம் சுழல்வது; முடி முதலியன ஒளிர்வன. உலகம் ஒலியினின்றும் பரிணமிப்பது. அவ்வொலி சுழன்று சுழன்றே பரிணமிப்பது இயல்பு. ஆகவே, சங்கும் சக்கரமும் உலகத் தோற்றத்துக்கு அறிகுறியாயுள்ள கருவிகள்.
திருமுடியும், திருக்கைகளும், திருவும், திருவடியும் செவ்விய ஒளி மயமாய்த் திகழ்வன. (சித்) ஒளி, ஒலியின் மூலம். ஒளி தொகை வகைப்படும். திருமுடியின் ஒளி, தொகை முறையில் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவது. திருக்கைகளின் ஒளியும், திருவடியின் ஒளியும், வகை முறையில் தாம் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவன.
திருக்கைகள் சங்கையும் சக்கரத்தையும் ஏந்துவன. சங்கொலிக்கும் சக்கரச் சுழற்சிக்கும் அடிப்படை திருக்கைகளின் ஒளி, திரு ஒளி, உயிர்களின் பல்வகைச் செல்வங்கட்கு ஊற்றாகும். பல்வகைத் திருவைப்பெற்ற உயிர்களின் இன்பப்பேற்றிற்கு நிலைக்களன் திருவடி ஒளி.
ஒளி - விந்து; ஒலி - நாதம். விந்து நாதங்களின் உள்ளும் புறமும் நின்று, அவைகளை இயக்குவது இறை ஒளி என்க. (இறை ஒளி விந்து ஒளியன்று) இறையின் மற்றொரு வடிவாலும் இந்நுட்பம் விளங்கும். அது வருமாறு:
கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.
- திருவாசிரியம் - 1
இதன்கண் இறைவன் உந்தியுடன் பாற்கடலில் அரவணையில் பள்ளி கொண்டிருப்பது விளங்குகிறது. பாற்கடல் - விந்து; பாம்பணை - நாதம்; உந்தி - படைப்பு.
உலகம் உருக்கொள்ளூதற்கு நாதம் பாம்புபோல் மண்டித்தலால், நாதம் பாம்பணை என்னப்பட்டது. இறைவன் பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்டிருப்பது, அவன் விந்து நாத தத்துவங்கட்கு மேற்பட்டவன் என்பதையும், அவைகளை இயக்க வல்லவன் அவனே என்பதையும் தெளிவிப்பது. உந்தியில் நான் முகனைத் தரும் தோற்றம் படைப்பை அறிவுறுத்துவது.
திருவாசிரியத்தின் முடிபைப் பார்க்க.
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை அல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.
ஆல் இலை, விரிந்த உலகங்களெல்லாம் ஒடுங்குவதைக் குறிப்பது. அதன்மீது ஆண்டவன் பள்ளி கொண்டிருப்பது, எல்லாம் ஒடுங்குதற்குரிய இடமாயிருப்பவனும் அவனே என்பதை உணர்த்துவது.
இவ்வாறு காவிய ஓவியங்கள் வழிப்பிறந்த உருவங்களைப் பொருளாகக் கொள்ளாது, அவைகளின் மூல இயல்களை, அவைகளின் வாயிலாக உணர்ந்து தெளிந்து வழிபடுவது சிறப்பு. ஆழ்வார் பாக்களில் திருவுருவங்களின் உள்ளுறை இனிது பொலிதல் காண்க.
தத்துவங்களைக் கதைகள் வாயிலாக விளக்குவதும் ஒரு வித மரபு. அக் கதைகளினின்றும் உருவங்கள் பிறத்தலும் உண்டு. கதைகளையும், கதையுருவங்களையும் தத்துவக் கண்கொண்டு பார்த்தலே அறிவுடைமை. இல்லையேல் பன்மைக் கடவுள் உணர்வும், பிற ஆபாசங்களும் பொருளாகி, அறிவு விளக்கத்துக்குக் கேடு சூழ்ந்து கொண்டேயிருக்கும்.
புராணேதிகாசக் கதைகளை ஆழ்வார் விலக்கவில்லை. அக் கதைகளையும் அமைத்து ஆழ்வார் பல பாடல்கள் பாடியுள்ளார்.
வினையேன்... ... ...
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா...
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை...
வேவாரா... ... ...
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த
மூவா...
உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மக ளாயர்
மடமகள் என்றிவர்...
மாறு சேர்படை நூற்று வர்மங்க ஓரைவர்க் காயன்று மாயப்போர் பண்ணி
நீறுசெய்த எந்தாய் நிலங்கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி யறாச் சிரீவரமங்கலநகர்
ஏறிவீற் றிருந்தா யுன்னை எங்கெய்தக் கூவுவனே.
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய
பாரதம் கைசெய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து
போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கென தாவியை நின்று நின்
றுருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான்சுடனேரை உன
என்றுகொல் சேர்வதுவே.
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
குன்றமொன் றேந்தியதும்
உரவு நீர்ப்பொய்கை நாகம் காய்ந்ததும்
உட்பட மற்றும்பல
அரவில் பள்ளிப்பி ரான்றன் மாயவி
னைகளை யேயலற்றி
இரவு நன்பகலும் தவிர்கிலம்
என்னகு றைவெனக்கே
கேயத் தீங்குழ லூதிற் றும்நிரை
மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்
மணந்ததும் மற்றும்பல
மாயக் கோலப் பிரான்றன் செய்வகை
நினைந்துமனம் குழைந்து
நேயத் தோடுக ழிந்த போதெனக்
கெவ்வுல கம்நிகரே.
ஏற்றரும் வைகுந்தத்தை யருளும்
நமக்கு ஆயர்குலத்து
ஈற்றினம் பிள்ளையொன்றாய்ப் புக்கு
மாயங்களே யியற்றி
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்
கொடுஞ் சேனை தடிந்து
ஆற்றல்மிக் கான்பெரிய
பரஞ்சோதிபுக்கவரியே.
இத் திருப்பாக்களில் போந்துள்ள கதைகள் எல்லாவற்றுக்கும் தத்துவங்கள் கூறின் பொருள் விரியும். தாலிபுலாக நியாயம் பற்றிக் கதைகளில் ஒன்றையும், கதையுருவங்களில் திரண்ட ஒன்றையும், இங்கே கொள்வோம்.
குருக்ஷேத்திரப் போர் பாரதத்தில் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அப் போர் நிகழ்ச்சியைக் கேட்பதில் மக்களுக்கு அதிக விருப்பம். அப் போரில் நூற்றுவர் ஒரு பக்கமும், ஐவர் மற்றொரு பக்கமும் நின்று பொருதனர் என்றும், கண்ணபிரான் தேர்ச்சாரதியாய் வீற்றிருந்து கீதையை அறிவுறுத்தினர் என்றும் கதை சொல்கிறது. இக் கதையின் உட்பொருள் என்னை?
குருக்ஷேத்திரம் - கிளர்ச்சி பொருந்திய மனம்; நூற்றுவர் - தீய எண்ணங்கள்; ஐவர் - நல்ல எண்ணங்கள்; மனச்சான்றொலி - கண்ணபிரான் கீதை உபதேசம்.
மனத்திடைத் தீய எண்ணங்களும், நல்ல எண்ணங்களும் பிறக்கின்றன. அவைகளில் தீயன பலவாகவும், நல்லன சிலவாகவும் பிறத்தல் இயல்பு. இதுபற்றியே தீய எண்ணங்கள் நூற்றுவர் என்றும், நல்ல எண்ணங்கள் ஐவர் என்றும் உருவாக்கப்பட்டன. தீமை, நல்லதை வீழ்த்தித் தன்னாட்சி செலுத்த முயல்கிறது. அப்பொழுது மனச்சான்றாகிய உள்ளொலி எழுகிறது. நல்லது அதற்குச் செவி சாய்க்கிறது. அதனால் நன்மை, ஆக்கமும் ஆற்றலும் பெற்றுத் தீமையை வீழ்த்துவதாகிறது. இதுவே பாரதப் போர் என்பது. இப்போர் நடைபெறாத இடம் உண்டோ? உள்ளொலியின் வழி நின்றால் நலம் பெற்றுத் தீமையை வீழ்த்தலாம் என்பது கதையின் கருத்து. இது நிற்க.
அழகிய உருவங்களுள் இங்கே ஒன்று புலனாகிறது. அது, கண்ணபிரான் குழலூதிப் பச்சைமரத்தடியில் பசுக்களும் பெண்களும் சூழநிற்குந் திருக்கோலம்.
பச்சை மரம் - இயற்கை; கண்ணபிரான் - இறை; குழலோசை - இசையொலி; பசுக்கள் - சாந்தம்; பெண் மக்கள் - அமைதி நிலை.
இயற்கை உடல். இறை உயிர். பச்சை மரமும் - அதனடியில் கண்ணன் நிற்பதும் - இயற்கை உடல் என்பதையும், அதன் உயிர் இறை என்பதையும் விளக்குவன. குழலோசை, இயற்கையில் இறை இசைமயமாய் வீற்றிருப்பதைத் தெரிவிப்பது. இயற்கை வழிபாட்டில் ஈடுபடுவோர்க்கு இறையின் இசை (நாதம்) யாகிய கண்ணன் குழலோசை கேட்கும். அவ்விசை உயிர்கட்குச் சாந்தத்தை நல்கி, அமைதி நிலையைக் கூட்டும். அச் சாந்தமும், அமைதியும் முறையே கண்ணபிரானைச் சூழ்ந்துள்ள பசுநிரையாகவும், பெண்ணினமாகவும் உருவகிக்கப்பட்டன. இது குறித்து யான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். ('நவசக்தி' சிலம் - 12, பரல் - 28 பார்க்க)
இப்பலப்பட்ட திருக்கோலங்களின் மூலம் ஒன்று என்பதை மறத்தலாகாது. திருக்கோலங்கள் யாவும், அவ்வொன்றன் இயல்களை விளக்கும் தத்துவக் குறிகளாகும். ஆழ்வார், திருக்கோலங்களை அழகிய பாட்டோவியத்தில் படியச் செய்திருத்தல் உள்ளத்தைக் கவர்கிறது.
இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழிதூரல் அரவணைமேல்
இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வது போல்
இருள்விரி சோதிப் பெருமான் உறையும் எறிகடலே.
திருமா லுருஇவர்க்கும் மேருஅம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும் அன்ன கண்டும்
திருமா லுருவோ டவன்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்குஎங் கேவரும்தீவினையே.
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைபாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம்சீர் சங்குசக் கரம்பரிதி
விட்டிலங்கு முடியம்மான் மதுசூ தனன் தனக்கே.
தூநீர் முகில்போல் தோன்றும்நின்
சுடர்கொள் வடிவும் கனிவாயும்
தேநீர் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலைதன்மேல்
வண்கார் நீல முகில்போலத்
தூநீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே.
கருமா ணிக்க மலைமேல்
மணித்தடந் தாமரைக் காடுகள்போல்
திருமார்வு வாய்கண் கையுந்தி
காலுடை யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்
வயல்குட்ட நாட்டுத் திருப்புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னை மீரிதற்குஎன் செய்கேனோ.
காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின்
மீமிசைக்கார் முகில் போல்
மாசின மாலி மாலிமானென்றங்
கவர்படக் கனன்றுமுன் நின்ற
காய்சின வேந்தே கதிர்முடி யானே
கலிவயல் திருப்புளிங் குடியாய்
காய்சின வாழி சங்குவாள் வில்தண்
டேந்தியெம் மிடர்கடி வானே.
அழகிய திருக்கோலங்களில் ஈடுபடும் நெஞ்சம் இயற்கை இறையினிடம் படிவதாகும். இதற்கு அழகிய திருக்கோலங்கள் பாலம் போலத் துணை செய்யும். ஆகவே, திருக்கோலங்களில் கிளர்ந்த உணர்வுடன் ஈடுபடப்பட இயற்கை இறையினிடம் வேட்கை எழுதல் ஒருதலை. ஆழ்வார் தமது நெஞ்சம் அக் கோலங்களில் ஈடுபட்டதை,
பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் - நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினைஎம் பால்கடியும்
நீதியாய் நிற்சார்ந்து நின்று.
என்றும்,
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவைதான் மற்றுத்தான் - கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து.
என்றும்,
எங்ஙனேயோ வன்னைமீர்கா
ளென்னை முனிவதுநீர்
நங்கள்கோலத் திருக்குறுங்குடி
நம்பியைநான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனிவா யொன்றினோடும்
செல்கின்ற தென் நெஞ்சமே.
என்றும்,
திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
கண்டவத் திருவடி என்றும்
திருச்செய்ய கமலக் கண்ணும்செவ் வாயும்
செவ்வடி யும்செய்ய கையும்
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய
கமலமார் பும்செய்ய வுடையும்
திருச்செய்யமுடியும் ஆரமும் படையும்
திகழவென் சிந்தை யுளானே.
என்றும், உலகுக்கு உணர்த்தியிருத்தல் காண்க.
திருவுருவங்கள் தத்துவக் குறியுடையன என்பதை ஆழ்வார் பல விடங்களில் பலவிதமாகக் கூறியுள்ளார்.
கண்ணபிரான் திருவிளையாடல்கள் பலவிடங்களில் ஆழ்வாரால் அழகுபடக் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவ்விடங்களில் பெரிதும் 'மாயம்' என்னுஞ் சொல்லை ஆழ்வார் பெய்திருப்பது கூர்ந்து நோக்கற்பாலது. அவ்வாறு அருளியதன் நோக்கம் என்னை? உருவங்களையே பொருளாக் கொள்ளாது, அவைகள் உணர்த்தும் தத்துவங்களைப் பொருளாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதாகும். கீழ்வரும் ஆழ்வார் மொழிகளில் நெஞ்சை ஊன்றுக.
குரவை ஆய்ச்சியர்... ...
அரவில் பள்ளிப் பிரான் தன் மாயவினைகளை...
கேயத் ... ...
மாயக் கோலப் பிரான் ....
இகல்கொள்...
அகல்கொள் வைய மளந்த மாயன் என்
அப்பன்றன் மாயங்களே ...
மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர் பாரதமா பெரும்போர்
பண்ணி மாயங்கள் செய்து...
இறை ஒன்று. அஃது உயிர். இயற்கை அதன் உடல். இயற்கையினின்றும் முகிழ்க்குங் கோலங்கள் பல. அக்கோலங்கள் ஆழ்வார் உள்ளத்தில் படிந்து எழுப்பிய மகிழ்ச்சி, பொங்கித் ததும்பித் தமிழ்ப் பாக்களாக வழிந்து தேங்கி நிற்கிறது. அத் தேக்கத்தில் இயற்கையின் கோலங்கள் காட்சியளிக்கின்றன. கண்ணுள்ளோர் அவற்றைக் காண்க. ஆழ்வார் பாடல்களை, 'இயற்கை திருக்கோலக் காட்சி' என்று கூறல் மிகையாகாது. அக் காட்சி நிலையம் கோலிய ஆழ்வார் வாழ்க. அவரை ஈன்ற தமிழ் நாடு வாழ்க.
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Wednesday, November 25, 2009
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 6 உருவம் - 1
'எங்கும் இறை' என்பது மனத்துக்குப் பொருளாமாறு, அதனை அட்டமூர்த்தம் என்றும், இயற்கை இறை என்றும் விளக்கிய அவ்வளவில் ஆழ்வார் நின்றாரில்லை. அவர் மேலுஞ் சென்றனர். இயற்கை இறையை உருவமாகவும் அவர் அருளியுள்ளார். அது சிலர்க்குப் பிடிப்பதில்லை. இறை எங்கும் உள்ளது என்று அருளிய ஆழ்வாரே, இறையை உருவமாகவும் அருளியுள்ளாராதலின், அவர்தம் உட்கிடக்கையை உணர முயல வேண்டுவது அறிஞர் கடமை. ஆழ்வாரது உட்கிடக்கை முற்றும் என்போன்றார்க்கு விளங்குதல் அரிதே. ஆயினும் இயற்கை இறைவழி நின்று, ஒல்லும் வகையாதல் உண்மை காண முயல்கிறேன். முயற்சி அளவில் இயற்கை இறை துணை செய்யாமற் போகாது.
இறையை நேரே மனவுணர்வின் உணர்தல் இயலாது. இறையை உணர்தற்கு இயற்கையின் துணை தேவை. இயற்கை வழி நின்று இறையை உணர்தல் வேண்டும் என்பதும், இயற்கையை விடுத்து இறைய உணர்தல் இயலாது என்பதும் முன்னே விளக்கப்பட்டன. காவியர் ஓவியர் முதலியோர் இறையின் உடலாகிய இயற்கைக் கோலங்களைப் பாக்களாக எழுதியும், ஓவியங்களாக வரைந்தும் வடித்தும் இன்புறுவது வழக்கம். அவர்தம் பாக்களிலும் ஓவியங்களிலும் இயற்கைக் கோலங்கள் படிகின்றன. அப் படிவுகளால் இயற்கைப் படங்கள் முகிழ்க்கின்றன. அப் படங்களின் கூறுகளைச் சிந்தையாற் பெருக்கிப் பெருக்கிப் பார்த்தால், அவைகள் இயற்கைக் கோலங்களாக முடிதல் காணலாம். வெறும் எழுத்தும், கீறலும், சாந்தும், பிறவும் படங்களாகா. அவ்வெழுத்து முதலியவற்றில், காவிய ஓவியர் அறிவில் படிந்து இறங்கி அமையும் இயற்கைக் கோலமே 'படம்' என்னும் பெயர் பெறுகிறது. இயற்கைப் படங்களினின்றும் உருவங்கள் பிறக்கின்றன. அவ்வுருவங்கள் இயற்கைக் கோலங்களின் அறிகுறிகள் என்பதை மறத்தலாகாது. இதைப் பற்றி 'முருகன் அல்லது அழகு' என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். அதையே ஈண்டு மீண்டுங் கூற வேண்டியதில்லை. விரிவு ஆண்டுக் காண்க.
தொடக்கத்தில், உருவம், இயற்கை இறையை நினைவூட்டும் அறிகுறியாகக் கொள்ளப்பட்டது. நாளடைவில் அதற்கு வழிபாடு ஏற்பட்டது. இயற்கை இறை நினைவின்றி, உருவத்தையே பொருளாகக் கொண்டு, அதையே நினைந்து நினைந்து செய்யப்படும் வழிபாடு தவறுதலுடையது. அவ் வழிபாடு விக்கிரக ஆராதனையின்பாற்பட்டது. உருவத்தைப் பொருளாகக் கொள்ளாது, அவ்வுருவம் உணர்த்தும் தத்துவத்தைப் பொருளாகக் கொண்டு, செய்யப்படும் வழிபாட்டுக்கு அர்த்தம் உண்டு. அது நாளடைவில் இயற்கை இறையை உணர்த்துவதாகும். தத்துவ உணர்வின்றி, வெறும் உருவத்தை மட்டும் வழிபடுவது, இயற்கை இறையை உணர்த்துவதாகாது.
காவியத்தின் வழியும் ஓவியத்தின் வழியும் பிறந்த வடிவங்கள் பலப்பல; அவ் வடிவங்களினின்றும் எழுந்த புராணக் கதைகளும் பலப்பல. தொடக்கத்தில் அவைகள் இயற்கைத் தத்துவ நுட்பங்களுக்கு அறிகுறிகளாகக் கொள்ளப்பட்டன. பின்னே காவியம் ஓவியம் புராணம் என்னும் பெயர்களால் பலப்பல ஆபாசங்கள் தோன்றிக் குவிந்தன. அவ்வாபாசங்கள் இயற்கைத் தத்துவத்துக்கு அடங்காதனவாய்க் கிடக்கின்றன. அவைகளால் நாடு பல வழியிலும் பாழ்படுகிறது. இங்கே இயற்கைத் தத்துவத்துக்கும் பொருளாகிப் பொருந்தும் சில வடிவங்களை நோக்குவோம்; அவைகளை ஆழ்வார் திருப்பாடல் வாயிலாக நோக்குவோம்.
தாம்பாலாப்... ...
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.
எல்லாவற்றிலும் நீக்கமற நின்று, அதை அதை உருப்படுத்தும் இறை, சித்தாய் (அறிவாய்)ப் பொலிவது. அதுவே அதன் தொல்லுருவம்; அழியா உருவம். அது வாக்கு மனங்கட்கு எட்டாதது. இறைவனைக் 'காண்டற்கரியன்' என்று ஆழ்வார் பலவிடங்களில் அருளியுள்ளார். வாக்கு மனங்கடந்த முழுமுதற் பொருளை வாக்கு மனமுடையார் எப்படி வழிபடுவது? இதற்கு இயற்கைவழிபாடென்றும், இயற்கைப்பட வழிபாடென்றும் இரண்டு ஏற்பட்டிருக்கின்றன. இயற்கைப்பட வழிபாடு, இயற்கை இறையை உணர்த்தும். இயற்கை வழிபாடு தனித்த இறையை உணர்த்தும்.
கண்ணுஞ்செந் தாமரை கையும்
அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை
போன்று மதவிகற்பால்
விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்
குமற்றெப் பால்யவர்க்கும்
எண்ணு மிடத்ததுவோ எம்பி
ரான தெழில்நிறமே.
இத் திருவாக்கை நெஞ்சிற் கொள்வோம். 'கண்ணும் செந்தாமரை - கையும் அவை - அடியோ அவையே - வண்ணம் கரியதோர் மால்வரை...'- இஃதோர் இயற்கைப்படம். கண்ணும் கையும் அடியும் செந்தாமரை. மேனி கரியது; மால் வரை போன்றது. கரிய நீலமேனியில் செந்தாமரைக் கண்; செந்தாமரைக் கை; செந்தாமரை அடி. கருநீலத்தில் செம்மை மலர்வது அழகியதன்றோ?
வானளாவிய நீலமலை; அதன் முடியிலும் நடுவிலும் அடியிலும் செவ்விய தாமரைக்காடு. இக் காட்சியை நோக்குவோம். இது புலன்களுக்கு விருந்தாகிறது. இதில் இயற்கை அன்னையின் எழில் மணம் வீசுகிறது. அவ்வெழிலில் நெஞ்சம் படிகிறது; திளைக்கிறது; எழுகிறது; அதை முன்னுகிறது. அழகுத் தோற்றம் மனத்தில் படமாகிறது. படம் பாவலர்க்குப் பாட்டாகிறது; ஓவியர்க்கு ஓவியமாகிறது. பாட்டும் ஓவியமும் இயற்கையின் அமைவு அல்லவோ? பாட்டும் ஓவியமும் தம்பால் ஈடுபடுவோரைப் பாலம்போல நின்று, இயற்கை அன்னையுடன் சேர்க்கின்றன. இயற்கை அன்னை என்ன செய்கிறாள்? தன்பால் அணைந்த ஆருயிர்களைத் தன் வயப்படுத்தி, அப்பனாம் இறையினிடஞ் சேர்க்கிறாள். அதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை. அது சொல்லற்கரியது. சொல்லற்கரிய நிலை, பாட்டின் பின்னிரண்டடியில் திகழ்கிறது.
'விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்,
எண்ணுமிடத்தவோ எம்பி ரான தெழில் நிறமே'
என்பது வாக்கு மனங் கடந்த இறை நிலையை உணர்த்துவது.
இறை நிலையையும், அதன் நிறம் கோலம் முதலியவற்றின் நுட்பத்தையும்,
நிறமுயர் கோலமும் பேரு
முருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள்
பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்
காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்
பிரான் பெருமையையே.
என்று ஆழ்வார் விளக்கியுள்ளதைச் சிந்தித்துப் பார்க்க; சிந்தித்துச் சிந்தித்து உண்மை தெளிக.
இறையை நேரே மனவுணர்வின் உணர்தல் இயலாது. இறையை உணர்தற்கு இயற்கையின் துணை தேவை. இயற்கை வழி நின்று இறையை உணர்தல் வேண்டும் என்பதும், இயற்கையை விடுத்து இறைய உணர்தல் இயலாது என்பதும் முன்னே விளக்கப்பட்டன. காவியர் ஓவியர் முதலியோர் இறையின் உடலாகிய இயற்கைக் கோலங்களைப் பாக்களாக எழுதியும், ஓவியங்களாக வரைந்தும் வடித்தும் இன்புறுவது வழக்கம். அவர்தம் பாக்களிலும் ஓவியங்களிலும் இயற்கைக் கோலங்கள் படிகின்றன. அப் படிவுகளால் இயற்கைப் படங்கள் முகிழ்க்கின்றன. அப் படங்களின் கூறுகளைச் சிந்தையாற் பெருக்கிப் பெருக்கிப் பார்த்தால், அவைகள் இயற்கைக் கோலங்களாக முடிதல் காணலாம். வெறும் எழுத்தும், கீறலும், சாந்தும், பிறவும் படங்களாகா. அவ்வெழுத்து முதலியவற்றில், காவிய ஓவியர் அறிவில் படிந்து இறங்கி அமையும் இயற்கைக் கோலமே 'படம்' என்னும் பெயர் பெறுகிறது. இயற்கைப் படங்களினின்றும் உருவங்கள் பிறக்கின்றன. அவ்வுருவங்கள் இயற்கைக் கோலங்களின் அறிகுறிகள் என்பதை மறத்தலாகாது. இதைப் பற்றி 'முருகன் அல்லது அழகு' என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். அதையே ஈண்டு மீண்டுங் கூற வேண்டியதில்லை. விரிவு ஆண்டுக் காண்க.
தொடக்கத்தில், உருவம், இயற்கை இறையை நினைவூட்டும் அறிகுறியாகக் கொள்ளப்பட்டது. நாளடைவில் அதற்கு வழிபாடு ஏற்பட்டது. இயற்கை இறை நினைவின்றி, உருவத்தையே பொருளாகக் கொண்டு, அதையே நினைந்து நினைந்து செய்யப்படும் வழிபாடு தவறுதலுடையது. அவ் வழிபாடு விக்கிரக ஆராதனையின்பாற்பட்டது. உருவத்தைப் பொருளாகக் கொள்ளாது, அவ்வுருவம் உணர்த்தும் தத்துவத்தைப் பொருளாகக் கொண்டு, செய்யப்படும் வழிபாட்டுக்கு அர்த்தம் உண்டு. அது நாளடைவில் இயற்கை இறையை உணர்த்துவதாகும். தத்துவ உணர்வின்றி, வெறும் உருவத்தை மட்டும் வழிபடுவது, இயற்கை இறையை உணர்த்துவதாகாது.
காவியத்தின் வழியும் ஓவியத்தின் வழியும் பிறந்த வடிவங்கள் பலப்பல; அவ் வடிவங்களினின்றும் எழுந்த புராணக் கதைகளும் பலப்பல. தொடக்கத்தில் அவைகள் இயற்கைத் தத்துவ நுட்பங்களுக்கு அறிகுறிகளாகக் கொள்ளப்பட்டன. பின்னே காவியம் ஓவியம் புராணம் என்னும் பெயர்களால் பலப்பல ஆபாசங்கள் தோன்றிக் குவிந்தன. அவ்வாபாசங்கள் இயற்கைத் தத்துவத்துக்கு அடங்காதனவாய்க் கிடக்கின்றன. அவைகளால் நாடு பல வழியிலும் பாழ்படுகிறது. இங்கே இயற்கைத் தத்துவத்துக்கும் பொருளாகிப் பொருந்தும் சில வடிவங்களை நோக்குவோம்; அவைகளை ஆழ்வார் திருப்பாடல் வாயிலாக நோக்குவோம்.
தாம்பாலாப்... ...
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.
எல்லாவற்றிலும் நீக்கமற நின்று, அதை அதை உருப்படுத்தும் இறை, சித்தாய் (அறிவாய்)ப் பொலிவது. அதுவே அதன் தொல்லுருவம்; அழியா உருவம். அது வாக்கு மனங்கட்கு எட்டாதது. இறைவனைக் 'காண்டற்கரியன்' என்று ஆழ்வார் பலவிடங்களில் அருளியுள்ளார். வாக்கு மனங்கடந்த முழுமுதற் பொருளை வாக்கு மனமுடையார் எப்படி வழிபடுவது? இதற்கு இயற்கைவழிபாடென்றும், இயற்கைப்பட வழிபாடென்றும் இரண்டு ஏற்பட்டிருக்கின்றன. இயற்கைப்பட வழிபாடு, இயற்கை இறையை உணர்த்தும். இயற்கை வழிபாடு தனித்த இறையை உணர்த்தும்.
கண்ணுஞ்செந் தாமரை கையும்
அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை
போன்று மதவிகற்பால்
விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்
குமற்றெப் பால்யவர்க்கும்
எண்ணு மிடத்ததுவோ எம்பி
ரான தெழில்நிறமே.
இத் திருவாக்கை நெஞ்சிற் கொள்வோம். 'கண்ணும் செந்தாமரை - கையும் அவை - அடியோ அவையே - வண்ணம் கரியதோர் மால்வரை...'- இஃதோர் இயற்கைப்படம். கண்ணும் கையும் அடியும் செந்தாமரை. மேனி கரியது; மால் வரை போன்றது. கரிய நீலமேனியில் செந்தாமரைக் கண்; செந்தாமரைக் கை; செந்தாமரை அடி. கருநீலத்தில் செம்மை மலர்வது அழகியதன்றோ?
வானளாவிய நீலமலை; அதன் முடியிலும் நடுவிலும் அடியிலும் செவ்விய தாமரைக்காடு. இக் காட்சியை நோக்குவோம். இது புலன்களுக்கு விருந்தாகிறது. இதில் இயற்கை அன்னையின் எழில் மணம் வீசுகிறது. அவ்வெழிலில் நெஞ்சம் படிகிறது; திளைக்கிறது; எழுகிறது; அதை முன்னுகிறது. அழகுத் தோற்றம் மனத்தில் படமாகிறது. படம் பாவலர்க்குப் பாட்டாகிறது; ஓவியர்க்கு ஓவியமாகிறது. பாட்டும் ஓவியமும் இயற்கையின் அமைவு அல்லவோ? பாட்டும் ஓவியமும் தம்பால் ஈடுபடுவோரைப் பாலம்போல நின்று, இயற்கை அன்னையுடன் சேர்க்கின்றன. இயற்கை அன்னை என்ன செய்கிறாள்? தன்பால் அணைந்த ஆருயிர்களைத் தன் வயப்படுத்தி, அப்பனாம் இறையினிடஞ் சேர்க்கிறாள். அதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை. அது சொல்லற்கரியது. சொல்லற்கரிய நிலை, பாட்டின் பின்னிரண்டடியில் திகழ்கிறது.
'விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்,
எண்ணுமிடத்தவோ எம்பி ரான தெழில் நிறமே'
என்பது வாக்கு மனங் கடந்த இறை நிலையை உணர்த்துவது.
இறை நிலையையும், அதன் நிறம் கோலம் முதலியவற்றின் நுட்பத்தையும்,
நிறமுயர் கோலமும் பேரு
முருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள்
பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்
காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்
பிரான் பெருமையையே.
என்று ஆழ்வார் விளக்கியுள்ளதைச் சிந்தித்துப் பார்க்க; சிந்தித்துச் சிந்தித்து உண்மை தெளிக.
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Monday, November 9, 2009
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 5. இயற்கை - 2
இதுகாலை, நமது நாட்டில் பறவை முதலியவற்றை நோக்கிப் பாடுவோருளரோ? பறவைகளும் வாடுங்காலமன்றோ இக்காலம்? பறவைகளுக்கே மகிழ்ச்சியில்லை எனில் பாடுவோர்க்கு மகிழ்ச்சி ஏது? பாட்டென்பது மகிழ்ச்சியின் பொங்கலன்றோ? பறவைகளே! உங்களைக் கூவிக் கூவிக் கடவுளைப் பாடுவோர் இப்போது இல்லை. உங்கள் முன்னோரை நம்மாழ்வார் பாடியிருக்கிறார்! அழைத்திருக்கிறார்; தூது கொண்டிருக்கிறார். இப்பொழுதோ? உங்கள் தலை எழுத்தோ? எங்கள் தலை எழுத்தோ? தெரியவில்லை.
இவ்வாறு நம்மாழ்வார் இயற்கை வாயிலாக் கடவுளைக் கண்டு மகிழ்ந்து பாடிய முறையால் தமிழ் நாட்டை வளர்த்தது கருதற்பாலது.
'இயற்கை உடல் இறை உயிர்' என்பதை ஆழ்வார் இன்னும் எத்தனை எத்தனையோ விதம் விதமாக விளக்கியுள்ளார். அவைகளில் இங்கே ஒன்று சிறப்பாகக் குறிக்கத் தக்கது. அஃது ஆழ்வார் முன்னே இயற்கையை வருணித்துப் பின்னே மூர்த்தியைப் போற்றுவது. இதன் நுட்பம் என்னை?
திருப்பதிகளில் மூர்த்தி எழுந்தருளி யிருக்கிறார். அம்மூர்த்தியைப் பெரிதும் சோலையோ ஆறோ பிறவோ சூழ்ந்திருக்கும். இயற்கை வளம் மிகுந்துள்ள இடங்களிலேயே பண்டை நாளில் பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. இயற்கை உடல் என்பதும், இறை உயிர் என்பதும் மேலே விளக்கப்பட்டன. இவ்வுண்மையை உள்ளத்திற் கொண்டு, இயற்கை வளஞ்சூழ்ந்த திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள மூர்த்தியைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். சிந்தித்துப் பார்க்கப் பார்க்க, 'இயற்கை உடல் இறை உயிர்' என்னும் உண்மைக்கு, இயற்கை வளஞ் சூழ்ந்த இடத்தில் மூர்த்தி எழுந்தருளியிருப்பது ஒருவித அறிகுறி என்பது புலனாகும். 'இயற்கை உடல் - இறை அதன் உயிர்' என்பதை உணர்த்துதற்குத் திருக்கோயில்கள் சிறந்த இலக்கியங்களாகவும் படங்களாகவும் பொலிதருகின்றன.
நம்மாழ்வார், 'இயற்கை உடல் இறை உயிர்' என்னும் உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிந்தவர். அவர் அவ்வுண்மையைச் சீரிய செந்தமிழ்ப் பாக்களால் உலகுக்கு உணர்த்துகிறார். ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.
சொன்னால் விரோதம் ... ... ...
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை... ...
ஆரா அமுதே ... ... ...
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ... ...
மானேய் நோக்கு நல்லீர் ... ... ...
வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
கோனாரை ... ....
என்றுகொல் தோழிமீர் ... ... ...
பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான் ... ...
நிச்சலும் ...
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.
காண்பதெஞ் ஞான்று... ...
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான்...
பாதங்கள் ... ... ...
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை ...
நாடொறும் ... ...
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் ...
கழல்வளை ... ...
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலில் மலிசக்கரப் பெருமான்...
உணர்த்த லூடல்... ...
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை...
நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு
செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை
வண்துலை வில்லி மங்கலம்...
காலம் பெற ... ...
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல்
திருப்பேரையிற்கே.
எளிதாயின ... ...
கிளிதா வியசோலை கள்சூழ் திருப்பேரான்...
உண்டுகளித் ... ...
வண்டுகளிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்...
ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்த இத் திருமொழிகளில் இயற்கை இறைமணங் கமழ்தலைத் தேர்க.
இயற்கை இன்பத் துறைகளுள் தலையாயது பெண்ணின்பம். பெண்ணின்பத்தைத் துறப்பது, இயற்கை இன்பத்தைத் துறப்பதாகும். இயற்கை இன்பத்தைத் துறத்தல் இறை இன்பத்தைத் துறத்தலாகும். இயற்கை அமைப்பைக் கூர்ந்து நோக்கி, அதன்வழி ஒழுகினால், இறை இன்பத்துக்கு ஊற்றாயிருப்பது பெண்ணின்பமென்பது நனி விளங்கும்.
இப்பெற்றி வாய்ந்த பெண்ணின்பத்தைத் துறத்தல் வேண்டுமென்றும், அத்துறவு பேரின்பத்தைக் கூட்டுமென்றும் ஓரிழிந்த கொள்கை இடைக்காலத்தில் உலகிடை நுழையலாயிற்று. அக் கொள்கையைப் பின்னவர், பெரியோர் உரைகள் மீது ஏற்றிவிட்டனர். இஃது அறியாமை.
பெண்மை துறக்கத் தக்கதாயின், அஃது இயற்கையில் அமைய வேண்டுவதில்லை. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தல் கண்கூடு. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தலால், அதன் உயிராகிய இறையும் அம் மயமாயிருத்தல் வேண்டும். இயற்கை வழி இறை உண்மையை உணர்ந்த ஆன்றோர், இறையின்பால் பெண் ஆண் கூறு இருத்தலை உலகுக்கு உரைத்தனர். இவ்வுண்மை கண்ட நாடு நமது நாடு. இப் பெரு நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? பெண்ணைத் துறந்தால் பேரின்பத்திற்கு வழியுண்டாகும்' என்னுஞ் சோம்பேறி ஞானம் பேசி, அடிமை இருளில் அது வீழ்ந்து கிடக்கிறது. பெண்மை இல்லையேல் உலகம் ஏது? தாய்மைக்கு இடம் ஏது? தாயைப் பழித்த பாவம் நாட்டைச் சூழ்ந்து நிற்கிறது. இது குறித்துப் 'பெண்ணின் பெருமை' முதலிய நூல்களில் விரித்துக் கூறியுள்ளேன்.
நம்மாழ்வார் இறையருள் பெற்றவர்; இறையையுணர்ந்தவர்; இயற்கை வடிவாக இறை பொலிவதைக் கண்டவர்; இயற்கையின் பெண்மையும் ஆண்மையும் அதன் உயிராயுள்ள இறையினிடத்தும் இருத்தலைத் தெளிந்தவர். அதனால் எல்லாப் பெண்மைக்கும் ஆண்மைக்கும் வித்தாயுள்ள இறையின் பெண்மையைத் தாய் என்றும், அதன் ஆண்மையைத் தந்தை என்றும் அவர் பாடலானார்.
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ ...
மாயோனிகளாய் ... ...
... ... எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ...
நீயும் நானும் ... ...
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.
ஒத்தார் ...
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த
அத்தா ...
போகின்ற ... ... தாய் தந்தை உயிர்
ஆகின்றாய்...
மேலாத்... ...
மேலாத் தாய் தந்தையும் அவரே...
வந்தருளி ...
முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்...
சிந்தையாலும் ... தேவபிரானையே
தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்...
இறையின் பெண்மை நலந்துயிக்க உயிர்கள் பெண்ணலம் பேணுதல் வேண்டும். பெண்ணலம் பேணப் பேணப் பெண்மை பரிணமிக்கும். பெண்மையாவது, பொறாமை முதலிய தீநீர்மைகள் ஒழிந்து, பொறுமை முதலிய நன்னீர்மைகளைப் பெறுவது - அதாவது அருள்நிலை பெறுவது. இப் பெண்மை பெறாதவர் மாக்களாக உலகில் வாழ்ந்து பிறர்க்குத் தீங்கு விளைத்த வண்ணமிருப்பர். அவரைப் பண்படுத்தவல்லது இறையின் பெண்மைக் கூறாகும்.
ஆழ்வார் இறைவனது பெண்ணலந் துய்த்துப் பெண்மை நிலை எய்திப் பேறு பெற்றவர். இதற்கு அவர் தம் அருட்டிருப்பாக்களே சான்று கூறும். நம்மாழ்வார் பாக்களில் அகத்துறை நலம் கமழ்தல் கருதற்பாலது. பொதுவாக அவர்தம் பாக்களில் பலவற்றிலும் - சிறப்பாக அவர்தம் திருவிருத்தத்திலும் அகத்துறை நலங் கமழ்தல் வெள்ளிடைமலை. அந் நலம்பட ஆழ்வார் எற்றுக்குப் பாடினார்? உலகம் அந் நலம் பெறுதல் வேண்டுமென்பது அவரது உள்ளக்கிடக்கை.
இடைநாளில் பெண்ணைப் பற்றிய சிறுமைகள் பல உலகிடைப் பரவின. இதற்குப் போலிச் சந்நியாசிகளும் போலி ஞானிகளுமே காரணர்களாவார்கள். இவர்கள் பெண்ணை மாயை என்றும், பெண் பிறவிக்கு வீடு பேறில்லை என்றும், பெண்ணைத் துறந்தால் பேரின்பம் விளையும் என்றும் பல கதைகளைக் கட்டிவ் விட்டார்கள். அக் கதைகளால் உலகம் கெடலாயிற்று. அக் கேட்டினை ஒழிக்கவே ஆங்காங்குப் பெரியோர் தோன்றினர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தாம் நுகர்ந்த இறையின்பத்தை அகத்துறைப் பாக்களாக வார்த்து உலகுக்கு உதவினார். அப் பாக்களில் தமிழ்ப் பெண்மை தாண்டவம் புரிகிறது.
திண் பூஞ்சுடர் நுதி நேமியஞ்
செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணிவல்லி யாரே
பிரிபவர் தாம் இவையோ
கண்பூங்கமலம் கருஞ்சுட
ராடிவெண்முத்தரும்பி
வண்பூங்குவளை மடமான்
விழிக்கின்ற மாயிதழே.
மாயோன் வடதிருவேங்கட
நாடவல்லிக் கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்
றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினை
யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடுந்தொண்டையோ அறை
யோவிதறிவரிதே.
அருளார் திருச்சக் கரத்தால்
அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல்
நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ வெனுமிகழ் வோஇவற்
றின்புறத் தாளென் றெண்ணோ
தெருளோம் அரவணை யீர் இவள்
மாமை சிதைக்கின்றதே.
பண்டும் பலபல வீங்கிருள்
காண்டும் இப்பாயிருள்போல்
கண்டு மறிவது கேட்பதும்
யாமிலம் காளவண்ண
வண்டுண் துழாய்ப் பெருமான்மது
சூதனன் தாமோதரன்
உண்டு முமிழ்ந்தும் கடாயமண்
ணேரன்ன ஒண்ணுதலே.
வண்ணம் சிவந்துள வானோ
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகன் தன்
னொடும் காதல் செய்தேற்
கெண்ணம் புகுந்தடி யெனொடிக்
கால மிருக்கின்றதே.
காலும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரரைச் செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன்னாள் கண்களாய துணைமலரே.
கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே.
பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவுபண் பெண்ணில்
பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணைமே லாற்கேயோ.
உகவை யால்நெஞ்ச முள்ளு ருகியுன்
தாமரைத் தடங்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான்
அழித்தாயுன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்
யாமடுசிறு சோறுங் கண்டுநின்
முகவொளி திகழ முறுவல்
செய்து நின்றிலையே.
இத் தமிழ்ப் பெண்மையில் தோய்ந்து தமிழ்ப் பெண்மை பெறுக.
இயற்கை, இறையின் உடலாகலான், அஃது இன்பமுடையது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அத்தகைய ஒன்றை வெறுத்துத் துறப்பது இறைநெறி நிற்பதாகாது. இக்கால உலகம் பெரிதும் இயற்கையினின்றும் வழுக்கிச் செயற்கையிலே வீழ்ந்து கிடக்கிறது. அதனால் அஃது உற்றுவருந் துன்பத்துக்கு ஓர் அளவில்லை. இப்பொழுது உலக முழுவதும் குழப்பமாயிருத்தல் கண்கூடு. அக்குழப்பம் எப்படி ஒழியும்? உலகம் இயற்கைவழி நிற்பதாயின், குழப்பம் ஒழிதல் திண்ணம். ஆழ்வார் தமிழில், இயற்கை நெறிமிக அழகுபடப் பொலிகிறது. அந் நெறி நிற்பதற்குக் கட்டில்லை; காவலில்லை. அந் நெறியில் உலகம் ஏன் நிற்றல் கூடாது? நிற்க எழுக! எழுக! உலகமே எழுக!
இவ்வாறு நம்மாழ்வார் இயற்கை வாயிலாக் கடவுளைக் கண்டு மகிழ்ந்து பாடிய முறையால் தமிழ் நாட்டை வளர்த்தது கருதற்பாலது.
'இயற்கை உடல் இறை உயிர்' என்பதை ஆழ்வார் இன்னும் எத்தனை எத்தனையோ விதம் விதமாக விளக்கியுள்ளார். அவைகளில் இங்கே ஒன்று சிறப்பாகக் குறிக்கத் தக்கது. அஃது ஆழ்வார் முன்னே இயற்கையை வருணித்துப் பின்னே மூர்த்தியைப் போற்றுவது. இதன் நுட்பம் என்னை?
திருப்பதிகளில் மூர்த்தி எழுந்தருளி யிருக்கிறார். அம்மூர்த்தியைப் பெரிதும் சோலையோ ஆறோ பிறவோ சூழ்ந்திருக்கும். இயற்கை வளம் மிகுந்துள்ள இடங்களிலேயே பண்டை நாளில் பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. இயற்கை உடல் என்பதும், இறை உயிர் என்பதும் மேலே விளக்கப்பட்டன. இவ்வுண்மையை உள்ளத்திற் கொண்டு, இயற்கை வளஞ்சூழ்ந்த திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள மூர்த்தியைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். சிந்தித்துப் பார்க்கப் பார்க்க, 'இயற்கை உடல் இறை உயிர்' என்னும் உண்மைக்கு, இயற்கை வளஞ் சூழ்ந்த இடத்தில் மூர்த்தி எழுந்தருளியிருப்பது ஒருவித அறிகுறி என்பது புலனாகும். 'இயற்கை உடல் - இறை அதன் உயிர்' என்பதை உணர்த்துதற்குத் திருக்கோயில்கள் சிறந்த இலக்கியங்களாகவும் படங்களாகவும் பொலிதருகின்றன.
நம்மாழ்வார், 'இயற்கை உடல் இறை உயிர்' என்னும் உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிந்தவர். அவர் அவ்வுண்மையைச் சீரிய செந்தமிழ்ப் பாக்களால் உலகுக்கு உணர்த்துகிறார். ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.
சொன்னால் விரோதம் ... ... ...
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை... ...
ஆரா அமுதே ... ... ...
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ... ...
மானேய் நோக்கு நல்லீர் ... ... ...
வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
கோனாரை ... ....
என்றுகொல் தோழிமீர் ... ... ...
பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான் ... ...
நிச்சலும் ...
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.
காண்பதெஞ் ஞான்று... ...
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான்...
பாதங்கள் ... ... ...
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை ...
நாடொறும் ... ...
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் ...
கழல்வளை ... ...
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலில் மலிசக்கரப் பெருமான்...
உணர்த்த லூடல்... ...
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை...
நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு
செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை
வண்துலை வில்லி மங்கலம்...
காலம் பெற ... ...
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல்
திருப்பேரையிற்கே.
எளிதாயின ... ...
கிளிதா வியசோலை கள்சூழ் திருப்பேரான்...
உண்டுகளித் ... ...
வண்டுகளிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்...
ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்த இத் திருமொழிகளில் இயற்கை இறைமணங் கமழ்தலைத் தேர்க.
இயற்கை இன்பத் துறைகளுள் தலையாயது பெண்ணின்பம். பெண்ணின்பத்தைத் துறப்பது, இயற்கை இன்பத்தைத் துறப்பதாகும். இயற்கை இன்பத்தைத் துறத்தல் இறை இன்பத்தைத் துறத்தலாகும். இயற்கை அமைப்பைக் கூர்ந்து நோக்கி, அதன்வழி ஒழுகினால், இறை இன்பத்துக்கு ஊற்றாயிருப்பது பெண்ணின்பமென்பது நனி விளங்கும்.
இப்பெற்றி வாய்ந்த பெண்ணின்பத்தைத் துறத்தல் வேண்டுமென்றும், அத்துறவு பேரின்பத்தைக் கூட்டுமென்றும் ஓரிழிந்த கொள்கை இடைக்காலத்தில் உலகிடை நுழையலாயிற்று. அக் கொள்கையைப் பின்னவர், பெரியோர் உரைகள் மீது ஏற்றிவிட்டனர். இஃது அறியாமை.
பெண்மை துறக்கத் தக்கதாயின், அஃது இயற்கையில் அமைய வேண்டுவதில்லை. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தல் கண்கூடு. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தலால், அதன் உயிராகிய இறையும் அம் மயமாயிருத்தல் வேண்டும். இயற்கை வழி இறை உண்மையை உணர்ந்த ஆன்றோர், இறையின்பால் பெண் ஆண் கூறு இருத்தலை உலகுக்கு உரைத்தனர். இவ்வுண்மை கண்ட நாடு நமது நாடு. இப் பெரு நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? பெண்ணைத் துறந்தால் பேரின்பத்திற்கு வழியுண்டாகும்' என்னுஞ் சோம்பேறி ஞானம் பேசி, அடிமை இருளில் அது வீழ்ந்து கிடக்கிறது. பெண்மை இல்லையேல் உலகம் ஏது? தாய்மைக்கு இடம் ஏது? தாயைப் பழித்த பாவம் நாட்டைச் சூழ்ந்து நிற்கிறது. இது குறித்துப் 'பெண்ணின் பெருமை' முதலிய நூல்களில் விரித்துக் கூறியுள்ளேன்.
நம்மாழ்வார் இறையருள் பெற்றவர்; இறையையுணர்ந்தவர்; இயற்கை வடிவாக இறை பொலிவதைக் கண்டவர்; இயற்கையின் பெண்மையும் ஆண்மையும் அதன் உயிராயுள்ள இறையினிடத்தும் இருத்தலைத் தெளிந்தவர். அதனால் எல்லாப் பெண்மைக்கும் ஆண்மைக்கும் வித்தாயுள்ள இறையின் பெண்மையைத் தாய் என்றும், அதன் ஆண்மையைத் தந்தை என்றும் அவர் பாடலானார்.
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ ...
மாயோனிகளாய் ... ...
... ... எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ...
நீயும் நானும் ... ...
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.
ஒத்தார் ...
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த
அத்தா ...
போகின்ற ... ... தாய் தந்தை உயிர்
ஆகின்றாய்...
மேலாத்... ...
மேலாத் தாய் தந்தையும் அவரே...
வந்தருளி ...
முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்...
சிந்தையாலும் ... தேவபிரானையே
தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்...
இறையின் பெண்மை நலந்துயிக்க உயிர்கள் பெண்ணலம் பேணுதல் வேண்டும். பெண்ணலம் பேணப் பேணப் பெண்மை பரிணமிக்கும். பெண்மையாவது, பொறாமை முதலிய தீநீர்மைகள் ஒழிந்து, பொறுமை முதலிய நன்னீர்மைகளைப் பெறுவது - அதாவது அருள்நிலை பெறுவது. இப் பெண்மை பெறாதவர் மாக்களாக உலகில் வாழ்ந்து பிறர்க்குத் தீங்கு விளைத்த வண்ணமிருப்பர். அவரைப் பண்படுத்தவல்லது இறையின் பெண்மைக் கூறாகும்.
ஆழ்வார் இறைவனது பெண்ணலந் துய்த்துப் பெண்மை நிலை எய்திப் பேறு பெற்றவர். இதற்கு அவர் தம் அருட்டிருப்பாக்களே சான்று கூறும். நம்மாழ்வார் பாக்களில் அகத்துறை நலம் கமழ்தல் கருதற்பாலது. பொதுவாக அவர்தம் பாக்களில் பலவற்றிலும் - சிறப்பாக அவர்தம் திருவிருத்தத்திலும் அகத்துறை நலங் கமழ்தல் வெள்ளிடைமலை. அந் நலம்பட ஆழ்வார் எற்றுக்குப் பாடினார்? உலகம் அந் நலம் பெறுதல் வேண்டுமென்பது அவரது உள்ளக்கிடக்கை.
இடைநாளில் பெண்ணைப் பற்றிய சிறுமைகள் பல உலகிடைப் பரவின. இதற்குப் போலிச் சந்நியாசிகளும் போலி ஞானிகளுமே காரணர்களாவார்கள். இவர்கள் பெண்ணை மாயை என்றும், பெண் பிறவிக்கு வீடு பேறில்லை என்றும், பெண்ணைத் துறந்தால் பேரின்பம் விளையும் என்றும் பல கதைகளைக் கட்டிவ் விட்டார்கள். அக் கதைகளால் உலகம் கெடலாயிற்று. அக் கேட்டினை ஒழிக்கவே ஆங்காங்குப் பெரியோர் தோன்றினர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தாம் நுகர்ந்த இறையின்பத்தை அகத்துறைப் பாக்களாக வார்த்து உலகுக்கு உதவினார். அப் பாக்களில் தமிழ்ப் பெண்மை தாண்டவம் புரிகிறது.
திண் பூஞ்சுடர் நுதி நேமியஞ்
செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணிவல்லி யாரே
பிரிபவர் தாம் இவையோ
கண்பூங்கமலம் கருஞ்சுட
ராடிவெண்முத்தரும்பி
வண்பூங்குவளை மடமான்
விழிக்கின்ற மாயிதழே.
மாயோன் வடதிருவேங்கட
நாடவல்லிக் கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்
றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினை
யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடுந்தொண்டையோ அறை
யோவிதறிவரிதே.
அருளார் திருச்சக் கரத்தால்
அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல்
நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ வெனுமிகழ் வோஇவற்
றின்புறத் தாளென் றெண்ணோ
தெருளோம் அரவணை யீர் இவள்
மாமை சிதைக்கின்றதே.
பண்டும் பலபல வீங்கிருள்
காண்டும் இப்பாயிருள்போல்
கண்டு மறிவது கேட்பதும்
யாமிலம் காளவண்ண
வண்டுண் துழாய்ப் பெருமான்மது
சூதனன் தாமோதரன்
உண்டு முமிழ்ந்தும் கடாயமண்
ணேரன்ன ஒண்ணுதலே.
வண்ணம் சிவந்துள வானோ
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகன் தன்
னொடும் காதல் செய்தேற்
கெண்ணம் புகுந்தடி யெனொடிக்
கால மிருக்கின்றதே.
காலும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரரைச் செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன்னாள் கண்களாய துணைமலரே.
கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே.
பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவுபண் பெண்ணில்
பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணைமே லாற்கேயோ.
உகவை யால்நெஞ்ச முள்ளு ருகியுன்
தாமரைத் தடங்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான்
அழித்தாயுன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்
யாமடுசிறு சோறுங் கண்டுநின்
முகவொளி திகழ முறுவல்
செய்து நின்றிலையே.
இத் தமிழ்ப் பெண்மையில் தோய்ந்து தமிழ்ப் பெண்மை பெறுக.
இயற்கை, இறையின் உடலாகலான், அஃது இன்பமுடையது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அத்தகைய ஒன்றை வெறுத்துத் துறப்பது இறைநெறி நிற்பதாகாது. இக்கால உலகம் பெரிதும் இயற்கையினின்றும் வழுக்கிச் செயற்கையிலே வீழ்ந்து கிடக்கிறது. அதனால் அஃது உற்றுவருந் துன்பத்துக்கு ஓர் அளவில்லை. இப்பொழுது உலக முழுவதும் குழப்பமாயிருத்தல் கண்கூடு. அக்குழப்பம் எப்படி ஒழியும்? உலகம் இயற்கைவழி நிற்பதாயின், குழப்பம் ஒழிதல் திண்ணம். ஆழ்வார் தமிழில், இயற்கை நெறிமிக அழகுபடப் பொலிகிறது. அந் நெறி நிற்பதற்குக் கட்டில்லை; காவலில்லை. அந் நெறியில் உலகம் ஏன் நிற்றல் கூடாது? நிற்க எழுக! எழுக! உலகமே எழுக!
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Saturday, October 10, 2009
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 5. இயற்கை - 1
5. இயற்கை
மண் புனல் முதலியனன் இயற்கையின் கூறுகள். அவற்றை மண் புனல் முதலியன என்று வகுத்துச் சொல்வதற்குப் பதிலாக இயற்கை என்று தொகுத்துங் கூறலாம்.
இயற்கை உடல்; இறை உயிர். இறையாகிய உயிர், இயற்கையாகிய உடல் வாயிலாக உயிர்கட்கெல்லாம் நலஞ் செய்கிறது. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள தொடர்பு, நமது உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது.
உடல் புலனாவது, உயிர் புலனாகாதது. புலனாகாதா உயிரின் உண்மையை எப்படி உணர்கிறோம்? புலனாகும் உடலைக்கொண்டே புலனாகாத உயிர் உண்மையை உணர்கிறோம். இவ்வாறே உடலாகிய இயற்கையைக் கொண்டு, உயிராகிய இறையின் உண்மையை உணர்தல் வேண்டும். இதனை ஆழ்வார்,
திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.
என்று நுண்மையாக விளங்கியிருத்தலை ஓர்க.
இயற்கையை விடுத்து, இறையை உணர்தல் அரிது. இயற்கை வழி இறையை உணரவேண்டி யிருத்தலால், இயற்கையை இறைவடிவாகவும் இறையாகவும் போற்றுதல் ஆன்றோர் வழக்கு. இத்தகைய இயற்கையை வெறுப்பதும் துறப்பதும் அறியாமையாகும். இறை இறை என்று வாயால் முழங்கிச் செயலில் இயற்கையை வெறுத்துத் துறப்பது ஆத்திகமாகாது.
இயற்கை கடந்த இறை நிலையும் உண்டு. அது காண்டற்கரியது; மனத்தாலும் உணர்தற்கரியது. மன உணர்வு கடந்த நிலையில் அது விளங்குகிறது.
இலனது வுடையனி தெனநினைவ் வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.
யாருமோர் நிலைமையனெனவறி வரியஎம்பெருமான்...
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது...
என்றார் ஆழ்வாரும்.
மனவுணர்வுடையோர், இயற்கையக் கடந்துள்ள இறைநிலையைப் பற்றி மல்லாட வேண்டுவதில்லை. அவர் இயற்கை வடிவாயுள்ள இறையைக் கருத்திருத்தி வழுத்தவே முயலல் வேண்டும். இவ் வழிபாடு, படிப்படியாக ஓங்கி, மனங்கடந்த தனி உணர்வு நிலையைக் கூட்டும். மனவுணர்வு கடந்து நின்ற ஆன்றோர் பலரும் இயற்கை இறையையே பெரிதும் போற்றினர். இயற்கை கடந்த தனி இறையை மிகச் சிறிது குறிப்பிடுவது அவர்தம் வழக்கம். உலகம், இயற்கையை விடுத்தால், அஃது இறை உண்மையை உணராது இடர்ப்படும் என்ற கருணை மேலீட்டான், ஆன்றோர் இயற்கை இறையையே பெரிதும் உலகுக்கு அறிவுறுத்தலாயினர்.
இயற்கையைப் போற்றுவதும், இயற்கை இறையைப் போற்றுவதும் ஒன்றே. சில அறிஞர் இறையை இயற்கை என்றே போற்றுவர்; சிலர் இயற்கை வடிவான இறை என்று போற்றுவர். அப்போற்றுதலும் இப்போற்றுதலும் சென்று சேருமிடம் ஒன்றே. ஆகவே, இயற்கையைப் போற்றுவோர் யாவரும் இறையைப் போற்றுவோரேயாவர். இதுபற்றிப் பொதுவாக எனது நூல் பலவற்றிலும், சிறப்பாகச் 'சன்மார்க்கப் போதமும் திறவும்' என்னும் நூலிலும் விளக்கியுள்ளேன்.
எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாய், எங்குமிருப்பதாய் உள்ள வித்தை உணர்ந்த ஆழ்வார் - எங்குமுள்ள அவ்வித்தை எட்டு மூர்த்தமாக உலகுக்கு உரைத்தருளிய நம்மாழ்வார் - 'இறை வடிவம் இயற்கை' என்பதை பலபடப் பாடிப்பாடி, இயற்கையின் மாண்பை இனிது விளக்கினார். ஆழ்வார் இயற்கையில் தோய்ந்து, இறையில் திளைத்து, இறை இன்பம் கொழிக்க இயற்கைப்பாக்களைத் தமிழில் பொழிந்தார். அவர் பாக்களில் எங்கும் இயற்கை; எங்கும் இறை; எங்கும் இயற்கை இறை.
ஆழ்வார் அருளிய இயற்கைப் பாக்களை நோக்குவோம்; அவைகளில் பூக்கள் மலர்கின்றன! ஞாயிறு வெயில் வீசுகிறது; திங்கள் அமுதம் பொழிகிறது; சோலை மணங் கமழ்கிறது; மலைகள் நிற்கின்றன; மேகங்கள் தவழ்கின்றன; பறவைகள் பறக்கின்றன; ஆநிரைகள் மேய்கின்றன; ஆயர்கள் ஆடுகிறார்கள்; குழலோசை கேட்கிறது; உயிர்கள் உலவுகின்றன; உலகம் புலனாகிறது. இஃதென்ன அருமை! ஒருவர் பாக்களில் இவ்வளவு பொருள்!
சொற்புலவோர் இயற்கைக் கூறுகளை வருணிப்பது வழக்கம். அவர்கள் பாக்களில் சொற்களைக் காணலாம்; பொருள்களைக் காண்டல் அரிது. நம்மாழ்வார் பாக்களிலோ பொருள்கள் பொலிகின்றன. அப் பொருட்கண் அறிவு செறிந்து, அன்பு நிறைந்து, இன்பம் பிலிற்றுகிறது. இவ்வுண்மை என்னை? நம்மாழ்வாரை அடைவோம்
நம்மாழ்வார் - பூ, ஞாயிறு, திங்கள், மலை முதலிய அவ்வப் பொருள் வடிவாகப் புறக் கண்களால் மாத்திரங் கண்டு, அவைகளைப் பாக்களாகப் பாடினாரில்லை. அப்பொருட்களின் ஊடே கலந்துள்ள ஓர் அகண்டாகாரப் பேரறிவை ஆழ்வார் தமது அகக்கண்ணால் கண்டு, அதனைப் பாக்களாகப் பாடினார் என்பது தெரிய வருகிறது. அக்காட்சி முதிர்ச்சியால், தமது அகத்துள்ள அறிவும், புறத்துள்ள அறிவும், ஒன்றுபட்டு ஊற்றிய இன்பக் குழம்பே ஆழ்வார் பாக்கள் எனலாம். ஆழ்வார் கொண்ட பூவும், ஞாயிறும், திங்களும், பிறவும் ஆண்டவன் வடிவங்கள். அவர் பூ முதலியவற்றை இறைவனாகவே வழிபட்டுப் பாக்களை அருளினார். நம்மாழ்வார் இயற்கை வாயிலாகக் கடவுளைக் கண்டு, அக் கடவுள் தம்முள்ளத்துள்ள செம்பொருள் என்பதை உணர்ந்து, எல்லாம் கடவுள் மயம் என்னும் உண்மையை உலகுக்கு அறிவுறுத்திய பாக்கள் பல. அவற்றுள் சில வருமாறு:
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்டோறும் - பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
பெய்வளைக் கைகளைக் கூப்பிப்
பிரான்கிடக் குங்கட லென்னும்
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச்
சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
நையுங்கண் ணீர்மல்க நின்று
நாரண னென்னுமன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான்
செய்கின்ற தொன்றறியேனே
அறியும்செந் தீயைத் தழுவி
அச்சுத னென்னும் மெய்வேவாள்
எறியும்தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்தனென்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும்
வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான்
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே
ஒன்றிய திங்களைக் காட்டி
ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி
நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில்
நாரணன் வந்தானென் றாலும்
என்றின மையல்கள் செய்தார்
என்னுடைக் கோமளத் தையே.
கோமள ஆன்கன்றைப் புல்கிக்
கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய்
அவன்கிடக் கையீ தென்னும்
ஆமள வொன்று மறியேன்
அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால்செய்து செய்கின்ற கூத்தே.
திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில்
உலகளந் தானென்று துள்ளும்
கருவுடைத் தேவில்க ளெல்லாம்
கடல்வண்ணன் கோயிலே யென்னும்
வெருவிலும் வீழ்விலு மேவாக்
கண்ணன் கழல்கள் விரும்புமே.
விரும்பிப் பகைவரைக் காணில்
வியலிட முண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில்
கண்ணனென் றேறப் பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில்
பிரானுள னென்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின் றானே.
இத் திருப் பாடல்களில் இறைவன் உறைவதை யான் எடுத்துக்காட்ட வேண்டுவதில்லை. இவை என் மனத்துக்கு அமுதாகின்றன. ஆழ்வார் இயற்கையைக் கண்டு மகிழ்கிறார். அதன்கண் ஆண்டவனைக் காண்கிறார்; இன்புறுகிறார். அவர் நிலை என்னே! என்னே! இதுதான் ஆழ்வார் கண்ட தமிழ் நாடோ? என்னருமைத் தமிழ்நாடே ஆழ்வார்க்குக் கடவுளாகத் தோன்றிய பூ, ஞாயிறு, திங்கள், மலை முதலியன இப்பொழுது எவ்வாறு காணப்படுகின்றன? அவைகளைக் கடவுளாகக் காட்டுங் கல்வி இப்பொழுது போதிக்கப்படுகிறதோ? அந்நாளில் கடவுள் கல்வி கற்பிக்கப்பட்டது. 'கற்குங் கல்வியெல்லாங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரானென்றே' என்றும், 'உரைப்பெல்லாம் - நின்னன்றி மற்றிலேன் கண்டாய்' என்றும் நம்மாழ்வார் ஓதியிருத்தல் காண்க. மணிவண்ணன் கல்வி இப்பொழுது எங்கே? 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்னுங் கல்வியன்றோ இப்பொழுது போதிக்கப்படுகிறது? காலக் கொடுமையோ? எமது தீவினையோ? தெரியவில்லை. இந்நாளில் இயற்கையை இறைவனாகக் காண்போர் எத்துணைபேர்? தாய் தந்தையரைக் கடவுளாக வழிபடுவோர் எத்துணை பேர்? பூவைக் கண்டதும் எம்பிரான் திருமுகம், எம்பிரான் திருக்கரம், எமதையன் திருமேனி, எமதையன் திருவடி என்று போற்றுவோர் எத்துணைபேர்? கடலைக் கண்டதும் கடவுளைக் கருதுவோருளரோ? மலையைப் பார்த்ததும் மாயோன் என்று ஓடுவோருளரோ? கருமேகத்தை நோக்கினதும் கண்ணனென்று ஆர்ப்பரிப்பாருளரோ? ஞாயிற்றைக் காட்டி 'சீதரன்' என்று சொல்வோரைக் காணோம். திங்களைச் சுட்டி 'மணிவண்ணா' என்று மகிழ்வோரைக் காணோம். கோக்களைக் 'கோபாலா' என்று தழுவுவோரில்லை. குழலோசையைக் கேட்டுக் 'கோவிந்தா' என்று கூத்தாடுவோரில்லை. தமிழ் நாடே! நம்மாழ்வாருக்கு வழங்கிய காட்சியை இப்பொழுது வழங்காயோ? அந்தோ! தமிழ் நாட்டின் உருக்குலைந்துவிட்டதே! என் செய்வோம்!
நம்மாழ்வார் - பூ, மேகம், வண்டு, பறவை முதலியவற்றைப் பார்த்துப் பார்த்து, ஆண்டவனை நினைந்தும் அழைத்தும் வழுத்திய திரு வாக்குகள் உள்ளத்தைக் குழையச் செய்கின்றன.
மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.
என்றும்,
வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ
நிலப்பூ மரத்தி லொண்பூ
உண்டுக ளித்துழல் வீர்க்கொன்
றுரை க்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடி வைகுந்தமன்
னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள
வோநும் வியலிடத்தே.
என்றும்,
அஞ்சிறைய மடநாராய் ... ... ... ...
என்றும்,
விதியினால் பெடைமணக்கும்
மென்னடைய அன்னங்காள் ... ... ...
என்றும்,
பூவைபைங் கிளிகள்பந்து தூதைபூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்க ளேகூவி யெழும்...
என்றும்,
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கெத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேல் மின்குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ண பிரானை நீர்வரக் கூவுகிலீர் ... ...
என்றும், ஆழ்வார் இயற்கைப் பொருள்களை விளித்து ஆண்டவனை வழுத்தியிருத்தல் காண்க.
மண் புனல் முதலியனன் இயற்கையின் கூறுகள். அவற்றை மண் புனல் முதலியன என்று வகுத்துச் சொல்வதற்குப் பதிலாக இயற்கை என்று தொகுத்துங் கூறலாம்.
இயற்கை உடல்; இறை உயிர். இறையாகிய உயிர், இயற்கையாகிய உடல் வாயிலாக உயிர்கட்கெல்லாம் நலஞ் செய்கிறது. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள தொடர்பு, நமது உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது.
உடல் புலனாவது, உயிர் புலனாகாதது. புலனாகாதா உயிரின் உண்மையை எப்படி உணர்கிறோம்? புலனாகும் உடலைக்கொண்டே புலனாகாத உயிர் உண்மையை உணர்கிறோம். இவ்வாறே உடலாகிய இயற்கையைக் கொண்டு, உயிராகிய இறையின் உண்மையை உணர்தல் வேண்டும். இதனை ஆழ்வார்,
திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.
என்று நுண்மையாக விளங்கியிருத்தலை ஓர்க.
இயற்கையை விடுத்து, இறையை உணர்தல் அரிது. இயற்கை வழி இறையை உணரவேண்டி யிருத்தலால், இயற்கையை இறைவடிவாகவும் இறையாகவும் போற்றுதல் ஆன்றோர் வழக்கு. இத்தகைய இயற்கையை வெறுப்பதும் துறப்பதும் அறியாமையாகும். இறை இறை என்று வாயால் முழங்கிச் செயலில் இயற்கையை வெறுத்துத் துறப்பது ஆத்திகமாகாது.
இயற்கை கடந்த இறை நிலையும் உண்டு. அது காண்டற்கரியது; மனத்தாலும் உணர்தற்கரியது. மன உணர்வு கடந்த நிலையில் அது விளங்குகிறது.
இலனது வுடையனி தெனநினைவ் வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.
யாருமோர் நிலைமையனெனவறி வரியஎம்பெருமான்...
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது...
என்றார் ஆழ்வாரும்.
மனவுணர்வுடையோர், இயற்கையக் கடந்துள்ள இறைநிலையைப் பற்றி மல்லாட வேண்டுவதில்லை. அவர் இயற்கை வடிவாயுள்ள இறையைக் கருத்திருத்தி வழுத்தவே முயலல் வேண்டும். இவ் வழிபாடு, படிப்படியாக ஓங்கி, மனங்கடந்த தனி உணர்வு நிலையைக் கூட்டும். மனவுணர்வு கடந்து நின்ற ஆன்றோர் பலரும் இயற்கை இறையையே பெரிதும் போற்றினர். இயற்கை கடந்த தனி இறையை மிகச் சிறிது குறிப்பிடுவது அவர்தம் வழக்கம். உலகம், இயற்கையை விடுத்தால், அஃது இறை உண்மையை உணராது இடர்ப்படும் என்ற கருணை மேலீட்டான், ஆன்றோர் இயற்கை இறையையே பெரிதும் உலகுக்கு அறிவுறுத்தலாயினர்.
இயற்கையைப் போற்றுவதும், இயற்கை இறையைப் போற்றுவதும் ஒன்றே. சில அறிஞர் இறையை இயற்கை என்றே போற்றுவர்; சிலர் இயற்கை வடிவான இறை என்று போற்றுவர். அப்போற்றுதலும் இப்போற்றுதலும் சென்று சேருமிடம் ஒன்றே. ஆகவே, இயற்கையைப் போற்றுவோர் யாவரும் இறையைப் போற்றுவோரேயாவர். இதுபற்றிப் பொதுவாக எனது நூல் பலவற்றிலும், சிறப்பாகச் 'சன்மார்க்கப் போதமும் திறவும்' என்னும் நூலிலும் விளக்கியுள்ளேன்.
எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாய், எங்குமிருப்பதாய் உள்ள வித்தை உணர்ந்த ஆழ்வார் - எங்குமுள்ள அவ்வித்தை எட்டு மூர்த்தமாக உலகுக்கு உரைத்தருளிய நம்மாழ்வார் - 'இறை வடிவம் இயற்கை' என்பதை பலபடப் பாடிப்பாடி, இயற்கையின் மாண்பை இனிது விளக்கினார். ஆழ்வார் இயற்கையில் தோய்ந்து, இறையில் திளைத்து, இறை இன்பம் கொழிக்க இயற்கைப்பாக்களைத் தமிழில் பொழிந்தார். அவர் பாக்களில் எங்கும் இயற்கை; எங்கும் இறை; எங்கும் இயற்கை இறை.
ஆழ்வார் அருளிய இயற்கைப் பாக்களை நோக்குவோம்; அவைகளில் பூக்கள் மலர்கின்றன! ஞாயிறு வெயில் வீசுகிறது; திங்கள் அமுதம் பொழிகிறது; சோலை மணங் கமழ்கிறது; மலைகள் நிற்கின்றன; மேகங்கள் தவழ்கின்றன; பறவைகள் பறக்கின்றன; ஆநிரைகள் மேய்கின்றன; ஆயர்கள் ஆடுகிறார்கள்; குழலோசை கேட்கிறது; உயிர்கள் உலவுகின்றன; உலகம் புலனாகிறது. இஃதென்ன அருமை! ஒருவர் பாக்களில் இவ்வளவு பொருள்!
சொற்புலவோர் இயற்கைக் கூறுகளை வருணிப்பது வழக்கம். அவர்கள் பாக்களில் சொற்களைக் காணலாம்; பொருள்களைக் காண்டல் அரிது. நம்மாழ்வார் பாக்களிலோ பொருள்கள் பொலிகின்றன. அப் பொருட்கண் அறிவு செறிந்து, அன்பு நிறைந்து, இன்பம் பிலிற்றுகிறது. இவ்வுண்மை என்னை? நம்மாழ்வாரை அடைவோம்
நம்மாழ்வார் - பூ, ஞாயிறு, திங்கள், மலை முதலிய அவ்வப் பொருள் வடிவாகப் புறக் கண்களால் மாத்திரங் கண்டு, அவைகளைப் பாக்களாகப் பாடினாரில்லை. அப்பொருட்களின் ஊடே கலந்துள்ள ஓர் அகண்டாகாரப் பேரறிவை ஆழ்வார் தமது அகக்கண்ணால் கண்டு, அதனைப் பாக்களாகப் பாடினார் என்பது தெரிய வருகிறது. அக்காட்சி முதிர்ச்சியால், தமது அகத்துள்ள அறிவும், புறத்துள்ள அறிவும், ஒன்றுபட்டு ஊற்றிய இன்பக் குழம்பே ஆழ்வார் பாக்கள் எனலாம். ஆழ்வார் கொண்ட பூவும், ஞாயிறும், திங்களும், பிறவும் ஆண்டவன் வடிவங்கள். அவர் பூ முதலியவற்றை இறைவனாகவே வழிபட்டுப் பாக்களை அருளினார். நம்மாழ்வார் இயற்கை வாயிலாகக் கடவுளைக் கண்டு, அக் கடவுள் தம்முள்ளத்துள்ள செம்பொருள் என்பதை உணர்ந்து, எல்லாம் கடவுள் மயம் என்னும் உண்மையை உலகுக்கு அறிவுறுத்திய பாக்கள் பல. அவற்றுள் சில வருமாறு:
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்டோறும் - பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
பெய்வளைக் கைகளைக் கூப்பிப்
பிரான்கிடக் குங்கட லென்னும்
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச்
சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
நையுங்கண் ணீர்மல்க நின்று
நாரண னென்னுமன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான்
செய்கின்ற தொன்றறியேனே
அறியும்செந் தீயைத் தழுவி
அச்சுத னென்னும் மெய்வேவாள்
எறியும்தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்தனென்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும்
வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான்
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே
ஒன்றிய திங்களைக் காட்டி
ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி
நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில்
நாரணன் வந்தானென் றாலும்
என்றின மையல்கள் செய்தார்
என்னுடைக் கோமளத் தையே.
கோமள ஆன்கன்றைப் புல்கிக்
கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய்
அவன்கிடக் கையீ தென்னும்
ஆமள வொன்று மறியேன்
அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால்செய்து செய்கின்ற கூத்தே.
திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில்
உலகளந் தானென்று துள்ளும்
கருவுடைத் தேவில்க ளெல்லாம்
கடல்வண்ணன் கோயிலே யென்னும்
வெருவிலும் வீழ்விலு மேவாக்
கண்ணன் கழல்கள் விரும்புமே.
விரும்பிப் பகைவரைக் காணில்
வியலிட முண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில்
கண்ணனென் றேறப் பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில்
பிரானுள னென்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின் றானே.
இத் திருப் பாடல்களில் இறைவன் உறைவதை யான் எடுத்துக்காட்ட வேண்டுவதில்லை. இவை என் மனத்துக்கு அமுதாகின்றன. ஆழ்வார் இயற்கையைக் கண்டு மகிழ்கிறார். அதன்கண் ஆண்டவனைக் காண்கிறார்; இன்புறுகிறார். அவர் நிலை என்னே! என்னே! இதுதான் ஆழ்வார் கண்ட தமிழ் நாடோ? என்னருமைத் தமிழ்நாடே ஆழ்வார்க்குக் கடவுளாகத் தோன்றிய பூ, ஞாயிறு, திங்கள், மலை முதலியன இப்பொழுது எவ்வாறு காணப்படுகின்றன? அவைகளைக் கடவுளாகக் காட்டுங் கல்வி இப்பொழுது போதிக்கப்படுகிறதோ? அந்நாளில் கடவுள் கல்வி கற்பிக்கப்பட்டது. 'கற்குங் கல்வியெல்லாங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரானென்றே' என்றும், 'உரைப்பெல்லாம் - நின்னன்றி மற்றிலேன் கண்டாய்' என்றும் நம்மாழ்வார் ஓதியிருத்தல் காண்க. மணிவண்ணன் கல்வி இப்பொழுது எங்கே? 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்னுங் கல்வியன்றோ இப்பொழுது போதிக்கப்படுகிறது? காலக் கொடுமையோ? எமது தீவினையோ? தெரியவில்லை. இந்நாளில் இயற்கையை இறைவனாகக் காண்போர் எத்துணைபேர்? தாய் தந்தையரைக் கடவுளாக வழிபடுவோர் எத்துணை பேர்? பூவைக் கண்டதும் எம்பிரான் திருமுகம், எம்பிரான் திருக்கரம், எமதையன் திருமேனி, எமதையன் திருவடி என்று போற்றுவோர் எத்துணைபேர்? கடலைக் கண்டதும் கடவுளைக் கருதுவோருளரோ? மலையைப் பார்த்ததும் மாயோன் என்று ஓடுவோருளரோ? கருமேகத்தை நோக்கினதும் கண்ணனென்று ஆர்ப்பரிப்பாருளரோ? ஞாயிற்றைக் காட்டி 'சீதரன்' என்று சொல்வோரைக் காணோம். திங்களைச் சுட்டி 'மணிவண்ணா' என்று மகிழ்வோரைக் காணோம். கோக்களைக் 'கோபாலா' என்று தழுவுவோரில்லை. குழலோசையைக் கேட்டுக் 'கோவிந்தா' என்று கூத்தாடுவோரில்லை. தமிழ் நாடே! நம்மாழ்வாருக்கு வழங்கிய காட்சியை இப்பொழுது வழங்காயோ? அந்தோ! தமிழ் நாட்டின் உருக்குலைந்துவிட்டதே! என் செய்வோம்!
நம்மாழ்வார் - பூ, மேகம், வண்டு, பறவை முதலியவற்றைப் பார்த்துப் பார்த்து, ஆண்டவனை நினைந்தும் அழைத்தும் வழுத்திய திரு வாக்குகள் உள்ளத்தைக் குழையச் செய்கின்றன.
மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.
என்றும்,
வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ
நிலப்பூ மரத்தி லொண்பூ
உண்டுக ளித்துழல் வீர்க்கொன்
றுரை க்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடி வைகுந்தமன்
னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள
வோநும் வியலிடத்தே.
என்றும்,
அஞ்சிறைய மடநாராய் ... ... ... ...
என்றும்,
விதியினால் பெடைமணக்கும்
மென்னடைய அன்னங்காள் ... ... ...
என்றும்,
பூவைபைங் கிளிகள்பந்து தூதைபூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்க ளேகூவி யெழும்...
என்றும்,
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கெத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேல் மின்குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ண பிரானை நீர்வரக் கூவுகிலீர் ... ...
என்றும், ஆழ்வார் இயற்கைப் பொருள்களை விளித்து ஆண்டவனை வழுத்தியிருத்தல் காண்க.
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Saturday, October 3, 2009
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 4. அட்டமூர்த்தம்
4. அட்டமூர்த்தம்
'எங்கும் கடவுள் என்பது உண்மை. இது புறம் அகம் என்னும் வேர்றுமை நோக்கு முற்றும் அற்றவர்க்கு நன்கு விளங்கும்; மற்றவர்க்கு விளங்காது. வேற்றுமை அற்ற நோக்கை எப்படி பெறுவது? அதற்குரிய வழி என்னை?
வேற்றுமை அற்ற நோக்கைப் பெறுதற்குப் பலப்பல வழிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளுள் எளியது ஒன்று. அது வழிபாடு. வழிபாட்டுக்கு ஏதாவது குறி வேண்டும். 'எங்கும் கடவுள்' என்பது எக்குறியை வழங்கும்? அஃது எதையும் எளிதில் வழங்குதல் அரிது.
எங்கும் கடவுளிருத்தலைக் கண்டு, அதை உலகுக்கு உணர்த்திய ஆழ்வார் அவ்வளவில் நின்றாரில்லை. அவர், தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெறுதல் வேண்டும் என்ற கருணையுடையவர். மக்களின் பலபட்ட நிலைக்கு ஏற்றவாறு 'எங்கும் கடவுள்' என்னும் உண்மையை, அவர் பலப்பல விதமாக வடித்து முறைமுறையே கிளந்து கூறியுள்ளார். அக் கூற்றுக்களைத் திரட்டிப் பார்த்தால், வழிபாட்டுக்குரிய துறைகள் இனிது புலனாகும்.
எங்குங் கடவுள் என்னில், எதுவும் எளிதில் நெஞ்சில் படிவதில்லை. 'எங்கும் கடவுள்' என்பதற்குப் பதிலாகக் 'கடவுள், மண் - புனல் - தீ - காற்று - வெளி - திங்கள் - ஞாயிறு - உயிர் என்னும் எட்டாக விளங்குகிறது' என்னில், இது நெஞ்சில் படியுந்தகையதாகிறது. இரண்டுக்கும் கருத்தில் வேற்றுமையில்லை. ஆனால் முன்னையதைப் பார்க்கிலும், பின்னையது உள்ளத்திற்கு எளிதில் பொருளாதல் கருதற்பாலது.
இறையை அட்டமூர்த்தமாகச் சொல்வது இந் நாட்டு மரபு. அட்ட மூர்த்தத்தில் அடங்காததொன்றில்லை. எல்லாம் அட்ட மூர்த்தத்தில் அடங்குதலான், எங்குமுள்ள இறையை 'அட்ட மூர்த்தி' என்று முன்னோர் கூறிப் போந்தனர். அவர் கண்ட உண்மையை ஆழ்வாருங் கண்டு, அதை உலகுக்கு உணர்த்தினார். ஆண்டவன் அட்டமூர்த்தமாக விளங்குவதை ஆழ்வார் ஆங்காங்கே மிக அழகுபடப் பாடியுள்ளார். அவைகளிற் சில வருமாறு:
நாழாலமர் ... ...
பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
நீரும்நீ யாய்நின்ற நீ.
கண்ணுள்ளே... ...
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.
தளர்வின்றி...
வளரொளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள் ஐந்தை இருசுடரை...
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்...
என்றுகொல் சேர்வது... ...
... ... நிலநீர் எரிகால் விணு உயிர்
என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ...
பிறந்த மாயா ... ...
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே...
ஏகமூர்த்தி இருமூர்த்தி ... ...
... ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்...
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.
புகழுநல் லொருவனென்கோ
பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழும்தண் பரவை யென்கோ
தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ
நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ
கண்ணனைக் கூவு மாறே.
'மண், புனல், தீ, கால் முதலிய யாவும் கடவுள்' என்று ஆழ்வார் அருளிய மொழிகளைக் கொண்டு, சிலர், மண் முதலியனவே கடவுள் என்றும், அவைகட்கு வேறாகக் கடவுள் என்பதொன்று இல்லை என்றும் கொள்ள முந்தலாம். ஆழ்வார் மண் முதலியவற்றைக் கடவுளாக கூறியது, அவ்வப் பொருளை யன்று; அவ்வப் பொருளில் நீக்கமற நிறைந்து, அது அதுவாய், அது அது இயங்கத் துணை புரிவதாயுள்ள கட்டற்ற - சுட்டற்ற - அறிவை என்க. உலகத்தார், மண் முதலியவற்றையே பொருளாகக் கொண்டு, அவைகளில் அத்துவிதமாகக் கலந்துள்ள அறிவை ஆய்ந்து தேறாது இடர்ப்படுவர் என்னுங் கருணை மேலீட்டான், ஆழ்வார் எப்பொருளும் ஆண்டவன் அல்லன் என்றுஞ் சிலவிடங்களில் அறிவுறுத்தினார்.
மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்...
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே.
இத் திருப் பாடல்களை உற்று நோக்குக. மண் முதலியவற்றை, மாறுதலற்ற பொருளாகக் கொள்ளாது, அவைகளுள் கலந்துள்ள அறிவையே அப்பொருளாகக் கொள்ளுதல் வேண்டும் என்று தெளிக. அறிவைப் பொருளாகக் கொள்வோர்க்கு வேறொன்றுந் தோன்றுவதில்லை என்னும் வேதாந்த உண்மையும் ஈண்டு உன்னற்பாலது.
இறை, மண் முதலியனவாக இருக்கிறதென்றும், அவையல்லாததாயும் இருக்கிறதென்றும் சொல்லப்படுகின்றன. இவ்விரு விதமும் ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்தனவே. இவைகளைக் கொண்டு ஆழ்வார் மாறுகோளுடையார் என்று சிலர் ஐயுறலாம். ஆழ்வார் எவ்வித மாறுகோளும் உடையவரல்லர். இருவிதக் கூற்றையும் ஆராய்ந்து பார்த்தால், ஆழ்வாரது உள்ளக்கிடக்கை புலனாகும்.
பரம்பொருள் மண் முதலியனவாக விளங்குவது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் நீக்கமறக் கலந்து நிற்றலை உணர்த்துவது. பரம்பொருள் மண் முதலியன அல்லாதது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் நிற்றலை உணர்த்துவது. ஆகாயம், மண் முதலியவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் இருத்தல் போலப் பரம்பொருளும், உலகெலாமாகியும் வேறாகியும் விளங்குகிறதென்க.
நிழல்வெய்யில் சிறுமை பெருமை
குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய்
அவையல் லனுமாய்...
விண்மீ திருப்பாய் மலைமேல்
நிற்பாய் கடல்சேர்ப்பாய்
மண்மீ துழல்வாய் இவற்றுள்
எங்கும் மறைந்துறைவாய்...
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்...
பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே
என்று ஆழ்வார் அருளியிருத்தலை நோக்குக.
பரம்பொருள் மண் முதலியனவாகியும் அல்லவாகியும் விளங்குவது என்றெழுந்த ஆன்றோர் மூலமொழிகளினின்றும் துவைதம், கேவலாத்துவிதம், விசிஷ்டாத்துவிதம், சுத்தாத்துவிதம் முதலியன பிறந்தன. உலகம் பலவிதமாதலின், இவை யாவும் உலகிற்கு வேண்டற்பாலன. இவைகட் கெல்லாம் பொருளாயிருப்பது ஒன்றே. மெய்யுணர்வு விளங்குவரை, ஐயம் திரிபு மயக்கம் மாறி மாறித் தோன்றிப் பலவித உணர்வை எழுப்பிக் கொண்டிருத்தல் இயல்பு.
நம்மாழ்வார் திருவாக்கு ஒன்றே. துவைதிக்கு ஒரு விதமாகவும், கேவலாத்துவிதிக்கு வேறொரு விதமாகவும், விசிஷ்டாத்துவிதிக்கு இன்னொரு விதமாகவும், சுத்தாத்துவிதிக்கு மற்றொரு விதமாகவும் விளங்குகிறது. ஒரே பூ ஓவியனுக்கு ஒருவிதமாகவும், தத்துவனுக்கு வேறுவிதமாகவும், தாவரனுக்கு இன்னொரு விதமாகவும், மற்ற மற்றவர்க்கு மற்ற மற்ற விதமாகவும் விளங்குவது இயல்பன்றோ? இதில் வியப்பொன்றுமில்லை. ஆழ்வார் திருவாய்மொழி எல்லார்க்கும் பயன்படு ம்றையில் எழுந்ததென்க. அத்தகைய சமரச ஞானியைத் தந்த பெருமை நந்தமிழ் நாட்டுக்கே உண்டு.
போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.
***
திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...
'எங்கும் கடவுள் என்பது உண்மை. இது புறம் அகம் என்னும் வேர்றுமை நோக்கு முற்றும் அற்றவர்க்கு நன்கு விளங்கும்; மற்றவர்க்கு விளங்காது. வேற்றுமை அற்ற நோக்கை எப்படி பெறுவது? அதற்குரிய வழி என்னை?
வேற்றுமை அற்ற நோக்கைப் பெறுதற்குப் பலப்பல வழிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளுள் எளியது ஒன்று. அது வழிபாடு. வழிபாட்டுக்கு ஏதாவது குறி வேண்டும். 'எங்கும் கடவுள்' என்பது எக்குறியை வழங்கும்? அஃது எதையும் எளிதில் வழங்குதல் அரிது.
எங்கும் கடவுளிருத்தலைக் கண்டு, அதை உலகுக்கு உணர்த்திய ஆழ்வார் அவ்வளவில் நின்றாரில்லை. அவர், தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெறுதல் வேண்டும் என்ற கருணையுடையவர். மக்களின் பலபட்ட நிலைக்கு ஏற்றவாறு 'எங்கும் கடவுள்' என்னும் உண்மையை, அவர் பலப்பல விதமாக வடித்து முறைமுறையே கிளந்து கூறியுள்ளார். அக் கூற்றுக்களைத் திரட்டிப் பார்த்தால், வழிபாட்டுக்குரிய துறைகள் இனிது புலனாகும்.
எங்குங் கடவுள் என்னில், எதுவும் எளிதில் நெஞ்சில் படிவதில்லை. 'எங்கும் கடவுள்' என்பதற்குப் பதிலாகக் 'கடவுள், மண் - புனல் - தீ - காற்று - வெளி - திங்கள் - ஞாயிறு - உயிர் என்னும் எட்டாக விளங்குகிறது' என்னில், இது நெஞ்சில் படியுந்தகையதாகிறது. இரண்டுக்கும் கருத்தில் வேற்றுமையில்லை. ஆனால் முன்னையதைப் பார்க்கிலும், பின்னையது உள்ளத்திற்கு எளிதில் பொருளாதல் கருதற்பாலது.
இறையை அட்டமூர்த்தமாகச் சொல்வது இந் நாட்டு மரபு. அட்ட மூர்த்தத்தில் அடங்காததொன்றில்லை. எல்லாம் அட்ட மூர்த்தத்தில் அடங்குதலான், எங்குமுள்ள இறையை 'அட்ட மூர்த்தி' என்று முன்னோர் கூறிப் போந்தனர். அவர் கண்ட உண்மையை ஆழ்வாருங் கண்டு, அதை உலகுக்கு உணர்த்தினார். ஆண்டவன் அட்டமூர்த்தமாக விளங்குவதை ஆழ்வார் ஆங்காங்கே மிக அழகுபடப் பாடியுள்ளார். அவைகளிற் சில வருமாறு:
நாழாலமர் ... ...
பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
நீரும்நீ யாய்நின்ற நீ.
கண்ணுள்ளே... ...
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.
தளர்வின்றி...
வளரொளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள் ஐந்தை இருசுடரை...
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்...
என்றுகொல் சேர்வது... ...
... ... நிலநீர் எரிகால் விணு உயிர்
என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ...
பிறந்த மாயா ... ...
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே...
ஏகமூர்த்தி இருமூர்த்தி ... ...
... ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்...
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.
புகழுநல் லொருவனென்கோ
பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழும்தண் பரவை யென்கோ
தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ
நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ
கண்ணனைக் கூவு மாறே.
'மண், புனல், தீ, கால் முதலிய யாவும் கடவுள்' என்று ஆழ்வார் அருளிய மொழிகளைக் கொண்டு, சிலர், மண் முதலியனவே கடவுள் என்றும், அவைகட்கு வேறாகக் கடவுள் என்பதொன்று இல்லை என்றும் கொள்ள முந்தலாம். ஆழ்வார் மண் முதலியவற்றைக் கடவுளாக கூறியது, அவ்வப் பொருளை யன்று; அவ்வப் பொருளில் நீக்கமற நிறைந்து, அது அதுவாய், அது அது இயங்கத் துணை புரிவதாயுள்ள கட்டற்ற - சுட்டற்ற - அறிவை என்க. உலகத்தார், மண் முதலியவற்றையே பொருளாகக் கொண்டு, அவைகளில் அத்துவிதமாகக் கலந்துள்ள அறிவை ஆய்ந்து தேறாது இடர்ப்படுவர் என்னுங் கருணை மேலீட்டான், ஆழ்வார் எப்பொருளும் ஆண்டவன் அல்லன் என்றுஞ் சிலவிடங்களில் அறிவுறுத்தினார்.
மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்...
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே.
இத் திருப் பாடல்களை உற்று நோக்குக. மண் முதலியவற்றை, மாறுதலற்ற பொருளாகக் கொள்ளாது, அவைகளுள் கலந்துள்ள அறிவையே அப்பொருளாகக் கொள்ளுதல் வேண்டும் என்று தெளிக. அறிவைப் பொருளாகக் கொள்வோர்க்கு வேறொன்றுந் தோன்றுவதில்லை என்னும் வேதாந்த உண்மையும் ஈண்டு உன்னற்பாலது.
இறை, மண் முதலியனவாக இருக்கிறதென்றும், அவையல்லாததாயும் இருக்கிறதென்றும் சொல்லப்படுகின்றன. இவ்விரு விதமும் ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்தனவே. இவைகளைக் கொண்டு ஆழ்வார் மாறுகோளுடையார் என்று சிலர் ஐயுறலாம். ஆழ்வார் எவ்வித மாறுகோளும் உடையவரல்லர். இருவிதக் கூற்றையும் ஆராய்ந்து பார்த்தால், ஆழ்வாரது உள்ளக்கிடக்கை புலனாகும்.
பரம்பொருள் மண் முதலியனவாக விளங்குவது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் நீக்கமறக் கலந்து நிற்றலை உணர்த்துவது. பரம்பொருள் மண் முதலியன அல்லாதது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் நிற்றலை உணர்த்துவது. ஆகாயம், மண் முதலியவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் இருத்தல் போலப் பரம்பொருளும், உலகெலாமாகியும் வேறாகியும் விளங்குகிறதென்க.
நிழல்வெய்யில் சிறுமை பெருமை
குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய்
அவையல் லனுமாய்...
விண்மீ திருப்பாய் மலைமேல்
நிற்பாய் கடல்சேர்ப்பாய்
மண்மீ துழல்வாய் இவற்றுள்
எங்கும் மறைந்துறைவாய்...
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்...
பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே
என்று ஆழ்வார் அருளியிருத்தலை நோக்குக.
பரம்பொருள் மண் முதலியனவாகியும் அல்லவாகியும் விளங்குவது என்றெழுந்த ஆன்றோர் மூலமொழிகளினின்றும் துவைதம், கேவலாத்துவிதம், விசிஷ்டாத்துவிதம், சுத்தாத்துவிதம் முதலியன பிறந்தன. உலகம் பலவிதமாதலின், இவை யாவும் உலகிற்கு வேண்டற்பாலன. இவைகட் கெல்லாம் பொருளாயிருப்பது ஒன்றே. மெய்யுணர்வு விளங்குவரை, ஐயம் திரிபு மயக்கம் மாறி மாறித் தோன்றிப் பலவித உணர்வை எழுப்பிக் கொண்டிருத்தல் இயல்பு.
நம்மாழ்வார் திருவாக்கு ஒன்றே. துவைதிக்கு ஒரு விதமாகவும், கேவலாத்துவிதிக்கு வேறொரு விதமாகவும், விசிஷ்டாத்துவிதிக்கு இன்னொரு விதமாகவும், சுத்தாத்துவிதிக்கு மற்றொரு விதமாகவும் விளங்குகிறது. ஒரே பூ ஓவியனுக்கு ஒருவிதமாகவும், தத்துவனுக்கு வேறுவிதமாகவும், தாவரனுக்கு இன்னொரு விதமாகவும், மற்ற மற்றவர்க்கு மற்ற மற்ற விதமாகவும் விளங்குவது இயல்பன்றோ? இதில் வியப்பொன்றுமில்லை. ஆழ்வார் திருவாய்மொழி எல்லார்க்கும் பயன்படு ம்றையில் எழுந்ததென்க. அத்தகைய சமரச ஞானியைத் தந்த பெருமை நந்தமிழ் நாட்டுக்கே உண்டு.
போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.
***
திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Friday, September 25, 2009
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 3. எங்கும்
3. எங்கும்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து உண்டு. அவ்வவ் வித்து அததற்கு உரியதாய்த் துணை நின்று, அதனை அதனை ஓம்பி வருகின்றது. அவ் வித்து ஒவ்வொன்றும் தொடர்பில்லாமல் இருக்கிறது. கடவுள் என்னும் வித்தோ அத்தகையதன்று. அஃது எல்லா வித்துக்களுக்கும் வித்தாயிருப்பது. எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எங்கே இருக்கும்? அதற்கெனத் தனித்த ஓரிடம் உண்டோ?
எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எல்லாவற்றிலும் இருத்தல் வேண்டும். அஃது இல்லாத இடம் எங்கே இருக்கும்? என்னை? எல்லாம் அதனால் இயங்க வேண்டுமாதலால், அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்கும் இயல்பினதாய் இருத்தல் நியதி. ஆகவே, அதற்கு உரிய இடம் இங்கு அங்கு என்று குறிப்பிடுதற்கு இல்லை. அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிற்பதும், எங்கெங்கே பார்த்தாலும் அங்கங்கே நிற்பதும் அதன் இயல் என்க.
நம்மாழ்வார் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்ந்தார்; அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்றலைத் தெளிந்தார்; அத் தெளிவை உலகுக்கு அறிவுறுத்தினார்.
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞானவெள் ளச்சுடர் மூர்த்தி...
அமைவுடை அறநெறி ... ... ... ...
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.
என்னுள் கலந்தவன் ... ... ... ...
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே.
எப்பொருளுந் தானாய்...
வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண்டிசையும் தவிராது
நின்றான் தன்னை...
எங்குவந் துறுகோ என்னையாள் வானே
ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேனும்
அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலன் இறந்ததும் நீயே.
பூவைகள் போல்.................
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் ..........
துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
யாய் உல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல்
வான் சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களு மாகிப் பலபல
மாய மயக்குக்களால்
இன்புறும் இவ்விளையாட்டையானைப்
பெற்றேதும் அல்லலிலனே.
யானுநீ தானே யாவதோ மெய்யே
அருநர கவையும் நீ ஆனால்
வானுயர் இன்பம் எய்திலென் மற்றை
நரகமே எய்திலென் எனிலும்
யானுநீ தானாய்த் தெளிதொறும்
நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்
அருளுநின் தாள்களை எனக்கே
என வரூஉம் ஆழ்வார் மொழிகளை உற்று நோக்குக.
சுவர்க்க நரகத்திலும் பரம்பொருள் இருக்கிறது என்று ஆழ்வார் விளக்கியுள்ளார், இவ்வாறு இறையின் சர்வ வியாபகத்தை வேறு எவரே விளக்கினர்! எங்கு முள்ள பரம்பொருளைத் தெளிந்தவர்க்குத் தனிப்பட்ட சுவர்க்கம் ஏது? தனிப்பட்ட நரகம் ஏது? அவர்க்கு எல்லாம் ஆண்டவன் இடம்; எல்லாம் இன்ப உலகம்.
'பரம்பொருள் எங்கும் உள்ளது' என்னும் உண்மையை ஆன்றோர் பல துறைகளிலும் உலகுக்கு விளக்கிப் போந்தனர். அந் நுட்பம் பலப்பல கதைகள் வாயிலாகவும் விளக்கப்பட்டது. அக் கதைகளுள் சிறந்த ஒன்று பிரகலாதனைப் பற்றியது. பிரகலாதன் கதையால் விளங்குவது என்னை? பரம்பொருள் எங்கும் உள்ளது என்பது அக் கதையால் விளங்குவது. இதனை ஆழ்வார் பலவிடங்களில் விளம்புகிறார். ஈண்டைக்கு ஒரு திருப்பாட்டுச் சாலும்.
எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.
'பரம்பொருள் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பின் இருக்க. அதனால் உலகுக்கு என்ன பயன்? அதனை ஏன் வலியுறுத்தவேண்டும்' என்று சிலர் கருதலாம். இது சிந்திக்கத்தக்கதே. சிந்திக்கச் சிந்திக்கப் பல நுட்பங்கள் விளங்கும். அவைகளில் ஒன்றை மட்டும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடுவது நலம்.
வாழ்வு இருவிதம். ஒன்று நல்வாழ்வு; மற்றொன்று அஃது அல்லாதது. நல்வாழ்வு எது? மற்றைய வாழ்வு எது? அமைதியுற்ற வாழ்வு நல்வாழ்வு என்றும் அமைதியற்ற வாழ்வு நல்வாழ்வு அல்லாதது என்றும் சுருங்கச் சொல்லலாம். வாழ்வில் பல நலங்கள் பொருந்தியிருப்பினும், அதன்மாட்டு அமைதி ஒன்றில்லையேல், அது நல்வாழ்வாகாது. நல்வாழ்வுக்கு அறிகுறி அமைதியேயாகும்.
அமைதி வாழ்வுக்கு சகோதர நேயம் இன்றியமையாதது. சகோதர நேயம் எப்படி உண்டாகும்? சகோதர நேயம் என்னும் பெயரால் உலகில் எத்துணையோ அமைப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றால் சகோதர நேயம் வளர்கிறதா? அமைதி வாழ்வு நிலைக்கிறதா? இல்லையே.
தற்கால உலகை நோக்கினால் உண்மை விளங்கும். தற்கால உலகை நோக்குவோம். அஃது எக்காட்சி வழங்குகிறது? பொய், பொறாமை, கொலை, கொள்ளை, போர் முதலியவற்றையல்லவோ அது வழங்குகிறது? இதற்குக் காரணம் என்னை? அமைதிக்குரிய சகோதர நேயம் பெருகிப் பரவாமையேயாகும்.
அமைதிக்கெனச் சட்டங்கள் செய்யப்படுகின்றன; ஆயுதங்கள் தாங்கப்படுகின்றன; வேறுபல கட்டுகளும் வகுக்கப்படுகின்றன. இவற்றால் அமைதி நிலவுகிறதா? அச்சத்தால் ஒருபோதும் உண்மை அமைதி நிலவாது. சகோதர நேயம் ஒன்றே உண்மை அமைதியை நிலைபெறுத்தவல்லது.
சகோதர நேயம் என்பது தன்னுயிரைப் போல மன்னுயிரைக் கருதும் அன்பேயாகும். அன்பை - நாடு, மொழி, நிறம், இனம், மதம், இன்னபிற கூட்டுதல் அரிது. ஏன்? நாடு, மொழி முதலியன எல்லைக்கு உட்பட்டன. எல்லைக்குட்பட்ட கண்டப்பொருள் கட்டற்ற பரந்த அன்பை எங்ஙனங் கூட்டும்? அவைகளால் ஒவ்வோர் அளவில் கட்டுப்பட்ட அன்பு கூடலாம், கட்டுப்பட்ட அன்பால் அமைதி நிலை பெறாது. ஒருவேளை அதனால் கலாம் விளையினும் விளையும்.
பரந்த அன்புக்கு, எல்லையற்ற - கட்டற்ற - ஒன்றன் தொடர்பு தேவை. எல்லையற்ற - கட்டற்ற - ஒன்று எங்குமுள்ள இறையன்றிப் பிறிதில்லை. இறையுடன் தொடர்பு கொள்ளக் கொள்ள, அத் தொடர்பு, தன்னுயிரிலும் மற்ற உயிர்களிலும் உள்ளது ஒன்றே என்னும் உணர்வே நல்கும். எல்லையற்று - கட்டற்று - எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அகண்டத்தில் அன்பு கொண்டவரிடம், தம்முயிரைப்போல் மற்ற உயிர்களைக் கருதும் சகோதர நேயம் தானே பிறக்கும்.
பராபரம் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து நிற்றலால், அதற்கும் உயிர்களெல்லாம் உறுப்புக்களாகின்றன; ஓருறுப்புக்குத் துன்பம் நேரின், அத் துன்பம் மற்ற உறுப்புக்கட்கும் நேர்தல் இயல்பு. தன் உறுப்புக்களில் எதற்காவது கேடு சூழ அறிவுடைய எவனாதல் நினைப்பனோ? எவனும் நினையான். எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்கொண்ட ஒருவன் பிறருக்குத் தீங்கு செய்தல் தனக்கே தீங்கு செய்தல் ஆதலை நன்கு உணர்வன். ஆகவே, எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்பு கொள்வதால், சகோதர நேயம் பிறக்கும் என்பது தெளியற்பாலது. அதனால் உண்மை அமைதி நிலவும்.
'சகோதர நேயத்தால் உலகில் அமைதி நிலைபெறுதல் வேண்டும்' என்னும் பெருங்கருணையால், ஆன்றோர், பராபரம் எங்குமுள்ள உண்மையைப் பலபடியாக உலகுக்கு உணர்த்தினர். இப் பேருணர்வு பெருகுதற்குரிய அரசியல், கல்வி, தொழில் முதலியன உலகுக்குத் தேவை.
ஆழ்வார் எங்குமுள்ள பரம்பொருளை உணர்ந்து, அதனுடன் ஒன்றித் தாம் அற்று, அதுவாய் நின்றார். அவர் தம்மையும் பிறவற்றையும் அதுவாக் கண்டார். இந்நிலை பெற்ற ஒருவர் எவ்வுயிரைத் தமக்கு வேறாகக் கருதுவர்? அங்ஙனங் கருதற்கு இடம் ஏது? இப் பெருநிலை பெறுவோரே சகோதர நேயம் என்னும் ஜீவகாருண்யச் செல்வராவர்.
யானே என்னை ... ... ...
யானே நீஎன் னுடைமையும் நீயே...
என்னை முற்றும் உயிருண்டு என்மாய
ஆக்கை இதனுள் புகுந்து
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான் ... ...
இன்றென்னைப் பொருளாக்கித்
தன்னைஎன் னுள்வைத்தான்... ...
மாயம் செய்யேல் ... ...
நேசம்செய்து உன்னோடு என்னை
உயிர்வே றின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் ... ...
ஊனில் வாழ் உயிரே... ...
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்... ...
எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.
பற்ப நாபன்... ... ...
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம்...
உணர்வி லும்பர் ... ... ... யானும் தானா யொழிந்தேனே.
என்னுடைக் கோவலனே...
உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு...
என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை...
தாள்களை எனக்கே...
தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ... ...
ஆறெனக்கு... ... ... எனதாவியும் உனதே...
ஏகமூர்த்தி... ... ... உன்
ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.
மாயனென்... ... ...
காயமும் சீவனுந் தானே...
'எல்லாங் கடவுள்' என்று ஆழ்வார் மனமார வாயாரப் பாடியுள்ளார். அந் நிலையைப் பலப்பல விதமாக அவர் பாடிப்பாடி மகிழ்கிறார். அவ்வாறு பாடுவதில் அவர்க்குச் சலிப்புத் தோன்றுவதில்லை. ஓரிடத்தில் அவர் - உண்ணும் பொருள் - தின்னும் பொருள் - முதலியனவும் கடவுள் என்று அருளியுள்ளார்.
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்
றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே
கண்கள்நீர் மல்கி
என்று ஆழ்வார் கடவுள் உறவு காட்டுதல் காண்க. உண்ணுஞ்சோறும் பருகும் நீரும் கடவுளாம்! மயிர் சிலிர்க்கிறது. எம் பெருமக்கள் நிலை என்னே! என்னே! அந்நிலையை எண்ணி எண்ணி அழுகிறேன். 'உண்ணும்' 'பருகும்' என்னுஞ் சொற்கள் என் ஊனை - என் உயிரை - நெகிழச் செய்கின்றன. ஆழ்வார் கடவுளாகக் கொள்ளாத பொருளும் உண்டோ? அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள்.
எல்லாங் கடவுள் மயமாக உள்ள உண்மைக் காட்சி எப்பொழுது புலனாகும்? இதற்குரிய வழிகள் பல உண்டு. அவைகளுள் ஈண்டு குறிக்கத் தக்கது ஒன்று. அது, புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு ஒழிதல் வேண்டும் என்பது. புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு உள்ள மட்டும் யாண்டுங்கடவுள் உண்மையைக் காண்டல் அரிது. கடவுள் உண்மையை யாண்டுங் காணாத வரை, உயிர்கள் ஐம்புல வேடருகு இரையாகிச் சகோதர நேயத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அகக்கண் திறக்கப்பெறின், ஐம்புலன்கள் நல்வழியில் நின்று, சகோதர நேய ஊற்றைத் திறக்கும். அகவிளக்கத்தால் 'அகமே புறம்' என்னும் உண்மை விளங்கும்.
புறம் அகம் என்னும் வேற்றுமை உணர்வு கெடப் பெற்ற மெய்யறிஞர்க்கு எல்லாம் கடவுள் மயமாகப் புலப்படுதல் இயல்பு. அவ்வறிஞர்க்கு இன்பமுமிலை - துன்பமுமில்லை. சுவர்க்கமுமில்லை - நரகமுமில்லை; செல்வமுமில்லை - வறுமையுமில்லை. அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள். இந் நிலையை ஆழ்வார் பெற்றமையால், அவர் எவ்வுயிரிலும் இறையைக் காணும் ஜீவகாருண்யச் செல்வரானார்.
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும் - என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.
மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்
யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை
நாடோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்
அல்ல புறத்தினுள்ளும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய்
நின்னை அறிந்தறிந்தே.
கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
... ... ...
இத்திருமொழிகளின் நுட்பத்தை உன்னுக.
அமைதி வாழ்வுக்குரிய சகோதர நேயத்துக்குத் தமிழ் நாட்டில் நம்மாழ்வார் எவ் விதை விதைத்தார்? 'பரம்பொருள் எங்கும் உள்ளது' என்னும் விதையை ஆழ்வார் விதைத்தார். அவ் விதையினின்றும் எழுந்து வளர்ந்து ஓங்கி அன்பு மரம் நிற்கிறது. அதன் தண்ணிழலில் அமர்ந்து இன்பத்தை நுகர வேண்டுவது மக்கள் கடமை.
***
திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து உண்டு. அவ்வவ் வித்து அததற்கு உரியதாய்த் துணை நின்று, அதனை அதனை ஓம்பி வருகின்றது. அவ் வித்து ஒவ்வொன்றும் தொடர்பில்லாமல் இருக்கிறது. கடவுள் என்னும் வித்தோ அத்தகையதன்று. அஃது எல்லா வித்துக்களுக்கும் வித்தாயிருப்பது. எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எங்கே இருக்கும்? அதற்கெனத் தனித்த ஓரிடம் உண்டோ?
எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எல்லாவற்றிலும் இருத்தல் வேண்டும். அஃது இல்லாத இடம் எங்கே இருக்கும்? என்னை? எல்லாம் அதனால் இயங்க வேண்டுமாதலால், அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்கும் இயல்பினதாய் இருத்தல் நியதி. ஆகவே, அதற்கு உரிய இடம் இங்கு அங்கு என்று குறிப்பிடுதற்கு இல்லை. அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிற்பதும், எங்கெங்கே பார்த்தாலும் அங்கங்கே நிற்பதும் அதன் இயல் என்க.
நம்மாழ்வார் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்ந்தார்; அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்றலைத் தெளிந்தார்; அத் தெளிவை உலகுக்கு அறிவுறுத்தினார்.
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞானவெள் ளச்சுடர் மூர்த்தி...
அமைவுடை அறநெறி ... ... ... ...
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.
என்னுள் கலந்தவன் ... ... ... ...
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே.
எப்பொருளுந் தானாய்...
வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண்டிசையும் தவிராது
நின்றான் தன்னை...
எங்குவந் துறுகோ என்னையாள் வானே
ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேனும்
அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலன் இறந்ததும் நீயே.
பூவைகள் போல்.................
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் ..........
துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
யாய் உல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல்
வான் சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களு மாகிப் பலபல
மாய மயக்குக்களால்
இன்புறும் இவ்விளையாட்டையானைப்
பெற்றேதும் அல்லலிலனே.
யானுநீ தானே யாவதோ மெய்யே
அருநர கவையும் நீ ஆனால்
வானுயர் இன்பம் எய்திலென் மற்றை
நரகமே எய்திலென் எனிலும்
யானுநீ தானாய்த் தெளிதொறும்
நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்
அருளுநின் தாள்களை எனக்கே
என வரூஉம் ஆழ்வார் மொழிகளை உற்று நோக்குக.
சுவர்க்க நரகத்திலும் பரம்பொருள் இருக்கிறது என்று ஆழ்வார் விளக்கியுள்ளார், இவ்வாறு இறையின் சர்வ வியாபகத்தை வேறு எவரே விளக்கினர்! எங்கு முள்ள பரம்பொருளைத் தெளிந்தவர்க்குத் தனிப்பட்ட சுவர்க்கம் ஏது? தனிப்பட்ட நரகம் ஏது? அவர்க்கு எல்லாம் ஆண்டவன் இடம்; எல்லாம் இன்ப உலகம்.
'பரம்பொருள் எங்கும் உள்ளது' என்னும் உண்மையை ஆன்றோர் பல துறைகளிலும் உலகுக்கு விளக்கிப் போந்தனர். அந் நுட்பம் பலப்பல கதைகள் வாயிலாகவும் விளக்கப்பட்டது. அக் கதைகளுள் சிறந்த ஒன்று பிரகலாதனைப் பற்றியது. பிரகலாதன் கதையால் விளங்குவது என்னை? பரம்பொருள் எங்கும் உள்ளது என்பது அக் கதையால் விளங்குவது. இதனை ஆழ்வார் பலவிடங்களில் விளம்புகிறார். ஈண்டைக்கு ஒரு திருப்பாட்டுச் சாலும்.
எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.
'பரம்பொருள் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பின் இருக்க. அதனால் உலகுக்கு என்ன பயன்? அதனை ஏன் வலியுறுத்தவேண்டும்' என்று சிலர் கருதலாம். இது சிந்திக்கத்தக்கதே. சிந்திக்கச் சிந்திக்கப் பல நுட்பங்கள் விளங்கும். அவைகளில் ஒன்றை மட்டும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடுவது நலம்.
வாழ்வு இருவிதம். ஒன்று நல்வாழ்வு; மற்றொன்று அஃது அல்லாதது. நல்வாழ்வு எது? மற்றைய வாழ்வு எது? அமைதியுற்ற வாழ்வு நல்வாழ்வு என்றும் அமைதியற்ற வாழ்வு நல்வாழ்வு அல்லாதது என்றும் சுருங்கச் சொல்லலாம். வாழ்வில் பல நலங்கள் பொருந்தியிருப்பினும், அதன்மாட்டு அமைதி ஒன்றில்லையேல், அது நல்வாழ்வாகாது. நல்வாழ்வுக்கு அறிகுறி அமைதியேயாகும்.
அமைதி வாழ்வுக்கு சகோதர நேயம் இன்றியமையாதது. சகோதர நேயம் எப்படி உண்டாகும்? சகோதர நேயம் என்னும் பெயரால் உலகில் எத்துணையோ அமைப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றால் சகோதர நேயம் வளர்கிறதா? அமைதி வாழ்வு நிலைக்கிறதா? இல்லையே.
தற்கால உலகை நோக்கினால் உண்மை விளங்கும். தற்கால உலகை நோக்குவோம். அஃது எக்காட்சி வழங்குகிறது? பொய், பொறாமை, கொலை, கொள்ளை, போர் முதலியவற்றையல்லவோ அது வழங்குகிறது? இதற்குக் காரணம் என்னை? அமைதிக்குரிய சகோதர நேயம் பெருகிப் பரவாமையேயாகும்.
அமைதிக்கெனச் சட்டங்கள் செய்யப்படுகின்றன; ஆயுதங்கள் தாங்கப்படுகின்றன; வேறுபல கட்டுகளும் வகுக்கப்படுகின்றன. இவற்றால் அமைதி நிலவுகிறதா? அச்சத்தால் ஒருபோதும் உண்மை அமைதி நிலவாது. சகோதர நேயம் ஒன்றே உண்மை அமைதியை நிலைபெறுத்தவல்லது.
சகோதர நேயம் என்பது தன்னுயிரைப் போல மன்னுயிரைக் கருதும் அன்பேயாகும். அன்பை - நாடு, மொழி, நிறம், இனம், மதம், இன்னபிற கூட்டுதல் அரிது. ஏன்? நாடு, மொழி முதலியன எல்லைக்கு உட்பட்டன. எல்லைக்குட்பட்ட கண்டப்பொருள் கட்டற்ற பரந்த அன்பை எங்ஙனங் கூட்டும்? அவைகளால் ஒவ்வோர் அளவில் கட்டுப்பட்ட அன்பு கூடலாம், கட்டுப்பட்ட அன்பால் அமைதி நிலை பெறாது. ஒருவேளை அதனால் கலாம் விளையினும் விளையும்.
பரந்த அன்புக்கு, எல்லையற்ற - கட்டற்ற - ஒன்றன் தொடர்பு தேவை. எல்லையற்ற - கட்டற்ற - ஒன்று எங்குமுள்ள இறையன்றிப் பிறிதில்லை. இறையுடன் தொடர்பு கொள்ளக் கொள்ள, அத் தொடர்பு, தன்னுயிரிலும் மற்ற உயிர்களிலும் உள்ளது ஒன்றே என்னும் உணர்வே நல்கும். எல்லையற்று - கட்டற்று - எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அகண்டத்தில் அன்பு கொண்டவரிடம், தம்முயிரைப்போல் மற்ற உயிர்களைக் கருதும் சகோதர நேயம் தானே பிறக்கும்.
பராபரம் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து நிற்றலால், அதற்கும் உயிர்களெல்லாம் உறுப்புக்களாகின்றன; ஓருறுப்புக்குத் துன்பம் நேரின், அத் துன்பம் மற்ற உறுப்புக்கட்கும் நேர்தல் இயல்பு. தன் உறுப்புக்களில் எதற்காவது கேடு சூழ அறிவுடைய எவனாதல் நினைப்பனோ? எவனும் நினையான். எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்கொண்ட ஒருவன் பிறருக்குத் தீங்கு செய்தல் தனக்கே தீங்கு செய்தல் ஆதலை நன்கு உணர்வன். ஆகவே, எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்பு கொள்வதால், சகோதர நேயம் பிறக்கும் என்பது தெளியற்பாலது. அதனால் உண்மை அமைதி நிலவும்.
'சகோதர நேயத்தால் உலகில் அமைதி நிலைபெறுதல் வேண்டும்' என்னும் பெருங்கருணையால், ஆன்றோர், பராபரம் எங்குமுள்ள உண்மையைப் பலபடியாக உலகுக்கு உணர்த்தினர். இப் பேருணர்வு பெருகுதற்குரிய அரசியல், கல்வி, தொழில் முதலியன உலகுக்குத் தேவை.
ஆழ்வார் எங்குமுள்ள பரம்பொருளை உணர்ந்து, அதனுடன் ஒன்றித் தாம் அற்று, அதுவாய் நின்றார். அவர் தம்மையும் பிறவற்றையும் அதுவாக் கண்டார். இந்நிலை பெற்ற ஒருவர் எவ்வுயிரைத் தமக்கு வேறாகக் கருதுவர்? அங்ஙனங் கருதற்கு இடம் ஏது? இப் பெருநிலை பெறுவோரே சகோதர நேயம் என்னும் ஜீவகாருண்யச் செல்வராவர்.
யானே என்னை ... ... ...
யானே நீஎன் னுடைமையும் நீயே...
என்னை முற்றும் உயிருண்டு என்மாய
ஆக்கை இதனுள் புகுந்து
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான் ... ...
இன்றென்னைப் பொருளாக்கித்
தன்னைஎன் னுள்வைத்தான்... ...
மாயம் செய்யேல் ... ...
நேசம்செய்து உன்னோடு என்னை
உயிர்வே றின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் ... ...
ஊனில் வாழ் உயிரே... ...
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்... ...
எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.
பற்ப நாபன்... ... ...
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம்...
உணர்வி லும்பர் ... ... ... யானும் தானா யொழிந்தேனே.
என்னுடைக் கோவலனே...
உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு...
என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை...
தாள்களை எனக்கே...
தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ... ...
ஆறெனக்கு... ... ... எனதாவியும் உனதே...
ஏகமூர்த்தி... ... ... உன்
ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.
மாயனென்... ... ...
காயமும் சீவனுந் தானே...
'எல்லாங் கடவுள்' என்று ஆழ்வார் மனமார வாயாரப் பாடியுள்ளார். அந் நிலையைப் பலப்பல விதமாக அவர் பாடிப்பாடி மகிழ்கிறார். அவ்வாறு பாடுவதில் அவர்க்குச் சலிப்புத் தோன்றுவதில்லை. ஓரிடத்தில் அவர் - உண்ணும் பொருள் - தின்னும் பொருள் - முதலியனவும் கடவுள் என்று அருளியுள்ளார்.
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்
றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே
கண்கள்நீர் மல்கி
என்று ஆழ்வார் கடவுள் உறவு காட்டுதல் காண்க. உண்ணுஞ்சோறும் பருகும் நீரும் கடவுளாம்! மயிர் சிலிர்க்கிறது. எம் பெருமக்கள் நிலை என்னே! என்னே! அந்நிலையை எண்ணி எண்ணி அழுகிறேன். 'உண்ணும்' 'பருகும்' என்னுஞ் சொற்கள் என் ஊனை - என் உயிரை - நெகிழச் செய்கின்றன. ஆழ்வார் கடவுளாகக் கொள்ளாத பொருளும் உண்டோ? அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள்.
எல்லாங் கடவுள் மயமாக உள்ள உண்மைக் காட்சி எப்பொழுது புலனாகும்? இதற்குரிய வழிகள் பல உண்டு. அவைகளுள் ஈண்டு குறிக்கத் தக்கது ஒன்று. அது, புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு ஒழிதல் வேண்டும் என்பது. புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு உள்ள மட்டும் யாண்டுங்கடவுள் உண்மையைக் காண்டல் அரிது. கடவுள் உண்மையை யாண்டுங் காணாத வரை, உயிர்கள் ஐம்புல வேடருகு இரையாகிச் சகோதர நேயத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அகக்கண் திறக்கப்பெறின், ஐம்புலன்கள் நல்வழியில் நின்று, சகோதர நேய ஊற்றைத் திறக்கும். அகவிளக்கத்தால் 'அகமே புறம்' என்னும் உண்மை விளங்கும்.
புறம் அகம் என்னும் வேற்றுமை உணர்வு கெடப் பெற்ற மெய்யறிஞர்க்கு எல்லாம் கடவுள் மயமாகப் புலப்படுதல் இயல்பு. அவ்வறிஞர்க்கு இன்பமுமிலை - துன்பமுமில்லை. சுவர்க்கமுமில்லை - நரகமுமில்லை; செல்வமுமில்லை - வறுமையுமில்லை. அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள். இந் நிலையை ஆழ்வார் பெற்றமையால், அவர் எவ்வுயிரிலும் இறையைக் காணும் ஜீவகாருண்யச் செல்வரானார்.
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும் - என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.
மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்
யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை
நாடோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்
அல்ல புறத்தினுள்ளும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய்
நின்னை அறிந்தறிந்தே.
கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
... ... ...
இத்திருமொழிகளின் நுட்பத்தை உன்னுக.
அமைதி வாழ்வுக்குரிய சகோதர நேயத்துக்குத் தமிழ் நாட்டில் நம்மாழ்வார் எவ் விதை விதைத்தார்? 'பரம்பொருள் எங்கும் உள்ளது' என்னும் விதையை ஆழ்வார் விதைத்தார். அவ் விதையினின்றும் எழுந்து வளர்ந்து ஓங்கி அன்பு மரம் நிற்கிறது. அதன் தண்ணிழலில் அமர்ந்து இன்பத்தை நுகர வேண்டுவது மக்கள் கடமை.
***
திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Wednesday, September 23, 2009
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 2. கடவுள் - வித்து
2. கடவுள் - வித்து
கடவுளைப்பற்றி உலகில் எழுந்துள்ள கொள்கைகள் பலப்பல. அவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாயிருப்பது ஒன்றே. அவ்வொன்றை மக்கள் தங்கள் பன்மையுணர்வால் பலவாறு ஏற்றுப் போற்றி வாழ்கிறார்கள். பன்மை என்பது ஒருமையினின்றும் பிறப்பது. ஒருமை இன்றேல் பன்மை இல்லை. பன்மைக்கு வித்து ஒருமை.
உலகம் அவன் என்றும், அவள் என்றும், அஃது என்றும் சுட்டி உணரப்படுவது. சுட்டுப் பொருளின் இயல் மாறுதல் உறுவது. மாறுதலின்றி என்றும் ஒரு பெற்றியதாய் இருப்பது அதன் இயல் அன்று.
உலகை உற்று நோக்குவோம். உலகிலுள்ள ஒவ்வொன்றும் மாறுதலுறுவதா யிருப்பதைக் காண்கிறோம். எல்லாம் மாறுதலுறுவனவாயின், அவற்றின் மாறுதல் நிகழ்ச்சிக்கு ஒரு நிலைக்களன் வேண்டுமன்றோ? நிலைக்களன் ஒன்றில்லையேல், எதுவும் ஒழுங்கு முறையில் இயங்கி மாறுதலுறாது. ஆகவே, ஒரு நிலைக்களன் இன்றியமையாததாகிறது.
அந் நிலைக்களன், தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததாய், என்றும் ஒரு பெற்றியதாய், எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் - தாரகமாய் - இருத்தல் வேண்டும். இல்லையேல் அது நிலைக்களன் ஆகாது.
தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் உடையதை என்னென்று கூறுவது? தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததை என்னென்று கூறுவது? முன்னையதை சடம் அல்லது மாயை என்றும், பின்னையதைச் சித் (அறிவு) அல்லது கடவுள் என்றும் முன்னோர் கூறிப் போந்தனர்.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து இருக்கிறது. அதுபோல எல்லாவற்றிற்கும் ஒரு வித்து இருத்தல் வேண்டும்; வேண்டுவது இயல்பு. அவ் வித்து, எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும். அது மாறுதல் உடையதாயின், அதற்கொரு வித்துத் தேவையாகும். ஆதலால், எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும் என்பது உணரற்பாலது.
மாறுதல் உடையது சடம் என்றும், மாறுதல் இல்லாதது சித் என்றும் மேலே சொல்லப்பட்டன. மாறுதலுடைய சடத்துக்கு, மாறுதல் இல்லாத சித் வித்தாயிருத்தல் இயல்பு. சடவுலகமெல்லாம் தோன்றி நின்று ஒடுங்குதற்கு வித்தாயிருப்பது சித் என்று தெளிக. அச் சித் என்னும் வித்தினின்றும் எல்லாம் தோன்றும்; அதனிடை எல்லாம் நிற்கும்; அதனுள் எல்லாம் ஒடுங்கும்.
எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்தற்கு மக்கள் முயலுதல் வேண்டும். அம் முயற்சிக்கென்று மக்கள் பிறவியும், வாழ்வும், பிறவும் இயற்கையில் அமைந்திருக்கின்றன. அவ்வியற்கை அமைப்பு வழிநின்று மக்கள் ஒழுகினால், அவ்வொழுக்கம் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்த்தும். ஆனால் அவ்வழி நில்லாது, எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை மட்டும் எளிதில் உணர்தல் அருமை. அருமை என்று அஞ்ச வேண்டுவதில்லை. அருமையை எளிமையாக்க இயற்கை அன்னை முனைந்து நிற்கிறாள். அவள் வழி நிற்க மக்கள் முயல்வார்களாக.
தமிழ் நாட்டிற்றோன்றிய நம்மாழ்வார், உலகு உய்யத் தோன்றிய குருமூர்த்திகளுள் ஒருவர். அவர் இயல்பால் மெய்யுணர்வு பெற்று, எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள வித்தினை உணர்ந்தார்; உணர்ந்தவாறு அதை உலகுக்கு உணர்த்தினார். இது பற்றி அவர் பொழிந்த அமுத மொழிகள் பல. அவற்றுள் சில வருமாறு:
ஊழிதோ றூழி... ... ...
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி......
- திருவாசிரியம் – 4
தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் - தானே......
வைப்பாம் ... ...
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன்...
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்...
ஒக்கலை வைத்து ... ...
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்...
ஓவாத் துயர்ப்பிறவி ... ...
மூவாத் தனிமுதலாய் ...
சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் ...
எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை ஆழ்வார் உணர்ந்து, அவ்வுணர்வால் தமிழ் நாட்டை ஓம்பினார். அவ்வாழ்வார் நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? அஃது, ஆழ்வார் உணர்ந்து உணர்த்திய வித்தின் மீது கருத்துச் செலுத்துகிறதா? இல்லை. அது போலிகள் மீது கருத்திருத்தித் தன் வாழ்வைக் குலைத்து வருகிறது. இந்நாளில் ஆழ்வார் அமிழ்தைப் பருகத் தமிழ்நாடு வேட்கை கொண்டு எழுவதாக.
***
திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...
கடவுளைப்பற்றி உலகில் எழுந்துள்ள கொள்கைகள் பலப்பல. அவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாயிருப்பது ஒன்றே. அவ்வொன்றை மக்கள் தங்கள் பன்மையுணர்வால் பலவாறு ஏற்றுப் போற்றி வாழ்கிறார்கள். பன்மை என்பது ஒருமையினின்றும் பிறப்பது. ஒருமை இன்றேல் பன்மை இல்லை. பன்மைக்கு வித்து ஒருமை.
உலகம் அவன் என்றும், அவள் என்றும், அஃது என்றும் சுட்டி உணரப்படுவது. சுட்டுப் பொருளின் இயல் மாறுதல் உறுவது. மாறுதலின்றி என்றும் ஒரு பெற்றியதாய் இருப்பது அதன் இயல் அன்று.
உலகை உற்று நோக்குவோம். உலகிலுள்ள ஒவ்வொன்றும் மாறுதலுறுவதா யிருப்பதைக் காண்கிறோம். எல்லாம் மாறுதலுறுவனவாயின், அவற்றின் மாறுதல் நிகழ்ச்சிக்கு ஒரு நிலைக்களன் வேண்டுமன்றோ? நிலைக்களன் ஒன்றில்லையேல், எதுவும் ஒழுங்கு முறையில் இயங்கி மாறுதலுறாது. ஆகவே, ஒரு நிலைக்களன் இன்றியமையாததாகிறது.
அந் நிலைக்களன், தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததாய், என்றும் ஒரு பெற்றியதாய், எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் - தாரகமாய் - இருத்தல் வேண்டும். இல்லையேல் அது நிலைக்களன் ஆகாது.
தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் உடையதை என்னென்று கூறுவது? தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததை என்னென்று கூறுவது? முன்னையதை சடம் அல்லது மாயை என்றும், பின்னையதைச் சித் (அறிவு) அல்லது கடவுள் என்றும் முன்னோர் கூறிப் போந்தனர்.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து இருக்கிறது. அதுபோல எல்லாவற்றிற்கும் ஒரு வித்து இருத்தல் வேண்டும்; வேண்டுவது இயல்பு. அவ் வித்து, எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும். அது மாறுதல் உடையதாயின், அதற்கொரு வித்துத் தேவையாகும். ஆதலால், எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும் என்பது உணரற்பாலது.
மாறுதல் உடையது சடம் என்றும், மாறுதல் இல்லாதது சித் என்றும் மேலே சொல்லப்பட்டன. மாறுதலுடைய சடத்துக்கு, மாறுதல் இல்லாத சித் வித்தாயிருத்தல் இயல்பு. சடவுலகமெல்லாம் தோன்றி நின்று ஒடுங்குதற்கு வித்தாயிருப்பது சித் என்று தெளிக. அச் சித் என்னும் வித்தினின்றும் எல்லாம் தோன்றும்; அதனிடை எல்லாம் நிற்கும்; அதனுள் எல்லாம் ஒடுங்கும்.
எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்தற்கு மக்கள் முயலுதல் வேண்டும். அம் முயற்சிக்கென்று மக்கள் பிறவியும், வாழ்வும், பிறவும் இயற்கையில் அமைந்திருக்கின்றன. அவ்வியற்கை அமைப்பு வழிநின்று மக்கள் ஒழுகினால், அவ்வொழுக்கம் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்த்தும். ஆனால் அவ்வழி நில்லாது, எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை மட்டும் எளிதில் உணர்தல் அருமை. அருமை என்று அஞ்ச வேண்டுவதில்லை. அருமையை எளிமையாக்க இயற்கை அன்னை முனைந்து நிற்கிறாள். அவள் வழி நிற்க மக்கள் முயல்வார்களாக.
தமிழ் நாட்டிற்றோன்றிய நம்மாழ்வார், உலகு உய்யத் தோன்றிய குருமூர்த்திகளுள் ஒருவர். அவர் இயல்பால் மெய்யுணர்வு பெற்று, எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள வித்தினை உணர்ந்தார்; உணர்ந்தவாறு அதை உலகுக்கு உணர்த்தினார். இது பற்றி அவர் பொழிந்த அமுத மொழிகள் பல. அவற்றுள் சில வருமாறு:
ஊழிதோ றூழி... ... ...
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி......
- திருவாசிரியம் – 4
தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் - தானே......
வைப்பாம் ... ...
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன்...
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்...
ஒக்கலை வைத்து ... ...
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்...
ஓவாத் துயர்ப்பிறவி ... ...
மூவாத் தனிமுதலாய் ...
சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் ...
எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை ஆழ்வார் உணர்ந்து, அவ்வுணர்வால் தமிழ் நாட்டை ஓம்பினார். அவ்வாழ்வார் நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? அஃது, ஆழ்வார் உணர்ந்து உணர்த்திய வித்தின் மீது கருத்துச் செலுத்துகிறதா? இல்லை. அது போலிகள் மீது கருத்திருத்தித் தன் வாழ்வைக் குலைத்து வருகிறது. இந்நாளில் ஆழ்வார் அமிழ்தைப் பருகத் தமிழ்நாடு வேட்கை கொண்டு எழுவதாக.
***
திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Sunday, September 20, 2009
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1. தோற்றுவாய்
1. தோற்றுவாய்
தமிழ் நாடு எது? 'வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து' என்று ஆசிரியர் பனம்பாரனார் எல்லையிட்டுக் கூறிய நிலப்பரப்பா? அன்று. ஆசிரியர் பனம்பாரனார் நிலப்பரப்பை மட்டும் 'தமிழ் கூறு நல்லுலகத்து' என்று கூறினாரில்லை. அவர் அந்நிலப் பரப்பில் வாழும் மக்கள் வழக்க ஒழுக்கங்கள் முதலியவற்றை உளப்படுத்தியே 'தமிழ்கூறு நல்லுலகத்து' என்றார். எனவே, தமிழ் நாடென்பது, தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் வெறும் நிலப்பரப்பு மாத்திரமன்று. அம் மக்களின் நடை உடைகள், வழக்க ஒழுக்கங்கள், கல்வித் துறைகள், தொழில் முறைகள், அரசியல் நெறிகள், இன்னோரன்ன பல சேர்ந்த ஒன்றே தமிழ் நாடென்பது. நாடு என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. புராண நூல்கள் நாட்டுப்படலம் நவிலுமிடத்து, வெறும் நிலப்பரப்பை மட்டும் நவிலாது, மக்கள் வழக்க ஒழுக்கங்கள், தொழின் முறைகள் முதலியவற்றைக் கிளந்து நவில்வது கருதற்பாலது. ஒவ்வொரு நாட்டவர்க்குச் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருப்பது போலத் தமிழ் மக்கட்குஞ் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருக்கின்றன. அவைகளைகக் கொண்ட ஒன்றே தமிழ் நாடாகும்.
தமிழ் நாட்டைக் கோலிய அறிஞர் பலர்; அன்பர் பலர்; மறவர் பலர்; மன்னர் பலர்; பாவலர் பலர்; தொழிலாளர் பலர். இவர்களால் கட்டப்பெற்ற தமிழ்நாட்டைப் பின்னர் அழகு செய்தார் இரு கூட்டத்தார். அவருள் ஒரு கூட்டத்தார் நாயன்மார் எனப்படுவர்; மற்றொரு கூட்டத்தார் ஆழ்வார் எனப்படுவர். முன்னவர் கடவுளைச் சிவமாகப் போற்றியவர்; பின்னவர் ஆண்டவனைத் திருமாலாகத் தொழுதவர். 'ஆழ்வார்' என்ற சொல்லுக்கு ஆண்டவன் அருள் வெள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பவர் என்பது பொருள்.
ஆழ்வார் பன்னிருவர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தமிழ் நாட்டிலே, பொருநை (தாமிரபரணி) வளஞ் செய்யுந் திருநெல்வேலியிலே, திருக்குருகூரிலே, வேளாள மரபிலே தோன்றினவர். திருக்குருகூர் என்னும் பதி ஆழ்வார் திருநகரி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. நம்மாழ்வார்க்குச் சடகோபர், காரிமாறன், பராங்குசர் முதலிய பெயர்களுமுண்டு. அவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன.
நம்மாழ்வார் காலத்தைப் பலர் பலவாறு பகர்கிறார். கலியுகம் பிறந்த நாற்பத்து மூன்றாம் நாள் நம்மாழ்வார் அவதரித்தார் என்று சம்பிரதாய நூல்கள் நுவல்கின்றன. இதைச் சரித்திர ஆராய்ச்சியாளர் ஏற்பதில்லை. ஆராய்ச்சியாளரும் நம்மாழ்வார் காலத்தைப் பற்றி இன்னும் ஒரு தலையான முடிவிற்கு வந்தாரில்லை. சரித்திரத்தார் இதுகாறுஞ் செய்துள்ள ஆராய்ச்சிகளை நோக்குழி, ஆழ்வார், நான்காம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தினர் என்பது பெறப்படுகிறது.
ஆழ்வாருள் குருகூர்ப்பெரியார் நம்மாழ்வார் என்னுந் திருப்பெயர் பெற்றிருக்கிறார். அவர் திருவாக்கினின்றும் ஒழுகிய தமிழ் அமிழ்தும், அதன் கருத்துச் சுவையும் அவர்க்கு அத் திருநாமத்தை நல்கின எனலாம். அறிவிற் சிறந்த எவரும் - அன்பிற் சிறந்த எவரும் - ஆழ்வாரை 'நம் அறிஞர்', 'நம் அன்பர்' என்று போற்றுவர். அச்சான்றோர் திருவாக்கை ஓதும்பேறு பெறுங் கிறுஸ்துவர், மகமதியர், பௌத்தர், சமணர், சைவர், வைணவர் முதலிய எல்லாச்சமயத்தவரும், அவரை, 'நம் சமயத்தவர்', 'நம் சமயத்தவர்' என்று கொள்வர். பாவலர் சடகோபர் திருவாக்கை நோக்குவாராயின், அவரை 'நம் பாவலர்' என்று பாடுவர். தத்துவ ஆராய்ச்சியினர், அவரை 'நம் தத்துவ மூர்த்தி' என்று தழுவுவர். காய்தல் உவத்தல் அகற்றி, உண்மை ஆராயப்புகும் எவரும், மாறனாரை 'நம்மவர்' என்று வழிபடுவர். உலகத்துள்ள அனைவரும் 'நம்மவர்' என்று ஆழ்வாரைப் போற்றும் பொருட்டு, எம்பெருமான் 'நம்மாழ்வார்' என்று அவரை ஆட்கொண்டார் போலும்! நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ, ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தார்க்கோ மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டார்க்கும், எல்லாச் சமயத்தார்க்கும், எல்லா இனத்தார்க்கும் உரியவர்.
எல்லாரும் 'நம் ஆழ்வார்' என்று போற்றும் ஒரு பெரியாரை அளித்த தமிழ் நாட்டை மனத்தால் நினைக்கிறேன்; வாயால் வழுத்துகிறேன்; கையால் தொழுகிறேன். தமிழ் நாடளித்த பெருவாழ்வை, 'என் ஆழ்வார்' என்று வணங்கி, என்னளவில் இன்புறாது, உலகவரையும் உளப்படுத்தி, அவரோடு 'நம் ஆழ்வார்' என்று வணங்குகிறேன்.
நம்மாழ்வார் தமிழ் நாட்டை ஓம்பக்கொண்ட முறைகள் பெரிதும் போற்றத்தக்கன. நம்மாழ்வார் போன்றோர் கொண்ட முறைகளின் திறத்தால் இன்னும் தமிழ் நாடு அழிவுறாமலிருக்கிறது. உலகத்தில் எத்துணையோ நாடுகள் தோன்றி நின்று அழிந்தன. இந்நாளில் மிகச் செல்வாக்குப் பெற்றுள்ள சில நாடுகளும் அழிவுறுங் குறிகள் தோன்றிவருகின்றன. அறிவால் - அன்பால் - இறையருள் நாடிக் கோலப்படும் நாடுகள் வீழ்ந்துபடல் அரிது. விலங்கியல்பால் - மூர்க்கத்தால் - வாணிபத்தால் - அரசியலால் - கட்டப்படும் நாடுகள் எளிதில் வீழ்ந்துபடும். நமது தமிழ்நாடு எத்துணையோ இடர்களுக்கு உட்பட்டும் இன்னும் வீழ்ந்துபடாமல் நிலவி வருகிறது. இதற்குக் காரணமென்னை? காரணம், தமிழ்மக்கள் அன்புக் கால் கொண்டு, அறிவுச் சுவரெழுப்பி, இன்பத்தமிழ் நிலையங் கோலினமையாகும். அந் நிலையத்தில் அருள்மனங்கமழ்ந்த வண்ணமிருக்கிறது. இவற்றால் தமிழ்நாடு கட்டப்பட்டமையால், அஃது இன்னுங் குலையாமல் நிலவா நிற்கிறது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழ்நாட்டை ஓம்பினவருள் ஒருவர் நம் ஆழ்வார்.
நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையை ஆராய்ந்தால், அதனிடை அவர் கொண்ட முறைகள் புலப்படும். அவர் தமிழ்நாட்டை இறையுணர்வால், அன்பால், இன்பால், பொதுமையால், அழகுப் பாக்களால், இன்ன பிறவற்றால் ஓம்பினர். இனி அம் முறைகள் மீது கருத்துச் செலுத்துவோம்.
***
திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...
தமிழ் நாடு எது? 'வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து' என்று ஆசிரியர் பனம்பாரனார் எல்லையிட்டுக் கூறிய நிலப்பரப்பா? அன்று. ஆசிரியர் பனம்பாரனார் நிலப்பரப்பை மட்டும் 'தமிழ் கூறு நல்லுலகத்து' என்று கூறினாரில்லை. அவர் அந்நிலப் பரப்பில் வாழும் மக்கள் வழக்க ஒழுக்கங்கள் முதலியவற்றை உளப்படுத்தியே 'தமிழ்கூறு நல்லுலகத்து' என்றார். எனவே, தமிழ் நாடென்பது, தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் வெறும் நிலப்பரப்பு மாத்திரமன்று. அம் மக்களின் நடை உடைகள், வழக்க ஒழுக்கங்கள், கல்வித் துறைகள், தொழில் முறைகள், அரசியல் நெறிகள், இன்னோரன்ன பல சேர்ந்த ஒன்றே தமிழ் நாடென்பது. நாடு என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. புராண நூல்கள் நாட்டுப்படலம் நவிலுமிடத்து, வெறும் நிலப்பரப்பை மட்டும் நவிலாது, மக்கள் வழக்க ஒழுக்கங்கள், தொழின் முறைகள் முதலியவற்றைக் கிளந்து நவில்வது கருதற்பாலது. ஒவ்வொரு நாட்டவர்க்குச் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருப்பது போலத் தமிழ் மக்கட்குஞ் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருக்கின்றன. அவைகளைகக் கொண்ட ஒன்றே தமிழ் நாடாகும்.
தமிழ் நாட்டைக் கோலிய அறிஞர் பலர்; அன்பர் பலர்; மறவர் பலர்; மன்னர் பலர்; பாவலர் பலர்; தொழிலாளர் பலர். இவர்களால் கட்டப்பெற்ற தமிழ்நாட்டைப் பின்னர் அழகு செய்தார் இரு கூட்டத்தார். அவருள் ஒரு கூட்டத்தார் நாயன்மார் எனப்படுவர்; மற்றொரு கூட்டத்தார் ஆழ்வார் எனப்படுவர். முன்னவர் கடவுளைச் சிவமாகப் போற்றியவர்; பின்னவர் ஆண்டவனைத் திருமாலாகத் தொழுதவர். 'ஆழ்வார்' என்ற சொல்லுக்கு ஆண்டவன் அருள் வெள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பவர் என்பது பொருள்.
ஆழ்வார் பன்னிருவர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தமிழ் நாட்டிலே, பொருநை (தாமிரபரணி) வளஞ் செய்யுந் திருநெல்வேலியிலே, திருக்குருகூரிலே, வேளாள மரபிலே தோன்றினவர். திருக்குருகூர் என்னும் பதி ஆழ்வார் திருநகரி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. நம்மாழ்வார்க்குச் சடகோபர், காரிமாறன், பராங்குசர் முதலிய பெயர்களுமுண்டு. அவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன.
நம்மாழ்வார் காலத்தைப் பலர் பலவாறு பகர்கிறார். கலியுகம் பிறந்த நாற்பத்து மூன்றாம் நாள் நம்மாழ்வார் அவதரித்தார் என்று சம்பிரதாய நூல்கள் நுவல்கின்றன. இதைச் சரித்திர ஆராய்ச்சியாளர் ஏற்பதில்லை. ஆராய்ச்சியாளரும் நம்மாழ்வார் காலத்தைப் பற்றி இன்னும் ஒரு தலையான முடிவிற்கு வந்தாரில்லை. சரித்திரத்தார் இதுகாறுஞ் செய்துள்ள ஆராய்ச்சிகளை நோக்குழி, ஆழ்வார், நான்காம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தினர் என்பது பெறப்படுகிறது.
ஆழ்வாருள் குருகூர்ப்பெரியார் நம்மாழ்வார் என்னுந் திருப்பெயர் பெற்றிருக்கிறார். அவர் திருவாக்கினின்றும் ஒழுகிய தமிழ் அமிழ்தும், அதன் கருத்துச் சுவையும் அவர்க்கு அத் திருநாமத்தை நல்கின எனலாம். அறிவிற் சிறந்த எவரும் - அன்பிற் சிறந்த எவரும் - ஆழ்வாரை 'நம் அறிஞர்', 'நம் அன்பர்' என்று போற்றுவர். அச்சான்றோர் திருவாக்கை ஓதும்பேறு பெறுங் கிறுஸ்துவர், மகமதியர், பௌத்தர், சமணர், சைவர், வைணவர் முதலிய எல்லாச்சமயத்தவரும், அவரை, 'நம் சமயத்தவர்', 'நம் சமயத்தவர்' என்று கொள்வர். பாவலர் சடகோபர் திருவாக்கை நோக்குவாராயின், அவரை 'நம் பாவலர்' என்று பாடுவர். தத்துவ ஆராய்ச்சியினர், அவரை 'நம் தத்துவ மூர்த்தி' என்று தழுவுவர். காய்தல் உவத்தல் அகற்றி, உண்மை ஆராயப்புகும் எவரும், மாறனாரை 'நம்மவர்' என்று வழிபடுவர். உலகத்துள்ள அனைவரும் 'நம்மவர்' என்று ஆழ்வாரைப் போற்றும் பொருட்டு, எம்பெருமான் 'நம்மாழ்வார்' என்று அவரை ஆட்கொண்டார் போலும்! நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ, ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தார்க்கோ மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டார்க்கும், எல்லாச் சமயத்தார்க்கும், எல்லா இனத்தார்க்கும் உரியவர்.
எல்லாரும் 'நம் ஆழ்வார்' என்று போற்றும் ஒரு பெரியாரை அளித்த தமிழ் நாட்டை மனத்தால் நினைக்கிறேன்; வாயால் வழுத்துகிறேன்; கையால் தொழுகிறேன். தமிழ் நாடளித்த பெருவாழ்வை, 'என் ஆழ்வார்' என்று வணங்கி, என்னளவில் இன்புறாது, உலகவரையும் உளப்படுத்தி, அவரோடு 'நம் ஆழ்வார்' என்று வணங்குகிறேன்.
நம்மாழ்வார் தமிழ் நாட்டை ஓம்பக்கொண்ட முறைகள் பெரிதும் போற்றத்தக்கன. நம்மாழ்வார் போன்றோர் கொண்ட முறைகளின் திறத்தால் இன்னும் தமிழ் நாடு அழிவுறாமலிருக்கிறது. உலகத்தில் எத்துணையோ நாடுகள் தோன்றி நின்று அழிந்தன. இந்நாளில் மிகச் செல்வாக்குப் பெற்றுள்ள சில நாடுகளும் அழிவுறுங் குறிகள் தோன்றிவருகின்றன. அறிவால் - அன்பால் - இறையருள் நாடிக் கோலப்படும் நாடுகள் வீழ்ந்துபடல் அரிது. விலங்கியல்பால் - மூர்க்கத்தால் - வாணிபத்தால் - அரசியலால் - கட்டப்படும் நாடுகள் எளிதில் வீழ்ந்துபடும். நமது தமிழ்நாடு எத்துணையோ இடர்களுக்கு உட்பட்டும் இன்னும் வீழ்ந்துபடாமல் நிலவி வருகிறது. இதற்குக் காரணமென்னை? காரணம், தமிழ்மக்கள் அன்புக் கால் கொண்டு, அறிவுச் சுவரெழுப்பி, இன்பத்தமிழ் நிலையங் கோலினமையாகும். அந் நிலையத்தில் அருள்மனங்கமழ்ந்த வண்ணமிருக்கிறது. இவற்றால் தமிழ்நாடு கட்டப்பட்டமையால், அஃது இன்னுங் குலையாமல் நிலவா நிற்கிறது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழ்நாட்டை ஓம்பினவருள் ஒருவர் நம் ஆழ்வார்.
நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையை ஆராய்ந்தால், அதனிடை அவர் கொண்ட முறைகள் புலப்படும். அவர் தமிழ்நாட்டை இறையுணர்வால், அன்பால், இன்பால், பொதுமையால், அழகுப் பாக்களால், இன்ன பிறவற்றால் ஓம்பினர். இனி அம் முறைகள் மீது கருத்துச் செலுத்துவோம்.
***
திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...
Labels:
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,
திரு.வி.க.
Subscribe to:
Posts (Atom)